General Tamil

7th Tamil Unit 8 Questions

11) பூதத்தாழ்வாரின் எண்ணத்தில் நின்று பொருத்துக

அ. அன்பு – 1. நெய்

ஆ. ஆர்வம் – 2. அகல்விளக்கு

இ. மனம் – 3. சுடர் விளக்கு

ஈ. ஞான ஒளி – 4. திரி

A) 2, 1, 4, 3

B) 2, 1, 3, 4

C) 4, 2, 3, 1

D) 3, 4, 2, 1

விளக்கம்: ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்றன. திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.

12) பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?

A) விழுப்புரம்

B) மாமல்லபுரம்

C) தஞ்சாவூர்

D) காஞ்சிபுரம்

விளக்கம்: பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தார்.

13) பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருவந்தாதியை இயற்றினார்?

A) முதல்

B) இரண்டாவது

C) மூன்றாவது

D) நான்காவது

விளக்கம்: பூதத்தாழ்வார், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாவது திருவந்தாதியை இயற்றியுள்ளார். “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” எனத் தொடங்கும் பாடல் இரண்டாம் திருவந்தாதியிலுள்ள முதல் பாடலாகும்.

14) ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது எது?

A) மோனை

B) எதுகை

C) அந்தாதி

D) இயைபு

விளக்கம்: பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் – முடிவு, ஆதி – முதல்)

15) அந்தாதியை அமையும் பாடல்களைக் கொண்டு அமையும் சிற்றிலக்கிய வகை எது?

A) உலா

B) பரணி

C) அந்தாதி

D) புறநிலை

விளக்கம்: அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

16) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

A) பரிமேலழகர்

B) நாதமுனி

C) உ.வே.சா

D) ஆழ்வார்கள்

விளக்கம்: திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் . அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி.

17) முதலாழ்வார்கள் எனப்படுபவர்கள் யார்?

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

A) 1, 2

B) 2, 3

C) 1, 3

D) 1, 2, 3

விளக்கம்: பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

18) ‘இடர்’ என்பதன் பொருள் என்ன?

A) துன்பம்

B) மகிழ்ச்சி

C) ஆர்வம்

D) இன்பம்

விளக்கம்: இடம் என்பதன் பொருள் துன்பம் ஆகும்.

19) “ஞானச்சுடர்” – பிரித்தெழுக

A) ஞா + சுடர்

B) ஞானச் + சுடர்

C) ஞானம் + சுடர்

D) ஞானி + சுடர்

விளக்கம்: ஞானச்சுடர் – ஞானம் + சுடர் எனப் பிரியும்

20) இன்ப + உருகு – சேர்த்தெழுக

A) இன்புஉருகு

B) இன்பும்உருகு

C) இன்புருகு

D) இன்பருகு

விளக்கம்: இன்ப + உருகு – இன்பருகு எனப் புணரும்

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!