General Tamil

6th Tamil Unit 6 Questions

11. வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் – அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்! – என்ற பாடல் வரியின் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார்

B) மீ. ராசேந்திரன்

C) தாரா பாரதி

D) முடியரசன்

12. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ____________?

A) மகிழ்ச்சி

B) துன்பம்

C) வீரம்

D) அழுகை

13. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________?

A) கல் + அடுத்து

B) கல் + எடுத்து

C) கல் + லடுத்து

D) கல் + லெடுத்து

14. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________?

A) நா + னிலம்

B) நான்கு + நிலம்

C) நா + நிலம்

D) நான் + நிலம்

15. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________?

A) நாடென்ற

B) நாடன்ற

C) நாடுஎன்ற

D) நாடுஅன்ற

16. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________?

A) கலம்ஏறி

B) கலமறி

C) கலன்ஏறி

D) கலமேறி

17. விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா, விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா, அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா, அருமைமேகம் நமதுகுடை – ஐலசா, வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா, விண்ணின்இடி காணும்கூத்து – ஐலசா, பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா, பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா – என்ற பாடல்வரி பற்றிய சரியான கூற்று எது?

A) இப்பாடல் ஜானகிராமன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

B) இப்பாடல் க. வைகுண்டம் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

C) இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

D) இப்பாடல் சாமிநாதன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

18. காயும்கதிர்ச் சுடர்கூரை – ஐலசா, கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா, மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா, பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் – ஐலசா, முழுநிலவே கண்ணாடி – ஐலசா, மூச்சடக்கும்நீச்சல் யோகம் – ஐலசா, தொழும்தலைவன் பெருவானம் – ஐலசா, துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா – என்ற பாடல்வரி பற்றிய சரியான கூற்று எது?

A) இப்பாடல் ஜானகிராமன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

B) இப்பாடல் க. வைகுண்டம் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

C) இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

D) இப்பாடல் சாமிநாதன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

19. நெய்தல் திணை – பற்றிய சரியான கூற்று எது?

I. நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்

II. மக்கள் : பரதவர், பரத்தியர்

III. தொழில் : மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

IV. பூ : தாழம்பூ

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

20. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி

II. மின்னல்வரி – மின்னல் கோடு

III. அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

Previous page 1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!