General Tamil

6th Tamil Unit 6 Questions

41. _________ இல் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

A) அரேபியா

B) ஆபிரிக்கா

C) ஐரோப்பா

D) ஆஸ்திரேலியா

42. அக்கால வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்தனர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” – என்று ________ நூல் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது.

A) புறநானூறு – 32

B) திருக்குறள் – 120

C) நற்றிணை – 76

D) பட்டினப்பாலை – 65

43. வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று ________________ நூல் பாராட்டுகிறது.

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

44. “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

45. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

46. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______________?

A) நுகர்வோர்

B) தொழிலாளி

C) முதலீட்டாளர்

D) நெசவாளி

47. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________?

A) வணிகசாத்து

B) வணிகம்சாத்து

C) வணிகச்சாத்து

D) வணிகத்துசாத்து

48. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________?

A) பண்டமாற்று

B) பண்டம்மாற்று

C) பண்மாற்று

D) பண்டுமாற்று

49. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________?

A) மின் + னணு

B) மின்ன + அணு

C) மின்னல் + அணு

D) மின் + அணு

50. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________?

A) விரி + வடைந்த

B) விரி + அடைந்த

C) விரிவு + அடைந்த

D) விரிவ் + அடைந்த

Previous page 1 2 3 4 5 6 7Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!