General TamilTnpsc

General Tamil Model Question Paper 14

91. “தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படுபவர் யார்?

(அ) சுரதா

(ஆ) அப்துல் ரகுமான்

(இ) வாணிதாசன்

(ஈ) தாரா பாரதி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) வாணிதாசன்

92. தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டவர்

(அ) மறைமலையடிகள்

(ஆ) சூரியநாராயண சாஸ்திரி

(இ) ரா.இராகவையங்கார்

(ஈ) சிங்கார வேலு முதலியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) சூரியநாராயண சாஸ்திரி

93. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க

(அ) தந்தை பெரியார் “பகுத்தறிவாளர் சங்கத்தை” நிறுவினார்.

(ஆ) பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்

(இ) பெரியார் மகாத்மா காந்தியின் தொண்டர் ஆனார்.

(ஈ) ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

94. பொருத்துக:

ஆசிரியர் சிறுகதை

அ. வ.வே.சு.ஐயர் – 1. பஞ்சதந்திரக்கரைகள்

ஆ. தாண்டவராய முதலியார் – 2. மங்கையர்கரசியின் காதல்

இ. செல்வ கேசவராய முதலியார் – 3. காணாமலே காதல்

ஈ. கு.ப.ரா – 4. அபிநயக் கதைகள்

அ ஆ இ ஈ

(அ) 1 2 4 3

(ஆ) 2 4 3 1

(இ) 3 1 2 4

(ஈ) 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 2 1 4 3

95. பொருந்தாத இணையைக் கண்டறிக:

(அ) பொதுவுடைமை – புதுமைப்பித்தன்

(ஆ)தனித்தமிழ் – மறைமலை அடிகள்

(இ) பேச்சுக் கலை – பேரறிஞர் அண்ணா

(ஈ) புரட்சி – பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை:  (அ) பொதுவுடைமை-புதுமைப்பித்தன்

விளக்கம்:

பொதுவுடைமை-திரு.வி.க

96. துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?

(அ) வீரராகவர்

(ஆ) ஆனந்த ரங்கர்

(இ) பரஞ்சோதி முனிவர்

(ஈ) தருமி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) ஆனந்த ரங்கர்

விளக்கம்:

“இந்தியாவின் பெப்பிசு” என்று அழைக்கப்பட்ட ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பு ஆகும். பிரெஞ்சு அரசில் (பாண்டிச்சேரி) துபாசியாக இருந்தபோதும் மன்னரைப் போல் இவர் மதிக்கப்பட்டார்

97. புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட “மெல்ல மெல்ல மற” என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

(அ) இலட்சுமி

(ஆ) சுஜாதா

(இ) சுபா

(ஈ) தாமரை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) இலட்சுமி

98. அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?

(அ) மு.வரதராசனார்

(ஆ) பாரதியார்

(இ) காமராசர்

(ஈ) அண்ணா

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) காமராசர்

99. “மணநூல்” இந்நூலின் ஆசிரியர் யார்?

(அ) இளங்கோவடிகள்

(ஆ) சீத்தலைச் சாத்தனார்

(இ) திருத்தக்கத் தேவர்

(ஈ) திருவள்ளுவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) திருத்தக்கத் தேவர்

விளக்கம்:

திருத்தக்கத்தேவர் இயற்றிய சீவகசிந்தாமணியின் மற்றொரு பெயர் “மணநூல்” ஆகும்.

100. பொருத்துக:

அ. அம்பை – 1. வலம்புரி

ஆ. அனுராதா ரமணன் – 2. காளி

இ. திலகவதி – 3. காலச்சுமைதாங்கி

ஈ. பாக்யா – 4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 1 2 3 4

(இ) 1 2 4 3

(ஈ) 1 3 2 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 3 2 1

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!