General Tamil

6th Tamil Unit 5 Questions

21. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ____________.

A) மறைந்த

B) நிறைந்த

C) குறைந்த

D) தோன்றிய

22. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. விரும்பிக் கொண்டாடுவது விழா எனப்படும். உறவுகள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்கள் மனத்திற்கு மகிழ்வைத்தரும்;

II. மனிதரிடையே ஒற்றுமையை வளர்க்கும். தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

III. விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கின்றன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

23. தமிழர் திருநாள் என்று போற்றப்படும் விழா எது?

A) பொங்கல் விழா

B) தீபாவளி

C) புத்தாண்டு விழா

D) இவற்றில் ஏதுமில்லை

24. உழவர்கள் _____________ திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர்.

A) மாசி

B) ஆடி

C) பங்குனி

D) ஐப்பசி

25. போகித் திருநாள் – சரியான கூற்று எது?

I. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” (நன்னூல் நூற்பா-462) என்பது ஆன்றோர் மொழி.

II. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள்.

III. இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

26. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை _______________ விழாவாகக் கொண்டாடப்பட்டது.

A) இந்திர

B) அசுரர்

C) சிவ தரிசன

D) இவற்றில் ஏதுமில்லை

27. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும்.

II. தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.

III. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு.

IV. மாட்டுப்பொங்கல் நாளிலோ அதற்கு அடுத்த நாளிலோ சில ஊர்களில் மஞ்சுவிரட்டு நடைபெறும். மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III, IV அனைத்தும் தவறு

28. திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) _____________ இல் பிறந்தவர்.

A) 101

B) 100

C) 51

D) 31

(குறிப்பு – திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31 ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். (எ.கா.) 2021 + 31 = 2052)

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!