General Tamil

7th Tamil Unit 7 Questions

71) “உற்றாரை யான்வேண்டேன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) திருஞானசம்பந்தர்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: “உற்றாரை யான்வேண்டேன் ஊர் வேண்டேன்” என்ற பாடலைப் பாடியவர் மாணிக்க வாசகர்.

72) “கயிலை எனும் வடமலைக்குத் தெற்கு மலை அம்மே” என்ற பாடலின் அசிரியர் யார்?

A) அப்பர்

B) மாணிக்கவாசகர்

C) நக்கீரர்

D) திரிகூடராசப்பக் கவிராயர்

விளக்கம்: “கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!

கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே!

துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்

துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே!”

இப்பாடலை திரிகூடராசப்பக் கவிராயர் பாடியுள்ளார். இப்பாடல் குற்றாலக் குறவஞ்சி நூலின் ஒரு பகுதியாகும். குற்றாலக் குறவஞ்சி. அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. 250 ஆண்டுகளுக்கு முன் குற்றாலத்துக்கு வந்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.

73) திருநெல்வேலிச் சீமை எனப்படுவது எது?

A) திருநெல்வேலி

B) தூத்துக்குடி

C) A மற்றும் B

D) எதுவுமில்லை

விளக்கம்: திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.

74) டி.கே. சிதம்பரநாதர் என்ன தொழில் செய்து வந்தார்?

A) காவலர்

B) சுபேதார்

C) வழக்கறிஞர்

D) நீதிபதி

விளக்கம்: டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர். தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்.

75) “இரசிகமணி” என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?

A) அண்ணாமலையார்

B) டி.கே.சிதம்பரநாதர்

C) முடியரசன்

D) மோகனரங்கன்

விளக்கம்: டி. கே. சிதம்பரநாதர் “இரசிகமணி” எனச் சிறப்பிக்கப்பட்டார். இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்தது. “திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்” என்னும் கட்டுரை எடுக்கப்பட்டது.

76) தமது வீட்டில் “வட்டத்தொட்டி” என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் யார்?

A) அண்ணாமலையார்

B) டி.கே.சிதம்பரநாதர்

C) முடியரசன்

D) மோகனரங்கன்

விளக்கம்: தமது வீட்டில் “வட்டத்தொட்டி” என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் டி.கே. சிதம்பரநாதர்

77) “குற்றால முனிவர்” என அழைக்கப்பட்டவர் யார்?

A) அண்ணாமலையார்

B) டி.கே.சிதம்பரநாதர்

C) முடியரசன்

D) மோகனரங்கன்

விளக்கம்: டி.கே.சிதம்பரநாதர், கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்த்தமிழ் ஆர்வலர் குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார்.

78) ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகு பெறச் செய்தலை எவ்வாறு அழைப்பார்?

A) உவமை அணி

B) எடுத்துக்காட்டு உவமை அணி

C) இல்பொருள் உவமை அணி

D) அணி

விளக்கம்: அணி என்னும் சொல்லுக்கு அழகு என்னும் பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.

79) ஒரு தொடரில் வரும் “போல” “போன்ற” என்பதே________ஆகும்?

A) உவமானம்

B) உவமை

C) உவமேயம்

D) உமவ உருபுகள்

விளக்கம்: மயில் போல ஆடினாள்

மீன் போன்ற கண்

இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும் கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை(மயில், மீன்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கபடும் பொருளை உவமேயம் என்பர். ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகள்

80) “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வாரைப் பொறுத்தல் தலை” – இதில் பயின்று வந்துள்ள அணி என்ன?

A) உவமை அணி

B) எடுத்துகாட்டு உவமை அணி

C) இல்பொருள் உவமையணி

D) வஞ்சப்புகழ்ச்சி அணி

விளக்கம்: ஒரு பாடலில் உவமை, உவமேயம் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும். இக்குறளிலுள்ள உவமை – பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல்

உவமை – நாம் தம்மை இகழ்ந்து பேசுவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்

உவம உருபு – போல

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!