General Tamil

6th Tamil Unit 6 Questions

21. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

II. ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.

A) I சரி II தவறு

B) I தவறு II சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

22. நானிலம் படைத்தவன் என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

A) பூங்கொடி

B) புதியதொரு விதி செய்வோம்

C) புதிய விதி செய்வோம்

D) காவியப்பாவை

23. மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் ___________ அவர்களுக்கு __________ விளக்குகளாகும்.

A) மீனவர்கள், நிலா ஒளியே

B) மீனவர்கள், எண்ணெய் விளக்கே

C) மீனவர்கள், விண்மீன்களே

D) மீனவர்கள், நட்சத்திரங்களே

24. மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விரிந்த கடலே ______________கடல் அலையே ____________ வெண்மையான மணலே படுத்துறங்கும் ___________.

A) தோழன், பள்ளிக்கூடம், மெத்தை

B) பள்ளிக்கூடம், மெத்தை, தோழன்

C) பள்ளிக்கூடம், தோழன், பஞ்சு மெத்தை

D) பஞ்சு மெத்தை, தோழன், பள்ளிக்கூடம்

25. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விண்ணின் இடி அவர்கள் காணும் ___________ சீறிவரும் புயலே விளையாடும் _____________ பனிமூட்டம்தான் உடலை சுற்றும் _____________.

A) ஊஞ்சல், துணி, வேடிக்கை

B) வேடிக்கை, ஊஞ்சல், போர்வை

C) கூத்து, ஊஞ்சல், போர்வை

D) வேடிக்கை, போர்வை, ஊஞ்சல்

26. மீனவர்களுக்கு அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் __________ கட்டுமரம்தான் அவர்களது ___________ மின்னல் கோடுகளே ___________.

A) வெளிச்சம், வேலை, பயம்

B) வெளிச்சம், வீடு, பயம்

C) மேற்கூரை, வாழும் வீடு, அடிப்படை பாடம்

D) மேற்கூரை, அடிப்படை பாடம், பயம்

27. மீனவர்களுக்கு வலைவீசிப் பிடிக்கும் மீன்களே _______________ அவர்களுக்கு தெரிகின்ற முழு நிலவு தான் _________________ மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் ___________ ஆகும்.

A) கண்ணாடி, தவம், செல்வம்

B) தவம், செல்வம், கண்ணாடி

C) செல்வம், கண்ணாடி, தவம்

D) கண்ணாடி, செல்வம், தவம்

28. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) கதிர்ச் + சுடர்

B) கதிரின் + சுடர்

C) கதிரவன் + சுடர்

D) கதிர் + சுடர்

29. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) மூச்சு + அடக்கி

B) மூச் + அடக்கி

C) மூச் + சடக்கி

D) மூச்சை + அடக்கி

30. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) பெருமைவனம்

B) பெருவானம்

C) பெருமானம்

D) பேர்வானம்

Previous page 1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!