General TamilTnpsc

General Tamil Model Question Paper 14

61. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. வாலை – 1.தயிர்

ஆ. உளை – 2.சுரபுன்னை மரம்

இ. விளை – 3. இளம்பெண்

ஈ. வழை – 4. பிடரிமயிர்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 2 1 3 4

(இ) 1 2 4 3

(ஈ) 3 4 1 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) 3 4 1 2

62. இன்மையுள் இன்மை விருந்தொரால் – இதில் விருந்து என்பதன் இலக்கணக்குறிப்பு தருக:

(அ) பண்புப்பெயர்

(ஆ) வினையாலணையும் பெயர்

(இ) பண்பாகு பெயர்

(ஈ) வியங்கோள் வினைமுற்று

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பண்பாகு பெயர்

63. “காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்பட்வர் யார்?

(அ) அம்புஜம்மாள்

(ஆ) தில்லையாடி வள்ளியம்மை

(இ) அஞ்சலையம்மாள்

(ஈ) வேலு நாச்சியார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) அம்புஜம்மாள்

விளக்கம்:

“காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்பட்டவர் அம்புஜத்தம்மாள் ஆவார், 08.01.1899-இல் பிறந்தவர். நாட்டு விடுதலை மற்றும் பெண் விடுதலைக்காக அயராது உழைத்தவர். சிறைசென்றவர் “நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதியுள்ளார். 1964-இல் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றார்.

64. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க:

(அ) பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது

(ஆ) நகை, அழுகை, உவகை, பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல் பல்சுவைப் பாடல்களாம்

(இ) தேர், யானை, குதிரை, காலாட் படைகளின் வலிமை, வீரச் சிறப்புகளைப் போற்றும் புறப்பாடல்கள்.

(ஈ) நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, “காவடிச்சிந்து” திகழ்கிறது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, “காவடிச்சிந்து” திகழ்கிறது

65. பொருத்துக:

நூல் ஆசிரியர்

அ. பாண்டியன் பரிசு – 1. பாரதியார்

ஆ. குயில்பாட்டு – 2. நாமக்கல் கவிஞர்

இ. ஆசிய ஜோதி – 3. பாரதிதாசன்

ஈ. சங்கொலி – 4. கவிமணி

அ ஆ இ ஈ

(அ) 4 2 1 3

(ஆ) 1 3 2 4

(இ) 3 1 4 2

(ஈ) 2 4 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 1 4 2

66. “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர்

(அ) சுந்தரர்

(ஆ) கம்பர்

(இ) சேக்கிழார்

(ஈ) மாணிக்கவாசகர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) சேக்கிழார்

67. எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?

(அ) பதிற்றுப்பத்து

(ஆ) பரிபாடல்

(இ) கலித்தொகை

(ஈ) ஐங்குறூநூறு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பரிபாடல்

68. “முத்தொள்ளாயிரம்” பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

அ. மூன்று+தொள்ளாயிரம்-முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் “முத்தொள்ளாயிரம்”

ஆ. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன.

இ. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்

ஈ. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்

(அ) அ, இ சரியானவை

(ஆ) அ, ஈ சரியானவை

(இ) ஆ, இ சரியானவை

(ஈ) இ, ஈ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அ, ஈ சரியானவை

விளக்கம்:

முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களைக் கொண்ட நூலாகும். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.

69. திருக்கோட்டியூர் நம்பியால் “எம்பெருமானார்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

(அ) நாதமுனிவர்

(ஆ) இராமானுஜர்

(இ) திருவரங்கத்தமுதனார்

(ஈ) மணவாள மாமுனிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) இராமானுஜர்

70. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட சங்க அகநூல்

(அ) நற்றிணை

(ஆ) கலித்தொகை

(இ) ஐங்குநூறு

(ஈ) குறுந்தொகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஐங்குநூறு

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!