General Tamil

7th Tamil Unit 8 Questions

7th Tamil Unit 8 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 8 Questions With Answers Uploaded Below.

1) இறைவழிபாட்டில் சடங்கைவிட எதுவே முதன்மையானது?

A) உள்ளத் தூய்மை

B) உடல் தூய்மை

C) இறைவழிபாட்டு தல தூய்மை

D) அனைத்தும்

விளக்கம்: உள்ளத்தூய்மையொடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு. இறைவழிபாட்டில் சடங்குகளைவிட உள்ளத் தூய்மையே முதன்மையானது.

2) “வையம் கேளியா வார்கடலே நெய்யாக” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

A) பேயாழ்வார்

B) ஆண்டாள்

C) பூதத்தாழ்வார்

D) பொய்கையாழ்வார்

விளக்கம்: “வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று” – பொய்கையாழ்வார்

3) பொருத்துக

அ. உலகம் – 1. இடர்ஆழி

ஆ. வெப்பக்கதிர் வீசும் – 2. பாமாலை

இ. துன்பக்கடல் – 3. வெய்ய

ஈ. சொல்மாலை – 4. வையம்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 4, 2, 3, 1

D) 4, 2, 3, 1

விளக்கம்: உலகம் – வையம்

வெப்பக்கதிர் வீசும் – வெய்ய

துன்பக்கடல் – இடர்ஆழி

சொல்மாலை – பாமாலை

4) “சுடர் ஆழியான்” எனப் போற்றப்படும் கடவுள் யார்?

A) திருமால்

B) ஈசன்

C) பிரம்மா

D) முருகன்

விளக்கம்: ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால் என்பதே ‘சுடர் ஆழியான்’ என்பதன் பொருளாகும்.

5) பொய்கையாழ்வாரின் எண்ணத்தில் நின்று பொருத்துக

அ. பூமி – 1. சிவந்த ஒளிவீசும் சக்கரம் உடையது

ஆ. ஒலிக்கின்ற கடல் – 2. சுடர்

இ. கதிரவன் – 3. நெய்

ஈ. திருவடி – 4. அகல்விளக்கு

A) 3, 2, 4, 1

B) 2, 4, 3, 1

C) 4, 3, 2, 1

D) 1, 4, 3, 2

விளக்கம்: பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவர் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன் என்று

பொய்கையாழ்வார் உரைக்கிறார்.

6) பொய்கையாழ்வார் பிறந்த இடம் எது?

A) மதுரை

B) காஞ்சிபுரம்

C) திருச்சி

D) திருப்பதி

விளக்கம்: பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்.

7) நாலாயிர திவ்வியப் பிரபந்தம் யாரால் பாடப்பட்டது?

A) சமணர்கள்

B) ஆழ்வார்கள்

C) பௌத்தர்கள்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலை 12 ஆழ்வார்கள் சேர்ந்து உருவாக்கினார்கள். ஆழ்வார்கள் என்பவர்கள் திருமாலின் மீது பற்றுக் கொண்டவர்கள்.

8) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?

A) பொய்கையாழ்வார்

B) பேயாழ்வார்

C) பூதத்தாழ்வார்

D) ஆண்டாள்

விளக்கம்:நாலாயிரத் திவ்வியப் பிரபந்த்ததிலுள்ள முதல் திருவந்தாதியை பொய்கையாழ்வார் பாடியதாகும். இதன் முதல் பாடலே “வையம் தகளியா வார்கடலே நெய்யாக” எனத் தொடங்கும் பாடலாகும்.

9) “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக”என்ற பாடலைப் பாடியவர் யார்?

A) பொய்கையாழ்வார்

B) பேயாழ்வார்

C) பூதத்தாழ்வார்

D) ஆண்டாள்

விளக்கம்: “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரயா – நன்புஉருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத்தமிழ் புரிந்த நான்”- பூதத்தாழ்வார்

10) பொருத்துக.

அ. தகளி – 1. அறிவு

ஆ. ஞானம் – 2. திருமால்

இ. நாரணன் – 3. அகல்விளக்கு

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 1, 3, 2

D) 3, 1, 2

விளக்கம்:

தகளி – அகல்விளக்கு

ஞானம் – அறிவு

நாரணன் – திருமால்

1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!