General Tamil

7th Tamil Unit 7 Questions

51) யாரை தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி?

A) ஜி.யு.போப்

B) கால்டுவெல்

C) வீரமாமுனிவர்

D) அனைவரும்

விளக்கம்: ஜி.யு.போப், கால்டுவெல், வீராமுனிவர், போன்றோரை தமிழன்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி.

52) திருநெல்வேலி எந்த மன்னர்களோடு தொடர்புடையது?

A) சேர

B) சோழ

C) பாண்டிய

D) பல்லவ

விளக்கம்: திருநெல்வேலி பாண்டிய மன்னர்களோடு தொடர்புடையது. கொற்கை துறைமுக முத்து உலகப் புகழ் பெற்றது.

53) பொருத்துக.

அ. தண்பொருநை – 1. பொன் நாணயங்கள் உருவாக்கும் இடம்

ஆ. அக்கசாலை – 2. குற்றாலம்

இ. கொற்கை – 3. தாமிரபரணி

ஈ. திரிகூடமலை – 4. முத்துக்குளித்தல்

A) 3, 1, 4, 2

B) 3, 1, 2, 4

C) 1, 3, 4, 2

D) 1, 4, 2, 3

விளக்கம்: தன்பொருநை – தாமிரபணி

அக்கசாலை – பொன் நாணயங்கள் உருவாக்குமிடம்

கொற்கை – முத்துக்குளித்தல்

திரிகூடமலை – குற்றாலம்

54) காவற்புரை என்பதன் பொருள் என்ன?

A) காவல்காரன்

B) தானியம்

C) சிறைச்சாலை

D) குதிரைக்கொட்டில்

விளக்கம்: காவற்புரை – சிறைச்சாலை

கூலம் – தானியம்

55) தேசிகவிநாயகனார் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் எது?

A) எட்டயபுரம்

B) திருநெல்வேலி

C) கன்னியாகுமரி

D) எதுவுமில்லை

விளக்கம்: தேசியகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாகவும் ஆர்வத்தோடும் கற்ற இடம் திருநெல்வேலி. பாரதி பிறந்த இடம் எட்டையபுரம்.

56) வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) கடிகைமுத்துப் புலவர்

D) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

விளக்கம்: கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் எட்டையபுரம் இருக்கிறது. அங்கே சுமார் 200 வருஷங்களுக்கும் முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர். அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றி பல

பாடல்கள் பாடியுள்ளார்.

57) முக்கூடல் பள்ளு எந்த இடத்தைப் பற்றிய பிரபந்த நூல்?

A) திருநெல்வேலி

B) சீவலப்பேரி

C) எட்டையப்புரம்

D) தூத்துக்குடி

விளக்கம்: மணியாச்சியிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல். முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியது தான்.

58) “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி

– மலையான மின்னல் ஈழ மின்னல் சூது மின்னதே” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) முத்தொள்ளாயிரம்

B) தேவாரம்

C) குற்றாலக் குறவஞ்சி

D) முக்கூடல் பள்ளு

விளக்கம்: சாராணமாக மழை பெய்யாத இடத்தில் மழை பெய்கிறது என்றால் குடியானவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். குடியானவர்களுக்கு இடிமுழக்கம் தான் சங்கீதம், மின்னல் வீச்சுத்தான் நடனம் என்ற செய்தியைக் கூறுகிறது.

59) சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் மதுரைப் பல்கலைக்கழகத்திலிருந்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லைக்கு வந்தார்?

A) 100 ஆண்டுகள்

B) 200 ஆண்டுகள்

C) 300 ஆண்டுகள்

D) 400 ஆண்டுகள்

விளக்கம்: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மதுரைப் பக்கத்திலிரு;நது பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லைக்கு வந்தார். நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயை தரிசித்தார். ரொம்ப் ரொம்ப உரிமைப் பாராட்டி, சுவாமிக்கு சிபாரிசு செய்ய வேண்டும் என்று முரண்டுகிறார்.

60) சீவைக் குண்டத்துப் பெருமாளைப் பற்றி பாடியவர் யார்?

A) கடிகைமுத்துப் புலவர்

B) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

C) பிள்ளைப்பெருமாள்

D) நம்மாழ்வார்

விளக்கம்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்கத்திலே 18-வது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!