General TamilTnpsc

General Tamil Model Question Paper 14

81. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. “பாடு” எனக்கூறியவுடன் பாடுபவர் – 1.சித்திரகவி

ஆ. ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் – 2.வித்தாரக்கவி

இ. தொடர்நிலைச் செய்யுள் பாடுபவர் – 3.ஆசுகவி

ஈ. சொல்லணி அமைத்துப் பாடுபவர் – 4. மதுரகவி

அ ஆ இ ஈ

(அ) 3 4 2 1

(ஆ) 4 3 1 2

(இ) 2 1 4 3

(ஈ) 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 3 4 2 1

விளக்கம்:

கொடுத்த பொருளில் அடுத்த கணமே கவி பாட வல்லவர்-ஆசுகவி

சொல்லணி அமைத்துப் பாடுவதில் வல்லவர்-சித்திரகவி

விரிவாக, தொடர்நிலைச்செய்யுள் வடிவில் பாடுவதில் வல்லவர்-வித்தாரகவி

ஓசைநலம் சிறக்க இனிமையாகப் பாடுவதில் வல்லவர்-மதுரகவி

82. இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளிட்டவர்

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) திரு.வி.க

(ஈ) முடியரசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பாரதியார்

83. பொருத்துக:

மூலிகையின் பொதுப்பெயர் சிறப்புப்பெயர்

அ. தூதுவளை – 1.குமரி

ஆ. கற்றாழை – 2.ஞானப்பச்சிலை

இ. கரிசலாங்கண்ணி – 3. இந்திய மருந்து

ஈ. குறுமிளகு – 4. தேகராசம்

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 3 4 2 1

இ. 1 2 3 4

ஈ. 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 2 1 4 3

84. பொருத்துக:

வரிசை I வரிசை II

அ. கொலையே, களவே, காமத்தீ விழைவு – 1.உள்ளம் தன்னில் தோன்றுவன

ஆ. பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் – 2.என்பது இயல்பே

இ. வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி – 3. உடம்பில் தோன்றுவன

ஈ. பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் – 4. சொல்லில் தோன்றுவன

அ ஆ இ ஈ

அ. 3 2 1 4

ஆ. 3 4 1 2

இ. 3 1 2 4

ஈ. 3 2 4 1

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 3 4 1 2

விளக்கம்:

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, மணிமேகலையில் ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் அமைந்துள்ள அறவண அடிகளில், கூற்றாகும். உடம்பில், உள்ளத்தில், சொல்லில் தோன்றும் குற்றங்கள் பற்றி அவர் எடுத்துரைக்கும் பாடலடிகள் கொடுக்கப்பட்டுள்ளன

85. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் – 1.தண்ணீர் தண்ணீர்

ஆ. வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் – 2. இசை நூல்

இ. கோமல் சுவாமிநாதன் – 3. கருணாமிர்த சாகரம்

ஈ. முதுநாரை – 4. மானவிஜயம்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 2 4 3 1

(இ) 3 4 1 2

(ஈ) 1 2 4 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 1 2

86. பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்

(அ) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

(ஆ) பல்யானை செல்கெழுகுட்டுவன்

(இ) செல்வக்கடுங்கோ வாழியாதன்

(ஈ) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்

விடை மற்றும் விளக்கம்

விடை:  (ஈ) கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்

விளக்கம்:

தகடூர் எறிந்த பொருஞ்சேரல் இரும்பொறை-எட்டாம் பத்து.

பல்யானைசெல்கெழு குட்டுவன்-மூன்றாம்பத்து.

செல்வங்கடுங்கோ வாழியாதன்-ஏழாம் பத்து.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்-ஐந்தாம் பத்து.

87. “முத்தொள்ளாயிரம்” பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் சுட்டுக

அ. முத்தொள்ளாயிரப் பாடல்களில் “புறத்திரட்டு” என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஆ. பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

இ. பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

ஈ. சுவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சிமாகத் திகழ்கின்றன.

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. சுவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சிமாகத் திகழ்கின்றன.

விளக்கம்:

இந்நூல் முழுமையும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது.

88. பொருத்துக:

பட்டியல் I                         பட்டியல் II

அ. நீள்நெடுங்கண்ணி – 1. கட்கநேத்ரி

ஆ. வாள்நெடுங்கண்ணி – 2. விசாலாட்சி

இ. பழமலைநாதர் – 3. சொர்ணபுரீச்சுரர்

ஈ. செம்பொன் பள்ளியார் – 4. விருத்தகிரீசுவரர்

அ ஆ இ ஈ

(அ) 3 4 2 1

(ஆ) 1 2 3 4

(இ) 2 1 4 3

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 2 1 4 3

89. சாகித்திய அகாடெமி பரிசுப்பெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல் எது?

(அ) கள்ளர் சரித்திரம்

(ஆ) தமிழ் இலக்கிய வரலாறு

(இ) தமிழின்பம்

(ஈ) முத்தொள்ளாயிர விளக்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) தமிழின்பம்

90. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்

(அ) திலகவதி

(ஆ) நீலாம்பிகை

(இ) சிவகாமி

(இ) புனிதவதி

விடை மற்றும் விளக்கம்

விடை:

(இ) புனிதவதி

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!