General Tamil

7th Tamil Unit 8 Questions

21) “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்ததாக” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

A) பூதத்தாழ்வார்

B) பேயாழ்வார்

C) ஆண்டாள்

D) முளைப்பாடியார்

விளக்கம்: “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் கலைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறந்கதிர் ஈனர்

பைந்கூழ் சிறுகாலைச் செய்” – முனைப்பாடியர்

22) பொருத்துக.

அ. வித்து – 1. பசுமையான பயிர்

ஆ. பைங்கூழ் – 2. விதை

இ. ஈன – 3. பெற

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 2, 3, 1

D) 1, 3, 2

விளக்கம்: வித்து – விதை

பைங்கூழ் – பசுமையான பயிர்

ஈன – பெற

23) பொருத்துக

அ. நிலன் – 1. வேண்டாடி செடி

ஆ. வன்சொல் – 2. நிலம்

இ. களை – 3. கடுஞ்சொல்

A) 2, 3, 1

B) 3, 2, 1

C) 2, 1, 3

D) 3, 1, 2

விளக்கம்: நிலன் – நிலம்

வன்சொல் – கடுஞ்சொல்

களை – வேண்டாத செடி

24) முனைப்பாடியார் எண்ணத்தில் நின்று பொருத்துக.

அ. விளைநிலம் – 1. அறம்

ஆ. விதை – 2. அன்பு

இ. களை – 3. இனியசொல்

ஈ. எரு – 4. ஈகை பண்பு

உ. நீர் – 5. உண்மை பேசுதல்

ஊ. கதிர் – 6. வன்சொல்

A) 3 4 5 2 1 6

B) 4 3 2 5 6 1

C) 3 4 6 5 2 1

D) 3 4 5 6 2 1

விளக்கம்: விளைநிலம் – இனியசொல்

விதை – ஈகை பண்பு

களை – வன்சொல்

எடு – உண்மை பேசு

நீர் – அன்பு

கதிர் – அறம்

25) முனைப்பாடியர் எந்த சமயப்புலவர்?

A) பௌத்தம்

B) சமணம்

C) சைவம்

D) வைணவம்

விளக்கம்: முனைப்பாடியார் திருமுனைபாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். இவரது காலம் 13-ஆம் நூற்றாண்டு.

26) அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

A) 220

B) 225

C) 230

D) 280

விளக்கம்: முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இது அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது. “இன்சொல் விளைநிலனா……” என்பது 15-வது பாடலாகும்.

27) காந்தியடிகள் எப்போதும்_________பேசினார்

A) வன்சொற்கள்

B) அரசியல்

C) கதை

D) வாய்மை

விளக்கம்: காந்தியடிகள் எப்போதும் வாய்மைப் பேசினார்.

வாய்மை – உண்மை

வன்சொல் – கடுஞ்சொல்

28) இன்சொல் – பிரித்தெழுதுக

A) இனி + சொல்

B) இன்மை + சொல்

C) இனிமை + சொல்

D) இன் + சொல்

விளக்கம்: இன்சொல் – இனிமை + சொல் எனப் பிரியும்

29) அறம் + கதிர் – சேர்த்தெழுதுக

A) அறகதிர்

B) அறுகதிர்

C) அறக்கதிர்

D) அறம்கதிர்

விளக்கம்: அறம் + கதிர் – அறக்கதிர் எனப் புணரும்.

30) இளமை – எதிர்சொல் தருக

A) முதுமை

B) புதுமை

C) தனிமை

D) இனிமை

விளக்கம்: இளமை என்பதன் எதிர்சொல் முதுமை ஆகும்.

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!