General TamilTnpsc

General Tamil Model Question Paper 16

51. “திருச்செந்திற் கலம்பகம்” என்னும் நூலை இயற்றியவர்

(அ) ஞானதேசிகர்

(ஆ) ஈசான தேசிகர்

(இ) தெய்வசிகாமணி

(ஈ) முத்துகுமாரசாமி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஈசான தேசிகர்

விளக்கம்:

“திருச்செந்திற் கலம்பகம்” என்ற நூலை இயற்றியவர் சுவாமிநாத தேசிகர் ஆவார். இவரின் சிறப்புப் பெயர் ஈசான தேசிகர். இவர் ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்

52. பொருத்துக:

(அ) சொல்லின் செல்வர் – 1. திரு.வி.கல்யாண சுந்தரனார்

(ஆ) வசனநடை வல்லாளர் – 2. சாத்தனார்

(இ) தமிழ்த் தென்றல் – 3. ஆறுமுக நாவலர்

(ஈ) தண்டமிழ் ஆசான் – 4. ரா.பி.சேதுப்பிள்ளை

அ ஆ இ ஈ

அ. 3 2 4 1

ஆ. 2 4 1 3

இ. 4 3 1 2

ஈ. 1 2 4 3

விடை மற்றும் விளக்கம்

இ. 4 3 1 2

53. பொருத்துக

அ. தொன்னூல் விளக்கம் – 1. குமரகுருபரர்

ஆ. நாலடியார் – 2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

இ. திருவேங்கடத்து அந்தாதி – 3. வீரமாமுனிவர்

ஈ. மதுரைக்கலம்பகம் – 4. சமண முனிவர்கள்

அ ஆ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 3 4 2 1

இ. 2 1 3 4

ஈ. 4 3 1 2

விடை மற்றும் விளக்கம்

ஆ. 3 4 2 1

54. பொருத்துக:

அ. புத்தகச்சாலை – 1. வாணிதாசன்

ஆ. தீக்குச்சிகள் – 2. சுரதா

இ. சிக்கனம் – 3. பாரதிதாசன்

ஈ. காடு – 4. அப்துல் ரகுமான்

அ ஆ இ ஈ

அ. 2 1 3 4

ஆ. 3 2 4 1

இ. 3 4 2 1

ஈ. 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

இ. 3 4 2 1

55. கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூறும் நூல்

(அ) பதிற்றுப்பத்து

(ஆ) புறநானூறு

(இ) பரிபாடல்

(ஈ) நெடுநல்வாடை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) புறநானூறு

விளக்கம்:

புறநானூறு 66-வது பாடல்

“நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல்

தோன்ற

வென்றோய்! நின்னிலும் நல்லன் அன்றே –

கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,

மிகப் புகழ் உலகம் எய்தி,

புறப்புண் நாணி, வடக்கிருந்தோனே?”பாடியவர்-வெண்ணிக் குயத்தியார்.

பாடப்பெற்றவர்-கரிகாலச் சோழன்.

திணை-வாகை.

துறை-அரச வாகை.

பொருள்: நீர் செறிந்த பெரிய கடலிடத்தே மரக்கலம் செலுத்தியும். அது அசையாதபோது, காற்றினை ஏவல் கொண்டும் அமைந்த வலிமையை உடையவனின் வழித்தோன்றலே! மதம் பொருந்திய ஆண் யானையை உடைய கரிகால் வளவனே! போர் மேற்சென்று கொன்று நின்னாற்றல் தோன்றுமாறு வென்றாய்; குறைவுபடாது பெருகும் புதுவருவாயை உடைய வெண்ணியில், ஊர்ப்புறத்தின் போர்க்களத்தில் மிகப் புகழமைந்த உலகை விரும்பிப் பொருந்தியவனும், புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோனுமான பெருஞ்சேரலாதன் நின்னை விட நல்லன் அல்லனோ?

56. “சீடைக்காகச் சிலேட்டு பணயம்

முறுக்குக்காக மோதிரம் பணயம்

காப்பிக்காகக் கடுக்கன் பணயம்”

– இப்பாடலின் ஆசிரியர் யார்?

(அ) கவிமணி தேசிக விநாயகம்

(ஆ) கவிப்பேரரசு வைரமுத்து

(இ) கவிஞர் மு.மேத்தா

(ஈ) குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா

விடை மற்றும் விளக்கம்

(அ) கவிமணி தேசிக விநாயகம்

விளக்கம்:

கவிமணியின் “மருமக்கள் வழி மான்மியம்” என்ற கவிதையில் இப்பாடல் அமைந்துள்ளது

57. திரு.வி.கல்யாண சுந்தரனார் எழுதாத நூல்

(அ) முருகன் அல்லது அழகு

(ஆ) நாயன்மார் வரலாறு

(இ) தமிழ்நாடும் நம்மாழ்வாரும்

(ஈ) சத்தியவேத கீர்த்தனைகள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) சத்தியவேத கீர்த்தனைகள்

விளக்கம்:

“சத்தியவேத கீர்த்தனைகள்” என்ற நூலின் ஆசிரியர் ஜான்பால்மர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது காலம் 1812-1833. இவர் எழுதிய 200 கீர்த்தனைகளில் 54 கீர்த்தனைகள் மட்டுமே கிடைத்துள்ளன.

பிற படைப்புகள்: ஞானப்பதக் கீர்த்தனம், கிறிஸ்தாயனம், மேசிய விலாசம், பேரானந்தக் கும்மி, நல்லறிவின் சார்க்கவி.

குறிப்பு: வினாவில் “சத்தியவேத கீர்த்தனைகள்” என்று கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையான பெயர் “சத்தியவேத சரித்திரம் கீர்த்தனைகள்” ஆகும்.

58. “குறிஞ்சித் திட்டு” எனும் நூலை இயற்றியவர்

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) சுரதா

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பாரதிதாசன்

59. “வீரசோழியம்” என்னும் இலக்கண நூலை இயற்றியவர்

(அ) காரியாசான்

(ஆ) புத்தமித்திரர்

(இ) பவணத்தி முனிவர்

(ஈ) வீரமாமுனிவர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) புத்தமித்திரர்

60. நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்

(அ) குறிஞ்சிப்பாட்டு

(ஆ) முல்லைப்பாட்டு

(இ) பட்டினப்பாலை

(ஈ) மதுரைக்காஞ்சி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) முல்லைப்பாட்டு

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!