General Tamil

6th Tamil Unit 6 Questions

31. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) அடிக்குமலை

B) அடிக்கும் அலை

C) அடிக்கிலை

D) அடியலை

32. பொருள்களை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் ____________ ஆகும். பொருளை விற்பவர் _________ என்பர். பொருளை வாங்குவோர் __________ ஆவார்.

A) நுகர்வு, நுகர்வோர், வணிகர்

B) வாணிகம், நுகர்வோர், நுகர்வு

C) வணிகம், வணிகர், நுகர்வோர்

D) நுகர்வோர், நுகர்வு, வணிகர்

33. நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்று கொள்வது __________ ஆகும்.

A) உள்நாட்டு வணிகம்

B) வெளிநாட்டு வணிகம்

C) மொத்த வணிகம்

D) பண்டமாற்று வணிகம்

34. நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக __________ பெற்றனர். ஆட்டின் பாலைக் கொடுத்துத் __________ பெற்றனர். இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

A) காய்கறிகள், பழங்கள்

B) பொன், சர்க்கரை

C) உப்பு, தானியம்

D) இவற்றில் ஏதுமில்லை

35. வணிகத்தின் வகைகள் – சரியான கூற்று எது?

I. வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்ட்டன.

II. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர்.

III. கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும்.

IV. கப்பல்கள் வந்து நின்று போகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

36. தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் ____________ விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

A) பூம்புகார்

B) கொற்கை

C) மலபார்

D) இவற்றில் ஏதுமில்லை

37. தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து; பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி; ……….; உமணர் போகலும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

38. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

39. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

40. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில் தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

II. சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

Previous page 1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!