General TamilTnpsc

General Tamil Model Question Paper 16

11. “அன்னபூரணி” எனும் புதின ஆசிரியர்

(அ) ஜெயகாந்தன்

(ஆ) அகிலன்

(இ) வைரமுத்து

(ஈ) க.சச்சிதானந்தன்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) க.சச்சிதானந்தன்

விளக்கம்:

க.சச்சிதானந்தன்: யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை இவரது ஊராகும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளாராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

படைப்புகள்: ஆனந்தத்தேன் (கவிதைத் தொகுதி), அன்னபூரணி (புதினம்), யாழ்ப்பாணக் காவியம்.

ஆசிரியர்: மகாவித்துவான் நவநீதக் கிருட்டிண பாரதியார்..

12. பொருத்துக:

நூல் புலவர்

1. தமிழியக்கம் – 1. பாரதியார்

2. சீட்டுக்கவி – 2. தோலாமொழித்தேவர்

3. சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – 3. பாரதிதாசன்

4. சூளாமணி – 4. மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 2 4 1 3

(இ) 3 1 4 2

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

(இ) 3 1 4 2

13. பொருத்துக:

நூல் புலவர்

1. பெரியபுராணம் – 1. திருத்தக்கத்தேவர்

2. இராமாயணம் – 2. உமறுப்புலவர்

3. சீறாப்புராணம் – 3. சேக்கிழார்

4. சீவகசிந்தாமணி – 4. கம்பர்

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 2 4 3 1

இ. 4 2 1 3

ஈ. 3 2 4 1

விடை மற்றும் விளக்கம்

அ. 3 4 2 1

14. பொருத்துக

அ. வீரகாவியம் – 1. நா.காமராசன்

ஆ. இயேசு காவியம் – 2. சிற்பி பாலசுப்ரமணியம்

இ. ஒளிப்பறவை – 3. கண்ணதாசன்

ஈ. சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் – 4. முடியரசன்

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 3 2 1 4

(இ) 2 1 4 3

(ஈ) 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

(அ) 4 3 2 1

15. எச்.ஏ.கிருட்டிணனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியர் பெயர்

(அ) மாணிக்கவாசகத் தேவர்

(ஆ) சங்கர நாராயணர்

(இ) பிலவண சோதிடர்

(ஈ) தெய்வநாயகி

விடை மற்றும் விளக்கம்

(அ) மாணிக்கவாசகத் தேவர்

விளக்கம்:

எச்.ஏ.கிருட்டிணனாரின் ஆசிரியர்கள்:

தமிழிலக்கியங்கள்-கிருட்டிணாரின் தந்தை சங்கர நாராயணர்.

இலக்கணங்கள்-மாணிக்கவாசகத் தேவர்.

வடமொழி-பிலவணச் சோதிடர்.

16. சூடாமணி நிகண்டு-ஆசிரியர்

(அ) திவாகர முனிவர்

(ஆ) பிங்கலம்

(இ) வீரமண்டல புருடர்

(ஈ) காங்கேயர்

விடை மற்றும் விளக்கம்

(இ) வீரமண்டல புருடர்

விளக்கம்:

சூடமணி நிகண்டு என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந்நூல் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

17. “மொழிகளின் காட்சிச் சாலை இந்தியா” – இக்கூற்று யாருடையது?

(அ) பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.

(ஆ) பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை

(இ) பேராசிரியர் சாலை.இளந்திரையன்

(ஈ) பேராசிரியர் சாலமன் பாப்பையா

விடை மற்றும் விளக்கம்

(அ) பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்.

விளக்கம்:

இந்திய நாட்டில் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும் அதன் கிளை மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. ஆதலால் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சி சாலை” என்று குறிப்பிட்டுள்ளார். மொழியியல் பேராசிரியர்.ச.அகத்தியலிங்கம்.

18. பொருத்துக

அ. மூதுரை 1.சிவப்பிரகாசர்

ஆ. வெற்றிவேற்கை 2. முனைப்பாடியார்

இ. நன்னெறி 3. அதிவீரராம பாண்டியர்

ஈ.அறநெறிச்சாரம் 4. ஒளவையார்

அ ஆ இ ஈ

(அ) 4 3 1 2

(ஆ) 2 3 1 4

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 2 3

விடை மற்றும் விளக்கம்

(அ) 4 3 1 2

19. “மத்தவிலாசம்” – என்னும் நாடக நூலை எழுதியவர்

(அ) இராஜஇராஜ சோழன்

(ஆ) இராஜேந்திரன் சோழன்

(இ) நந்தவர்மன்

(ஈ) மகேந்திரவர்மன்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மகேந்திரவர்மன்

விளக்கம்:

முதலாம் மகேந்திரவர்மன்

மத்தவிலாச பிரகசனம் என்ற நாடக நூலை பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் எழுதினார். மேலும் இவர் இசையில் வல்லவர் என்பதால் “சங்கீர்ணசாதி” என்ற சிறப்புப் பெயரையும், ஓவியத்தில் வல்லவர் என்பதால் “சித்திரகாரப்புலி” என்ற சிறப்புப் பெயரையும் பெற்றுள்ளார்.

“தட்சணசித்திரம்” என்ற ஓவிய நூலுக்கு இம்மன்னன் எரை எழுதியுள்ளார்.

20. பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்

(அ) குடும்பவிளக்கு

(ஆ) பாண்டியன் பரிசு

(இ) இருண்ட வீடு

(ஈ) கள்ளோ? காவியமோ?

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கள்ளோ? காவியமோ?

விளக்கம்:

கள்ளோ? காவியமோ? – மு.வரதராசனார்

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!