General Tamil

6th Tamil Unit 9 Questions

11. நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ? எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர். – என்று கூறியவர் யார்?

A) சமணத் துறவி

B) புத்தர்

C) பாண்டிய மன்னன்

D) அசோகர்

12. காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா? – என்று கூறியவர் யார்?

A) இளங்கோவடிகள்

B) வள்ளலார்

C) பாரதியார்

D) புத்தர்

13. ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு, ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது. ஆகையால், தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள். – என்று கூறியவர் யார்?

A) இளங்கோவடிகள்

B) வள்ளலார்

C) பாரதியார்

D) புத்தர்

14. தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். ___________ ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

A) 15

B) 28

C) 33

D) 40

15. கீழ்க்கண்டவர்களுள் கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் யார்?

A) பாரதியார்

B) தேசிக விநாயகனார்

C) இராமலிங்கனார்

D) வாணிதாசன்

16. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் __________ என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

A) வில்லியம் சேக்சுபியர்

B) வால்ட் விட்மன்

C) எட்வின் அர்னால்டு

D) இவர்களில் யாருமில்லை

17. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் _____________?

A) ஜீவ ஜோதி

B) ஆசிய ஜோதி

C) நவ ஜோதி

D) ஜீவன் ஜோதி

18. நேர்மையான வாழ்வை வாழ்பவர் _____________?

A) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

B) உயிர்களைத் துன்புறுத்துபவர்

C) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்

D) தம் குடும்பத்தையே எண்ணிவாழ்பவர்

19. ஒருவர் செய்யக் கூடாதது ______________?

A) நல்வினை

B) தீவினை

C) பிறவினை

D) தன்வினை

20. ‘எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________?

A) எளிது + தாகும்

B) எளி + தாகும்

C) எளிது + ஆகும்

D) எளிதா + ஆகும்

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!