General Tamil

7th Tamil Unit 8 Questions

31) சரியான கூற்றைத் தேர்க.

1. பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம்

உதவுவதே சிறந்த பண்பு

2. அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வையாத ஒப்புரவு நெறியாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பிறருக்கு உதவி செய்யும் போது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படா வண்ணம் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும்.

32) வாழ்க்கை எதை குறிக்கோளாக உடையது?

A) அறம்

B) இல்லறம்

C) தொண்டு

D) தியாகம்

விளக்கம்: வாழ்க்கை தொண்டினையே குறிக்கோளாக உடையது. இந்தக் குறிக்கோளுடன் தான் ஒப்புரவு நெறியை திருக்குறள் அறிமுகப்படுத்துகிறது.

33) திருவள்ளுவர் கூறிய வாழும் நெறி எது?

A) பொதுவுடைமை நெறி

B) தனியுடைமை நெறி

C) அரசுடைமை நெறி

D) A மற்றும் C

விளக்கம்: திருக்குறள் நெறியில் மக்கள் ஒருவருக்கொருவர் கடமைகளைச் செய்வதற்கு உரியவர்கள் உரிமைகளைப் பெறவும் உரியவர்கள். “ஒருவர் எல்லாருக்காவும், எல்லாரும் ஒருவருக்காவும்” என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறியாகும்.

34) தவறான கூற்றைத் தேர்க.

1. உதவி பெறுபவரை உறவுப் பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக, நினைத்து, உதவிசெய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதலே ஒப்புரவு ஆகும்.

2. ஒப்புரவில் ஈதல் – ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உழவு உண்டு

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) இரண்டும் தவறு

D) எதுவுமில்லை

விளக்கம்: ஒப்புரவில் ஈதல் – ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உறவு இல்லை.

35) அயலவர் உண்ணாது இருக்கும்போது, நாம் மட்டும் உண்பது நெறியும் அன்று, முறையும் அன்று அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பும் அன்று. அயலவன் விழித்து எழுந்தால் நமது நிலை பாதிக்கும். ஆதலால் வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் இவ்வாறு கூறியவர் யார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) சம்பந்தர்

D) மாணிக்கவாசகர்

விளக்கம்: இவ்வாறு அப்பரடிகள் கூறினார், அதை அண்ணல் காந்தியடிகள் வழி மொழிந்தார்.

36) “உலகம் உன்ன உண் உடுத்த உடுப்பாய்”- இதனை கூறியவர் யார்?

A) பாரதி

B) பாரதிதாசன்

C) சுரதா

D) மௌலி

விளக்கம்: பாவேந்தர் பாரதிதாசன் “உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்” என்று கூறுகிறார்.

37) எதை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு?

A) வறுமை

B) நோய்

C) செல்வம்

D) உதவி

விளக்கம்: வறுமையைப் பிணி என்றும், செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு.

38) “செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்று உரைக்கும் நூல் எது?

A) நன்னூல்

B) பத்துப்பாட்டு

C) நற்றிணை

D) புறநானூறு

விளக்கம்: “செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்று புறநானூறு கூறுகிறது.

39) “ஊருணி நீரநிறைந்து அற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) புறநானூறு

C) நன்னூல்

D) பத்துப்பாட்டு

விளக்கம்: உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.

40) “பயன்மரம் உள்ளுர்ப் பழுத்துஅற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) புறநானூறு

C) நன்னூல்

D) பத்துப்பாட்டு

விளக்கம்: நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!