General Tamil

6th Tamil Unit 5 Questions

41. கீழ்க்கண்டவற்றுள் மாமல்லபுரத்தில் இல்லாத இடங்கள் எவை?

I. அர்ச்சுனன் தபசு, கடற்கரைக் கோவில், பஞ்சபாண்டவர் ரதம்

II. ஒற்றைக்கல் யானை, குகைக்கோவில், புலிக்குகை

III. திருக்கடல் மல்லை, கண்ணனின் வெண்ணெய்ப் பந்து, கலங்கரை விளக்கம்

IV. வள்ளி குகை, கலங்கரை விளக்கம், துறைமுகம்

A) I மட்டும்

B) II மட்டும்

C) III மட்டும்

D) IV மட்டும்

42. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர் மகேந்திரவர்ம பல்லவர். அவர் காலத்தில் மாமல்லபுரத்துச் சிற்பப் பணி தொடங்கியது.

II. நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை இந்த மாமல்லபுரத்துச் சிற்பங்கள்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டும் சரி

D) I, II இரண்டும் தவறு

43. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

I. அர்ச்சுனன் தபசுச் சிலைக்கு அருகில் உள்ள பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

II. இவற்றுக்குப் புடைப்புச் சிற்பங்கள் என்று பெயர். இங்கு நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டும் சரி

D) I, II இரண்டும் தவறு

44. ‘அர்ச்சுனன் தபசு’ இதனை ______________ என்றும் கூறுவர்.

A) தபசு குகை

B) பகீரதன் தவம்

C) கிருஷ்ணன் தபசு

D) இவற்றில் ஏதுமில்லை

45. மாமல்லபுரத்தில், இரண்டு பாறைகளுக்கு இடையில் நீர் வடிந்து வந்த அமைப்பு – கீழ்க்கண்டவற்றுள் தொடர்புடையது எது?

A) கால்வாய்

B) ஆகாய கங்கை

C) கல் அருவி

D) நீர் வீழ்ச்சி

46. தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் எங்கு உள்ளது?

A) தஞ்சாவூர்

B) மன்னார்குடி

C) கன்னியாகுமரி

D) மாமல்லபுரம் (மகாபலிபுரம்)

47. சிற்பக் கலை வடிவமைப்புகள் __________ வகைப்படும்.

A) 2

B) 3

C) 4

D) 5

48. குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள் – இந்த நான்கு வகை சிற்பக் கலை வடிவமைப்புகள் காணப்படும் ஒரே இடம் _______.

A) தஞ்சாவூர்

B) மன்னார்குடி

C) கன்னியாகுமரி

D) மாமல்லபுரம் (மகாபலிபுரம்)

49. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை __________ என்கிறோம்.

A) உச்சகரிப்பு பிழை

B) மயங்கொலிகள்

C) ஒலிப்பிழை

D) இவற்றில் ஏதுமில்லை

50. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I) ண, ன, ந, ல, ழ, ள, ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

II) க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

III) எ, ஐ, ஒ, ஒள ஆகிய நான்கும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

IV) இவற்றில் ஏதுமில்லை

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!