General Tamil

6th Tamil Unit 5 Questions

81. விடுபட்டதை நிரப்புக.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

82. விடுபட்டதை நிரப்புக.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் ________ _________ _________?

A) போற்றலுள் எல்லாம் தலை

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

83. விடுபட்டதை நிரப்புக.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் _________ _________ _________?

A) பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

84. ஏழைகளுக்கு உதவி செய்வதே ___________ ஆகும்.

A) பகை

B) ஈகை

C) வறுமை

D) கொடுமை

85. பிற உயிர்களின் ____________ கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

A) மகிழ்வை

B) செல்வத்தை

C) துன்பத்தைக்

D) பகையை

86. உள்ளத்தில் _____________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

A) மகிழ்ச்சி

B) மன்னிப்பு

C) துணிவு

D) குற்றம்

87. பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க.

நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

A) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற

B) எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை

C) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

D) ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை

88. உள்ளத்தில் __________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே.

A) வீரம்

B) குற்றம்

C) அன்பு

D) இவற்றில் ஏதுமில்லை

89. பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே __________ ஆகும்.

A) தன்மானம்

B) வீரம்

C) அறம்

D) இவற்றில் ஏதுமில்லை

90. அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது எது?

A) நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வது

B) பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவது

C) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவு கூடச் செய்யாதிருத்தல்

D) தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!