General Tamil

7th Tamil Unit 7 Questions

61) தமது ஈடுபாட்டை 1000 தமிழ்பாட்டில் வெளியிட்ட ஆழ்வார் யார்?

A) பேயாழ்வார்

B) பூதத்தாழ்வார்

C) ஆண்டாள்

D) நம்மாழ்வார்

விளக்கம்: நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான ஆழ்வார் திருநகரி பூர்வத்தில் திருக்குருகூர் எனப்பட்டது. நம்மாழ்வார் தமது ஈடுபாட்டை ஆயிரம் தமிழ்ப்பாட்டில் (திருவாய்மொழியில்) வெளியிட்டார். இது தமிழுக்குக் கிடைத்த யோகம்.

62) முத்தொள்ளாயிர ஆசிரியர் எத்தனை வருஷத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர்?

A) சுமார் 200 வருடம்

B) சுமார் 300 வருடம்

C) சுமார் 2000 வருடம்

D) சுமார் 3000 வருடம்

விளக்கம்: சுமார் 2000 வருஷத்துக்கு முன்னிருந்து ஓரு பெருங்கடலின் முத்தொள்ளாயிர ஆசிரியர். அவர், மேற்கே ரோமாபுரி, கிரேக்கதேசம் முதல் கிழக்கே சைனா வரை கொற்கையிலிருந்து முத்து வணிகம் நடைபெற்ற செய்தியை பாடலாய் பாடினார்.

63) தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்?

A) உமறுப்புலவர்

B) சீதக்காதி

C) நமசிவாயப் புலவர்

D) கடிகைமுத்துப் புலவர்

விளக்கம்: காயல்பட்டணத்தில் 250 வருஷத்துக்கு முன் சீதக்காதி என்ற பெரிய வணிகர் இருந்தார். அவர் தமிழ்ப்புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்தார்.

64) முற்காலத்திய திருநெல்வேலிக்கு_______என்னும் பெயர் இருந்துள்ளது?

A) வேணுவனம்

B) மூங்கில்காடு

C) நெல்லை

D) A மற்றும் B

விளக்கம்: முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில்காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டருக்கலாம் எனவும் கருதுவர்.

65) “பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

A) கடிகைமுத்துப்புலவர்

B) நமசிவாயப் புலவர்

C) சீதக்காசி

D) பிள்ளைப்பெருமாள்

விளக்கம்: புவலர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்த வள்ளல் சீதக்காதியின் இறப்பை அறிந்ததும் நமசிவாய புலவர் “பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில் நாடாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக் கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச் சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே” என்று அலறுகின்றார்.

66) “திருப்புகழ்”-யை பாடியவர் யார் ?

A) அருணகிரிநாதர்

B) அண்ணாமலையார்

C) அழகிய சொக்கநாதர்

D) திருஞான சம்பந்தர்

விளக்கம்: திருச்செந்தூரைச் சேர்ந்த அருணகிரிநாதர் திருப்புகழை பாடியுள்ளார். இவர் ஏரிநீர் நந்தவனங்களில் கட்டிக் கிடப்பதால் சேல்மீன்கள் துள்ளிக் குதிக்கவும் பூஞ்செடி கொடிகளையே அழிக்கவும் தலைப்பட்டன என்று பாடியுள்ளார்.

67) காவடிச் சிந்தை பாடியவர் யார்?

A) அருணகிரிநாதர்

B) அண்ணாமலையார்

C) அழகிய சொக்கநாதர்

D) திருஞான சம்பந்தர்

விளக்கம்: இக்காலத்தில் பாடுகிற காவடிபாட்டெல்லாம் கழுகுமலை முருகன் மேல் தான். இக்காவடிச் சிந்தைப் பாடியவர் அண்ணாமலையார். காவடிப்பாட்டைக் கேட்க வேண்டுமானால், பம்பை, மேளம், ஆட்டம் எல்லாவற்றோடும் கேட்டால்தான் ரஸமும், சக்தியும் தெரியும்.

68) “வாடா” என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே என்ற பாடலைப் பாடியவர் யார்?

A) அருணகிரிநாதர்

B) அண்ணாமலையார்

C) அழகிய சொக்கநாதர்

D) திருஞான சம்பந்தர்

விளக்கம்: கழுகு மலையிலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் சங்கரன் கோவில் உள்ளது. அங்குதான் கோமதி தாயைப் பற்றி உண்மையான பக்தியும் தமிழ்ப் பண்பும் வாய்ந்த ஒரு பாடல். அதைப் பாடியவர் திருநெல்வேலி அழகிய சொக்கநாதர்.

69) திருக்கருவை வெண்பா அந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்?

A) அருணகிரிநாதர்

B) அழகிய சொக்கநாதர்

C) அண்ணாமலையார்

D) ஆசிரியர் பெயர் தெரியவில்லை

விளக்கம்: சங்கரன் கோயிலுக்கு வடக்கே 8 மைல் தூரத்தில் கருவைநல்லூர் உள்ளது. இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற 3 நூல்களைப் பாடியிருக்கிறார்

70) “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர் யார்?

A) அருணகிரிநாதர்

B) அழகிய சொக்கநாதர்

C) அண்ணாமலையார்

D) ஆசிரியர் பெயர் தெரியவில்லை

விளக்கம்: சுமார் 1300 வருஷங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் குற்றாலம் சென்றார். பின் “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடினார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!