General Tamil

6th Tamil Unit 5 Questions

71. நிலையான செல்வம் ______________?

A) தங்கம்

B) பணம்

C) ஊக்கம்

D) ஏக்கம்

72. ஆராயும் அறிவு உடையவர்கள் _________________ சொற்களைப் பேசமாட்டார்கள்.

A) உயர்வான

B) விலையற்ற

C) பயன்தராத

D) பயன்உடைய

73. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) பொருளு + டைமை

B) பொரு + ளுடைமை

C) பொருள் + உடைமை

D) பொருள் + ளுடைமை

74. உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A) உள்ளுவதுஎல்லாம்

B) உள்ளுவதெல்லாம்

C) உள்ளுவத்தெல்லாம்

D) உள்ளுவதுதெல்லாம்

75. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A) பயனிலா

B) பயன்னில்லா

C) பயன்இலா

D) பயன்இல்லா

76. “ஊக்கமது கைவிடேல்” என்பது ஔவையாரின் ஆத்திசூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

A) விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று

B) உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்

C) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்

D) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து

6th Tamil Unit 6 Questions

1. கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான், மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

2. நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன் அவன், ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

3. பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான், அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

4. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. மல்லெடுத்த – வலிமை பெற்ற

II. சமர் – போர்

III. நல்கும் – தரும்

IV. கழனி – வயல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

5. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. மறம் – வீரம்

II. எக்களிப்பு – பெருமகிழ்ச்சி

III. கலம் – கப்பல்

IV. ஆழி – கடல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6. தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன். – என்ற கூற்று யாருடையது?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) முடியரசன்

D) பாரதியார்

7. பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன். – என்ற கூற்று யாருடையது?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) முடியரசன்

D) பாரதியார்

8. முடியரசனின் இயற்பெயர் ________?

A) துரைராசு

B) ராசேந்திரன்

C) சாமிக்கண்ணு

D) காமராசன்

9. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

A) ந.காமராசன்

B) பெருஞ்சித்திரனார்

C) திரு.வி.க

D) முடியரசன்

10. ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று பாராட்டப்பெற்றவர் யார்?

A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

B) நாமக்கல் கவிஞர்

C) முடியரசன்

D) வாலி

11. வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் – அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்! – என்ற பாடல் வரியின் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார்

B) மீ. ராசேந்திரன்

C) தாரா பாரதி

D) முடியரசன்

12. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ____________?

A) மகிழ்ச்சி

B) துன்பம்

C) வீரம்

D) அழுகை

13. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________?

A) கல் + அடுத்து

B) கல் + எடுத்து

C) கல் + லடுத்து

D) கல் + லெடுத்து

14. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________?

A) நா + னிலம்

B) நான்கு + நிலம்

C) நா + நிலம்

D) நான் + நிலம்

15. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________?

A) நாடென்ற

B) நாடன்ற

C) நாடுஎன்ற

D) நாடுஅன்ற

16. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________?

A) கலம்ஏறி

B) கலமறி

C) கலன்ஏறி

D) கலமேறி

17. விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா, விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா, அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா, அருமைமேகம் நமதுகுடை – ஐலசா, வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா, விண்ணின்இடி காணும்கூத்து – ஐலசா, பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா, பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா – என்ற பாடல்வரி பற்றிய சரியான கூற்று எது?

A) இப்பாடல் ஜானகிராமன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

B) இப்பாடல் க. வைகுண்டம் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

C) இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

D) இப்பாடல் சாமிநாதன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

18. காயும்கதிர்ச் சுடர்கூரை – ஐலசா, கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா, மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா, பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் – ஐலசா, முழுநிலவே கண்ணாடி – ஐலசா, மூச்சடக்கும்நீச்சல் யோகம் – ஐலசா, தொழும்தலைவன் பெருவானம் – ஐலசா, துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா – என்ற பாடல்வரி பற்றிய சரியான கூற்று எது?

A) இப்பாடல் ஜானகிராமன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

B) இப்பாடல் க. வைகுண்டம் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

C) இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

D) இப்பாடல் சாமிநாதன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

19. நெய்தல் திணை – பற்றிய சரியான கூற்று எது?

I. நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்

II. மக்கள் : பரதவர், பரத்தியர்

III. தொழில் : மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

IV. பூ : தாழம்பூ

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

20. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி

II. மின்னல்வரி – மின்னல் கோடு

III. அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

21. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

II. ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.

A) I சரி II தவறு

B) I தவறு II சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

22. நானிலம் படைத்தவன் என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

A) பூங்கொடி

B) புதியதொரு விதி செய்வோம்

C) புதிய விதி செய்வோம்

D) காவியப்பாவை

23. மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் ___________ அவர்களுக்கு __________ விளக்குகளாகும்.

A) மீனவர்கள், நிலா ஒளியே

B) மீனவர்கள், எண்ணெய் விளக்கே

C) மீனவர்கள், விண்மீன்களே

D) மீனவர்கள், நட்சத்திரங்களே

24. மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விரிந்த கடலே ______________கடல் அலையே ____________ வெண்மையான மணலே படுத்துறங்கும் ___________.

A) தோழன், பள்ளிக்கூடம், மெத்தை

B) பள்ளிக்கூடம், மெத்தை, தோழன்

C) பள்ளிக்கூடம், தோழன், பஞ்சு மெத்தை

D) பஞ்சு மெத்தை, தோழன், பள்ளிக்கூடம்

25. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விண்ணின் இடி அவர்கள் காணும் ___________ சீறிவரும் புயலே விளையாடும் _____________ பனிமூட்டம்தான் உடலை சுற்றும் _____________.

A) ஊஞ்சல், துணி, வேடிக்கை

B) வேடிக்கை, ஊஞ்சல், போர்வை

C) கூத்து, ஊஞ்சல், போர்வை

D) வேடிக்கை, போர்வை, ஊஞ்சல்

26. மீனவர்களுக்கு அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் __________ கட்டுமரம்தான் அவர்களது ___________ மின்னல் கோடுகளே ___________.

A) வெளிச்சம், வேலை, பயம்

B) வெளிச்சம், வீடு, பயம்

C) மேற்கூரை, வாழும் வீடு, அடிப்படை பாடம்

D) மேற்கூரை, அடிப்படை பாடம், பயம்

27. மீனவர்களுக்கு வலைவீசிப் பிடிக்கும் மீன்களே _______________ அவர்களுக்கு தெரிகின்ற முழு நிலவு தான் _________________ மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் ___________ ஆகும்.

A) கண்ணாடி, தவம், செல்வம்

B) தவம், செல்வம், கண்ணாடி

C) செல்வம், கண்ணாடி, தவம்

D) கண்ணாடி, செல்வம், தவம்

28. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) கதிர்ச் + சுடர்

B) கதிரின் + சுடர்

C) கதிரவன் + சுடர்

D) கதிர் + சுடர்

29. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) மூச்சு + அடக்கி

B) மூச் + அடக்கி

C) மூச் + சடக்கி

D) மூச்சை + அடக்கி

30. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) பெருமைவனம்

B) பெருவானம்

C) பெருமானம்

D) பேர்வானம்

31. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) அடிக்குமலை

B) அடிக்கும் அலை

C) அடிக்கிலை

D) அடியலை

32. பொருள்களை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் ____________ ஆகும். பொருளை விற்பவர் _________ என்பர். பொருளை வாங்குவோர் __________ ஆவார்.

A) நுகர்வு, நுகர்வோர், வணிகர்

B) வாணிகம், நுகர்வோர், நுகர்வு

C) வணிகம், வணிகர், நுகர்வோர்

D) நுகர்வோர், நுகர்வு, வணிகர்

33. நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்று கொள்வது __________ ஆகும்.

A) உள்நாட்டு வணிகம்

B) வெளிநாட்டு வணிகம்

C) மொத்த வணிகம்

D) பண்டமாற்று வணிகம்

34. நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக __________ பெற்றனர். ஆட்டின் பாலைக் கொடுத்துத் __________ பெற்றனர். இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

A) காய்கறிகள், பழங்கள்

B) பொன், சர்க்கரை

C) உப்பு, தானியம்

D) இவற்றில் ஏதுமில்லை

35. வணிகத்தின் வகைகள் – சரியான கூற்று எது?

I. வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்ட்டன.

II. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர்.

III. கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும்.

IV. கப்பல்கள் வந்து நின்று போகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

36. தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் ____________ விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

A) பூம்புகார்

B) கொற்கை

C) மலபார்

D) இவற்றில் ஏதுமில்லை

37. தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து; பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி; ……….; உமணர் போகலும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

38. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

39. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

40. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில் தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

II. சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

41. _________ இல் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

A) அரேபியா

B) ஆபிரிக்கா

C) ஐரோப்பா

D) ஆஸ்திரேலியா

42. அக்கால வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்தனர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” – என்று ________ நூல் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது.

A) புறநானூறு – 32

B) திருக்குறள் – 120

C) நற்றிணை – 76

D) பட்டினப்பாலை – 65

43. வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று ________________ நூல் பாராட்டுகிறது.

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

44. “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

45. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

46. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______________?

A) நுகர்வோர்

B) தொழிலாளி

C) முதலீட்டாளர்

D) நெசவாளி

47. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________?

A) வணிகசாத்து

B) வணிகம்சாத்து

C) வணிகச்சாத்து

D) வணிகத்துசாத்து

48. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________?

A) பண்டமாற்று

B) பண்டம்மாற்று

C) பண்மாற்று

D) பண்டுமாற்று

49. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________?

A) மின் + னணு

B) மின்ன + அணு

C) மின்னல் + அணு

D) மின் + அணு

50. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________?

A) விரி + வடைந்த

B) விரி + அடைந்த

C) விரிவு + அடைந்த

D) விரிவ் + அடைந்த

51. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.

I. கரன்சி நோட் – பணத்தாள்

II. செக் – காசோலை

III. டிமாண்ட் டிராஃப்ட் – வரவோலை

IV. டிஜிட்டல் – மின்னணு மயம்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

52. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.

I. டெபிட் கார்டு – பற்று அட்டை

II. கிரெடிட் கார்டு – கடன் அட்டை

III. ஆன்லைன் ஷாப்பிங் – இணையத்தள வணிகம்

IV. ஈ-காமர்ஸ் – மின்னணு வணிகம்

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

53. “பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது ____________ என்பவரின் அறிவுரை.

A) பாரதியார்

B) ஒளவையார்

C) உ.வே.சா

D) நாமக்கல் கவிஞர்

54. கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க.

I. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

II. அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். ஆனால், இன்று ‘உ’ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

55. இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ___________ எனப்படும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

56. அவ்வானம்-இம்மலை-இந்நூல்-இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது _____________ எனப்படும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

57. இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு – இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இஃது __________ எனப்படும். இச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

58. அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் – இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது ____________ எனப்படும். இச்சுட்டுக்குரிய எழுத்து ’அ’ ஆகும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

59. அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்குகிறோம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன. இவ்வாறு, அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது ____________ எனப்படும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சுட்டுத்திரிபு

60. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உ ள்ள வற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எ.கா.) உது, உவன்

II. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின்

இறுதியில் இடம்பெறும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

61. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.

II. மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு)

III. மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)

IV. மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – ஏ (ஏன், நீதானே)

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

62. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.

II. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.

III. அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.

IV. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

A) I, II, III மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

63. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.

II. கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

64. கிடைக்கும் பொருள்களின் _______________ கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.

A) அளவை

B) மதிப்பை

C) எண்ணிக்கையை

D) எடையை

65. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. பண்டம் – Commodity

II. கடற்பயணம் – Voyage

III. பயணப்படகுகள் – Ferries

IV. தொழில் முனைவோர் – Entrepreneur

A) I, II மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

66. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. பாரம்பரியம் – Heritage

II. கலப்படம் – Adulteration

III. நுகர்வோர் – Consumer

IV. வணிகர் – Merchant

A) I, II மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6th Tamil Unit 7 Questions

1. புதுமைகள் செய்த தேசமிது; பூமியின் கிழக்கு வாசலிது! தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்; தேசம் உடுத்திய நூலாடை! – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) சங்கொலி, நாமக்கல் கவிஞர்

B) தாராபாரதியின் கவிதைகள், தாராபாரதி

C) எழிலோவியம், வாணிதாசன்

D) உலகியல் நூறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்

2. மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு; மெய்யுணர்வு என்கிற மேலாடை! (புதுமைகள்) காளி தாசனின் தேனிசைப் பாடல்கள் காவிரிக் கரையில் எதிரொலிக்க – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) சங்கொலி, நாமக்கல் கவிஞர்

B) தாராபாரதியின் கவிதைகள், தாராபாரதி

C) எழிலோவியம், வாணிதாசன்

D) உலகியல் நூறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்

3. கம்பனின் அமுதக் கவிதை களுக்குக் கங்கை அலைகள் இசையமைக்க (புதுமைகள்) கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக் காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்! – என்ற பாடல் வரியின் ஆசிரியருடைய இயற்பெயர் என்ன?

A) மீரா (மீ. ராசேந்திரன்)

B) துரைராசு (முடியரசன்)

C) அரங்கசாமி என்ற எத்திராசலு (வாணிதாசன்)

D) இராதாகிருஷ்ணன் (தாராபாரதி)

4. மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! (புதுமைகள்) புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப் புன்னகை செய்த பொற்காலம்! – என்ற பாடல் வரியின் ஆசிரியருடைய இயற்பெயர் என்ன?

A) மீரா (மீ. ராசேந்திரன்)

B) துரைராசு (முடியரசன்)

C) அரங்கசாமி என்ற எத்திராசலு (வாணிதாசன்)

D) இராதாகிருஷ்ணன் (தாராபாரதி)

5. கல்லைக் கூட காவிய மாக்கிக் கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்) அன்னை நாட்டின் அமுத சுரபியில் அன்னிய நாடுகள் பசிதீர அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி அறத்தின் ஊன்று கோலாக புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது! – என்ற பாடல் வரியின் ஆசிரியருடைய அடைமொழிப்பெயர் என்ன?

A) நாமக்கல் கவிஞர் (வெ. இராமலிங்கம் பிள்ளை)

B) பாவலரேறு (பெருஞ்சித்திரனார்)

C) கவிஞாயிறு (தாராபாரதி)

D) இவற்றில் ஏதுமில்லை

6. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

A) வாணிதாசன்

B) தாராபாரதி

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

7. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. தாரா பாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.

II. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

8. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்?

A) திருவாசகம்

B) திருக்குறள்

C) திரிகடுகம்

D) திருப்பாவை

9. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்?

A) காவிரிக்கரை

B) வைகைக்கரை

C) கங்கைக்கரை

D) யமுனைக்கரை

10. கலைக்கூடமாகக் காட்சி தருவது?

A) சிற்பக்கூடம்

B) ஓவியக்கூடம்

C) பள்ளிக்கூடம்

D) சிறைக்கூடம்

11. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) நூல் + ஆடை

B) நூலா + டை

C) நூல் + லாடை

D) நூலா + ஆடை

12. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A) எதிரலிக்க

B) எதிர்ஒலிக்க

C) எதிரொலிக்க

D) எதிர்ரொலிக்க

13. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன – என்ற கூற்று யாருடையது?

A) வாணிதாசன்

B) தாராபாரதி

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

14. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன. குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன – என்ற கூற்று யாருடையது?

A) தாராபாரதி

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

15. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது – என்ற கூற்று யாருடையது?

A) உ.வே.சா

B) திரு.வி.க

C) பாரதிதாசன்

D) தாராபாரதி

16. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடிபடாத இடமே இல்லை. தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் இவர் பற்று வைத்திருந்தார்.

A) அண்ணல் அம்பேத்கர்

B) காந்தியடிகள்

C) நேரு

D) சுபாஷ் சந்திர போஸ்

17. ______________ ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார்.

A) 1913

B) 1923

C) 1929

D) 1919

18. காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்த போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனை எதிர்த்துப் பெரிய போராட்டத்தை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டார். அதைப் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் ____________ அவர்களின் வீட்டில் நடைபெற்றது.

A) பாரதியார்

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) இவற்றில் ஏதுமில்லை

19. “திரு. காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமை தாங்க முடியுமா?” – என்று கேட்டவர் யார்?

A) பாரதியார்

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) வ. உ. சிதம்பரம்பிள்ளை

20. “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?” என்று கேட்டார் காந்தியடிகள். “அது முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியவர் யார்?

A) வ. உ. சிதம்பரம்பிள்ளை

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) பாரதியார்

21. காந்தியடிகளிடம் “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று பாரதியாரை கூறியவர் யார்?

A) வ. உ. சிதம்பரம்பிள்ளை

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) திரு.வி.க

22. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.

II. செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

III. பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார். அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

IV. அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்தக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்துமே சரி

23. காந்தியடிகள் ஒருமுறை _____________ ஊரைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கானாடுகாத்தான் என்னும் ஊரில் அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.

A) காரைக்குடி

B) மானாமதுரை

C) தேவகோட்டை

D) இளையான்குடி

24. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. காந்தியடிகள் ஒருமுறை மதுரையில் தங்கி இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று தலைவர்கள் அவரை அழைத்தனர். “அந்தக் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?” என்று காந்தியடிகள் கேட்டார். அங்கு இருந்தவர்கள் “இல்லை” என்றனர். “அப்படியானால் அங்கே வரமாட்டேன்” என்று கூறிவிட்டார்.

II. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரைக்கு வந்த போதுதான் காந்தியடிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

25. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது.

II. ஆனால், அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது.

III. எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார்.

IV. மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்ததை இதன்மூலம் அறிய முடிகிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்துமே சரி

26. காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். ___________ எழுதிய தமிழ்க் கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். ____________ அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்.

A) ஜி.யு.போப், திருக்குறள்

B) கால்டுவெல், கலிங்கத்துப்பரணி

C) வீரமாமுனிவர், புறநானூறு

D) இவற்றில் ஏதுமில்லை

27. ______________ ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். ______________ என்பவர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார்.

A) 1923, திரு.வி.க

B) 1937, உ.வே.சாமிநாதர்

C) 1940, பாரதியார்

D) 1943, நாமக்கல் கவிஞர்

28. “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் யாரைப் பற்றிக் கூறுகிறார்?

A) நாமக்கல் கவிஞர்

B) திரு.வி.க

C) உ.வே.சாமிநாதர்

D) பாரதியார்

29. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________?

A) கோவை

B) மதுரை

C) தஞ்சாவூர்

D) சிதம்பரம்

30. காந்தியடிகள் ___________ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதிதாசன்

C) உ.வே.சாமிநாதர்

D) பாரதியார்

31. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியவை எவை?

I. இலக்கிய மாநாடு – சென்னை

II. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்

III. குற்றாலம் – அருவி

IV. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III, IV அனைத்தும் தவறு

C) I, II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

32. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த _______________ என்ற மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்.

A) செல்லமுத்து

B) வாஞ்சிநாதன்

C) ஞானதுரை

D) பாரி வேலன்

33. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

I. தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.

II. சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.

III. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.

A) அம்புஜத்தம்மாள்

B) இராணி இலட்சுமிபாய்

C) வேலுநாச்சியார்

D) இராணி மங்கம்மாள்

34. ________________ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் வேலுநாச்சியார் அவர்களின் கணவர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.

A) பாஞ்சாலங்குறிச்சி

B) மன்னார்குடி

C) ஆவுடையார்கோவில்

D) காளையார்கோவில்

35. வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். _______________ என்ற இடத்தில் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.

A) திருச்சி

B) திண்டுக்கல்

C) மதுரை

D) சிவகங்கை

36. எட்டு ஆண்டுகளுக்குப் பின், திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே வீரமங்கை வேலுநாச்சியார் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அமைச்சர் _______________ தளபதிகளாகிய ________________ மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர்.

A) நரசப்பையன், வீரபாண்டியன்

B) தாண்டவராயர், பெரிய மருது, சின்ன மருது

C) வேள்பாரி, பூலித்தேவன்

D) இவர்களில் யாருமில்லை

37. வேலுநாச்சியார் அவர்களுக்கு மைசூரில் இருந்து ஐயாயிரம் குதிரைப் படை வீரர்கள் அனுப்பி உதவி செய்த மன்னனின் பெயர்?

A) இரண்டாம் பாஜிராவ்

B) ஒளரங்கசீப்

C) திப்பு சுல்தான்

D) ஐதர்அலி

38. வேலுநாச்சியார் அவர்கள் ஐதர்அலியைச் சந்திக்க மைசூர் சென்ற போது ___________ மொழியில் ஐதர் அலியுடன் உரையாடினார்.

A) இந்தி

B) பாரசீகம்

C) உருது

D) கன்னடம்

39. காளையார்கோவில் நோக்கி வேலுநாச்சியார் படை புறப்பட்டது. ஆண்கள் படைப்பிரிவுக்கு _______________ பெண்கள் படைப்பிரிவுக்குக் ____________ தலைமை ஏற்றனர்.

A) மருது சகோதரர்கள், குயிலி

B) வீரபாண்டிய கட்டபொம்மன், மாதவி

C) வெள்ளையத்தேவன், காந்திமதி

D) இவர்களில் யாருமில்லை

40. “நாம் சிவகங்கையை இழந்து ______________ ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று வேலுநாச்சியார் கவலை நிறைந்த குரலில் கூறினார்.

A) ஆறு

B) பத்து

C) எட்டு

D) ஒன்பது

41. வேலுநாச்சியார் அவர்களின் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட ஊர்?

A) காளையார்கோவில்

B) புதுக்கோட்டை

C) காரைக்குடி

D) பாஞ்சாலங்குறிச்சி

42. _______________ என்ற இடத்தில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரின் படை தோற்று ஓடியது.

A) காளையார்கோவில்

B) புதுக்கோட்டை

C) காரைக்குடி

D) பாஞ்சாலங்குறிச்சி

43. ______________ திருநாள் அன்று சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்படும். அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம், என்றார் வேலுநாச்சியார்.

A) பொங்கல்

B) தீபாவளி

C) உழைப்பாளர் தினம்

D) விசயதசமி

44. ______________ திருநாள் அன்று சிவகங்கைக் கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.

A) பொங்கல்

B) தீபாவளி

C) உழைப்பாளர் தினம்

D) விசயதசமி

45. வேலுநாச்சியார் அவர்களை காட்டிக் கொடுக்குமாறு ____________ என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள்.

A) கோப்பெருந்தேவி

B) உடையாள்

C) கயல்விழி

D) இவர்களில் யாருமில்லை

46. தம் உடலில் தீ வைத்துக் கொண்டு சிவகங்கைக் கோட்டையில் உள்ள ஆங்கிலேயர் ஆயுதக் கிடங்கில் குதித்து உயிர் நீத்தவர் யார்?

A) கோப்பெருந்தேவி

B) உடையாள்

C) கயல்விழி

D) குயிலி

47. வேலுநாச்சியாரின் காலம்?

A) 1730 – 1796

B) 1740 – 1816

C) 1750 – 1826

D) 1760 – 1836

48. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?

A) 1770

B) 1780

C) 1790

D) 1795

49. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?

A) குயிலி

B) அம்புஜத்தம்மாள்

C) ராணி மங்கம்மாள்

D) வேலு நாச்சியார்

50. தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை ___________ எனப்படும். (எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.

A) இலக்கணம்

B) யாப்பு

C) சொல்

D) இவற்றில் ஏதுமில்லை

51. இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், _____________, உரிச்சொல் என நான்கு வகைப்படும்.

A) காலச்சொல்

B) இடைச்சொல்

C) இலக்கண சொல்

D) இவற்றில் ஏதுமில்லை

52. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் ___________ எனப்படும். (எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

53. வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் ______________ எனப்படும். (எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

54. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் ____________ ஆகும். இது தனித்து இயங்காது. (எ.கா.) உம் – தந்தையும் தாயும், மற்று – மற்றொருவர், ஐ – திருக்குறளை

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

55. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது _______________ ஆகும். (எ.கா.) மா – மாநகரம், சால – சாலச்சிறந்தது

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

56. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக. “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”?

A) கேட்டல்

B) செவிக்கு

C) அவர்

D) மற்று

57. இடைச்சொல் – பொருந்தாதது எது?

A) மா

B) ஐ

C) உம்

D) மற்ற

58. கீழ்க்கண்ட கூற்று யாருடையது?

I. தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார்.

II. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.

A) திருப்பூர் குமரன்

B) பாரதியார்

C) ம.பொ.சிவஞானம்

D) வ.உ.சிதம்பரனார்

59. _______________ ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

A) 1897

B) 1906

C) 1910

D) 1913

60. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

I. ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

II. (எ.கா.) ஓர் ஊர்; ஓர் ஏரி; ஒரு நகரம்; ஒரு கடல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

61. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

I. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

II. (எ.கா.) அஃது இங்கே உள்ளது; அது நன்றாக உள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே தவறு

D) I, II இரண்டுமே சரி

62. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I) நாட்டுப்பற்று – Patriotism

II) இலக்கியம் – Literature

III) கலைக்கூடம் – Art Gallery

IV) மெய்யுணர்வு – Knowledge of Reality

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

63. கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

I. ஓரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

விடை: ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

II. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்.

விடை: ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

III. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

விடை: அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

IV. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.

விடை: அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

V. அது ஒரு இனிய பாடல்.

விடை: அஃது ஒர் இனிய பாடல்.

A) I, II, III மட்டும் சரி

B) III, IV, V மட்டும் சரி

C) I, II, III, IV, V அனைத்துமே சரி

D) I, II, III, IV, V அனைத்துமே தவறு

6th Tamil Unit 8 Questions

1. ____________ நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை. அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை.

A) காப்பியங்கள்

B) இலக்கண நூல்கள்

C) அற இலக்கியங்கள்

D) இவற்றில் ஏதுமில்லை

2. தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்; செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே! அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார் கவிதைகள், பாரதியார்

B) நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர்

C) தாயுமானவர் பாடல்கள், தாயுமானவர்

D) எழிலோவியம், வாணிதாசன்

3. இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே! எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார் கவிதைகள், பாரதியார்

B) நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர்

C) தாயுமானவர் பாடல்கள், தாயுமானவர்

D) எழிலோவியம், வாணிதாசன்

4. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. தண்டருள் – குளிர்ந்த கருணை

II. பணி – தொண்டு

III. கூர் – மிகுதி

IV. எய்தும் – கிடைக்கும்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

5. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. செம்மையருக்கு – சான்றோருக்கு

II. எல்லாரும் – எல்லா மக்களும்

III. ஏவல் – தொண்டு

IV. அல்லாமல் – அதைத்தவிர

A) III, IV மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6. கீழ்க்கண்டவற்றுள் “பராபரமே” என்பதன் பொருள் என்ன?

A) சான்றோர்

B) இறைவன்

C) மேலான பொருளே

D) மனிதன்

7. அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன். – இந்த கூற்று யாருடையது?

A) வள்ளலார்

B) உ.வே.சாமிநாதர்

C) மீனட்சி சுந்தரம்

D) தாயுமானவர்

8. தாயுமானவர், திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் __________________ ஆக பணி புரிந்தார்.

A) அமைச்சர்

B) தலைமைக் கணக்கர்

C) படைத் தளபதி

D) புலவர்

9. தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படும் நூல் எது?

A) திருக்குறள்

B) நளவெண்பா

C) தாயுமானவர் பாடல்கள்

D) பாரதியார் கவிதைகள்

10. தாயுமானவர் பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன. ‘கண்ணி’ என்பது ______________ அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

A) ஒன்று

B) நான்கு

C) இரண்டு

D) ஆறு

11. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) தம்முயிர்

B) தமதுயிர்

C) தம்உயிர்

D) தம்முஉயிர்

12. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________?

A) இன்புற்றிருக்க

B) இன்புறுறிருக்க

C) இன்புற்றுஇருக்க

D) இன்புறு இருக்க

13. ‘தானென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________?

A) தானெ + என்று

B) தான் + என்று

C) தா + னென்று

D) தான் + னென்று

14. ‘சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________?

A) அழிவு

B) துன்பம்

C) சுறுசுறுப்பு

D) சோகம்

15. _______________ மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துகின்றன. மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன.

A) இலக்கியங்கள்

B) அற நூல்கள்

C) காப்பியங்கள்

D) காவியம்

16. வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப் போகாது கொடுப்பவரின் பரிசுடன் அவருக்குச் சமமாக எழுங்கள் சிறகுகளின் மீது எழுவது போல – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேம்பாவணி, வீரமாமுனிவர்

B) தீர்க்கதரிசி, கலீல் கிப்ரான்

C) தாமரைத் தடாகம், கால்டுவெல்

D) இவற்றில் ஏதுமில்லை

17. உழைக்கும்போது நீங்கள் புல்லாங் குழலாகி விடுகிறீர்கள் அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை ஓர் இசையாக மாற்றி விடுகிறது உங்களுக்குள் இருக்கும் நன்மையைப் பற்றித்தான் நான் பேச முடியும் தீமையைப் பற்றியல்ல – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேம்பாவணி, வீரமாமுனிவர்

B) தீர்க்கதரிசி, கலீல் கிப்ரான்

C) தாமரைத் தடாகம், கால்டுவெல்

D) இவற்றில் ஏதுமில்லை

18. உங்கள்சுயத்துடன் நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும்போது நீங்கள் நல்லவர் என்னைப்போல் இரு பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க்கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் சொல்லாது கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு – இப்பாடல் பகுதி கவிஞர் ______________ அவர்கள் மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

A) பிச்சைமூர்த்தி

B) ராஜம் கிருஷ்ணன்

C) அழ. வள்ளியப்பா

D) புவியரசு

19. உங்கள் பேச்சின் போது நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது உறுதியாகக் கால்பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர் – இப்பாடல் பகுதி கவிஞர் ______________ அவர்கள் மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

A) பிச்சைமூர்த்தி

B) ராஜம் கிருஷ்ணன்

C) அழ. வள்ளியப்பா

D) புவியரசு

20. கலீல் கிப்ரான் _____________ நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.

A) ஆஸ்திரேலியா

B) லெபனான்

C) இலங்கை

D) மலேசியா

21. பரிசு பெறும்போது நம் மனநிலை ___________ஆக இருக்கும்.

A) கவலை

B) துன்பம்

C) மகிழ்ச்சி

D) சோர்வு

22. வாழ்வில் உயர கடினமாக _____________ வேண்டும்.

A) பேச

B) சிரிக்க

C) நடக்க

D) உழைக்க

23. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. சுயம் – தனித்தன்மை

II. உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை

III. நவ்வி – பெண்மான்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

24. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதது உணவு.

II. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் உணவு தேடியே உழைக்கின்றன.

III. உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது. அதுவே சிறந்த அறமாகும்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II மட்டும் தவறு

D) III மட்டும் தவறு

25. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” – என்று கூறியவர் யார்?

I. பாரதியார்

II. கண்ணதாசன்

III. பாரதிதாசன்

IV. திரு.வி.க

26. கீழ்க்கண்டவர்களுள் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் யார்?

A) கண்ணகி

B) மணிமேகலை

C) மாதவி

D) தீவதிலகை

27. மணிமேகலையை, மணிபல்லவத் தீவில் கொண்டு வந்து சேர்த்தது யார்?

A) மணிமேகலா தெய்வம்

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) சமணத் துறவி

28. நான் இத்தீவையும் இதிலுள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வருகிறேன். பெருமை மிக்கவர்கள் மட்டுமே இத்தீவிற்கு வந்து இந்தப் புத்த பீடிகையை வணங்க முடியும் என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) அசரீரி

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) சமணத் துறவி

29. நம் எதிரில் பூக்கள் நிறைந்து விளங்கும் இந்தப் பொய்கையைப் பார். இதற்குக் கோமுகி என்று பெயர். கோ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது – என்று தீவதிலகை யாரிடம் கூறினார்?

A) அசரீரி

B) மணிமேகலை

C) கண்ணகி

D) புத்த துறவி

30. கோமுகி பொய்கையில் _____________ முழு நிலவு நாளில் நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்.

A) சித்திரைத் திங்கள்

B) வைகாசித் திங்கள்

C) ஆனித் திங்கள்

D) ஆடித் திங்கள்

31. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது?

அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

A) அட்சய பாத்திரம்

B) தங்கத்தட்டு

C) அமுதசுரபி

D) இவற்றில் ஏதுமில்லை

32. கோமுகி பொய்கையின் நீருக்குமேல் தோன்றிய ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரத்தை வணங்கிக் கையில் எடுத்தவர் யார்?

A) புத்த துறவி

B) மணிமேகலை

C) தீவதிலகை

D) இவர்களில் யாருமில்லை

33. மணிமேகலையே! உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக! – என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) அசரீரி

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) ஆதிரை

34. உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கக் கூடிய திறன்வல்ல அமுதசுரபியை பெற்ற பிறகு, யாரிடம் உணவு பெறச் செல்கிறாள் மணிமேகலை?

A) பூம்புகார் ஊர் மக்களிடம்

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) ஆதிரை

35. ‘அமுதசுரபி’ முதன்முதலில் யாரிடம் இருந்தது?

A) அறவண அடிகள்

B) தீவதிலகை

C) மணிமேகலா தெய்வம்

D) ஆபுத்திரன்

36. மணிமேகலையின் பெற்றோர் யார்?

A) கோவலன் – கண்ணகி

B) கோவலன் – மாதவி

C) தெய்வக்குழந்தை

D) இவற்றில் ஏதுமில்லை

37. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு __________?

A) இலங்கைத் தீவு

B) இலட்சத் தீவு

C) மணிபல்லவத் தீவு

D) மாலத் தீவு

38. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ___________?

A) சித்திரை

B) ஆதிரை

C) காயசண்டிகை

D) தீவதிலகை

39. _______________ அமுதசுரபியில் உணவை இடுகிறாள். ______________ அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு உணவு அளிக்கிறாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிடுகிறாள்.

A) சித்திரை, மணிமேகலா தெய்வம்

B) ஆதிரை, மணிமேகலை

C) காயசண்டிகை, அறவண அடிகள்

D) தீவதிலகை, ஆபுத்திரன்

40. அன்பிற்குரிய ஆதிரையே, ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால், இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன் – என்று கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) பூம்புகார் மன்னன்

C) காயசண்டிகை

D) தீவதிலகை

41. உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ! இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன் – என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) காயசண்டிகை

D) ஆபுத்திரன்

42. அன்பால் ஆட்சி செய்யும் அரசே! சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும். சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் – என்று மன்னரிடம் கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) அறவண அடிகள்

C) ஆதிரை

D) ஆபுத்திரன்

43. மாதவம் செய்தவளே! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய். நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா? – என்று மன்னர் யாரிடம் வினவினார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) மணிமேகலை

D) ஆபுத்திரன்

44. வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா! – என்று மன்னரிடம் கூறியவர் யார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) மணிமேகலை

D) ஆபுத்திரன்

45. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கதையை

விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

II. அதிலும் நம்ப

முடியாத கற்பனைகளைக் கொண்ட விந்தைக் கதைகள்

அனைவரையும் கவரும்.

III. கதையில் சிறந்த கருத்தும்

கூறப்படுமானால் அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை

பொழிந்தது போல மேலும் சுவையாக இருக்கும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி.

46. “பாதம்” – என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) மணல் வீடு, சி.சு.செல்லப்பா

B) தாவரங்களின் உரையாடல், எஸ்.ராமகிருஷ்ணன்

C) கனவு, ராஜம் கிருஷ்ணன்

D) இவர்களில் யாருமில்லை

47. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

II. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.

III. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

48. ‘பாதம்’ என்னும் சிறுகதையில் மாரியிடம், விசித்திரமான காலணியை கொடுத்தது யார்?

A) சினிமா தியேட்டர் உரிமையாளர்

B) சிறுமி

C) தேநீர் கடைக்காரர்

D) வழிப்போக்கன்

49. ‘பாதம்’ என்னும் சிறுகதையில் மாரி செய்த தொழில் என்ன?

A) தேநீர் வியாபாரம்

B) கூலித்தொழில்

C) காலணி தைக்கும் தொழில்

D) இவற்றில் ஏதுமில்லை

50. மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ____________ வகைப்படும்.

A) 4

B) 5

C) 6

D) 7

51. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

II. பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவையாவன: பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II அனைத்தும் தவறு

D) I, II அனைத்தும் சரி

52. பொருளைக் குறிக்கும் பெயர் _______________ எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும். (எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) பொருட்பெயர்

53. ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் _____________ எனப்படும். (எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) பொருட்பெயர்

54. காலத்தைக் குறிக்கும் பெயர் ___________ எனப்படும். (எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

55. பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) கண், கை, இலை, கிளை.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

56. பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

57. தொழிலைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

A) தொழிற்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

58. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம் – சரியானது எது?

I. காவியா புத்தகம் படித்தாள் – பொருட்பெயர்; காவியா பள்ளிக்குச் சென்றாள் – இடப்பெயர்

II. காவியா மாலையில் விளையாடினாள் – காலப்பெயர்; காவியா தலை அசைத்தாள் – சினைப்பெயர்.

III. காவியா இனிமையாகப் பேசுவாள் – பண்புப்பெயர்; காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

59. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

II. இடுகுறிப்பெயர்: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று

III. இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

60. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. இடுகுறிப் பொதுப்பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) மரம், காடு.

II. இடுகுறிச் சிறப்புப்பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும். (எ.கா.) மா, கருவேலங்காடு.

A) I, II அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) I, II இரண்டும் தவறு

61. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. காரணப்பெயர்: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை

II. காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.

III. காரணப் பொதுப்பெயர்: காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) பறவை, அணி

IV. காரணச் சிறப்புப்பெயர்: குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

62. இடுகுறிப்பெயரை குறிப்பிடுக.

A) பறவை

B) மண்

C) முக்காலி

D) மரங்கொத்தி

63. காரணப்பெயரை குறிப்பிடுக.

A) மரம்

B) வளையல்

C) சுவர்

D) யானை

64. இடுகுறிச்சிறப்புப் பெயரை குறிப்பிடுக.

A) வயல்

B) வாழை

C) மீன்கொத்தி

D) பறவை

65. பறவை, அணி – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

66. நாற்காலி, கரும்பலகை – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

67. வளையல், மரங்கொத்தி – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

68. மா, கருவேலங்காடு – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

69. மரம், காடு – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) இடுகுறிப் பொதுப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

70. அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்; துன்புறும் உயிர்கள் கண்டால்; துரிசறு கனிவு காண்போம்; வன்புகழ் கொடையிற் காண்போம்; வலிமையைப் போரில் காண்போம்; தன்பிறப் புரிமை யாகத் தமிழ்மொழி போற்றக் காண்போம் – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர்

B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

C) நாமக்கல் கவிஞர்

D) கண்ணதாசன்

71. நீதிநூல் பயில் என்கிறார் ________?

A) பாரதியார்

B) திருவள்ளுவர்

C) நாமக்கல் கவிஞர்

D) வாணிதாசன்

72. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. பொருட்பெயர்: பாரதியார், நீதிநூல், புத்தகம்

II. இடப்பெயர்: தெருவில், மதுரை

III. காலப்பெயர்: மாலை, துயில்

IV. சினைப்பெயர்: கைகள்

V. பண்புப்பெயர்: அன்பு, நன்மை

VI. தொழிற்பெயர்: அடைதல், கற்றல்

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) V, VI மட்டும் சரி

D) I, II, III, IV, V, VI அனைத்தும் சரி

73. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. அறக்கட்டளை – Trust

II. தன்னார்வலர் – Volunteer

III. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross

IV. சாரண சாரணியர் – Scouts & Guides

V. சமூகப் பணியாளர் – Social Worker

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) V மட்டும் சரி

D) I, II, III, IV, V அனைத்தும் சரி

74. விடுபட்டதை நிரப்புக.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் _________ __________ _________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

75. விடுபட்டதை நிரப்புக.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் _________ ________ _________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

76. விடுபட்டதை நிரப்புக.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் _______ ________ ________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

77. விடுபட்டதை நிரப்புக.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை ________ _______ ________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

78. விடுபட்டதை நிரப்புக.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

79. விடுபட்டதை நிரப்புக.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

80. விடுபட்டதை நிரப்புக.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!