General Tamil

6th Tamil Unit 5 Questions

51. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. ண – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

II. ன – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

III. ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

IV. (ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள். இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும், தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும், றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

52. சரியானது எது? சொற்களில் ண, ன இடம்பெறும் வகை.

I. ட என்னும் எழுத்துக்கு முன் ‘ண்’ வரும் (எ.கா.) கண்டம், வண்டி, நண்டு

II. ற என்னும் எழுத்துக்கு முன் ‘ன்’ வரும் (எ.கா.) மன்றம், நன்றி, கன்று

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

53. ல, ள, ழ – எழுத்துகள் – சரியானது எது?

I. ல- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.

II. ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.

III. ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

54. பொருள் வேறுபாடு உணர்க. சரியானது எது?

I. விலை -பொருளின் மதிப்பு

II. விளை – உண்டாக்குதல்

III. விழை – விரும்பு

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

55. பொருள் வேறுபாடு உணர்க. சரியானது எது?

I. இலை – செடியின் இலை

II. இளை – மெலிந்து போதல்

III. இழை – நூல் இழை

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

56. ர, ற – எழுத்துகள் – சரியானது எது?

I. ர – நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.

II. ற – நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே தவறு

D) I, II இரண்டுமே சரி

57. பொருள் வேறுபாடு உணர்க – சரியானது எது?

I. ஏரி – நீர்நிலை

II. கூரை – வீட்டின் கூரை

III. ஏறி – மேலே ஏறி

IV. கூறை – புடவை

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III, IV அனைத்தும் தவறு

C) I, II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

58. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Welcome – நல்வரவு

II. Readymade Dress – ஆயத்த ஆடை

III. Sculptures – சிற்பங்கள்

IV. Makeup – ஒப்பனை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

59. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Chips – சில்லுகள்

II. Tiffin – சிற்றுண்டி

III. Sculptures – சிற்பங்கள்

IV. Makeup – ஒப்பனை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

60. விடுபட்டதை தேர்வு செய்க.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா _________ ________ _________?

A) மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று

B) நோக்கக் குழையும் விருந்து

C) கள்ளத்தால் கள்வேம் எனல்

D) ஆவது போலக் கெடும்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!