General Tamil

6th Tamil Unit 9 Questions

31. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது – என்று கூறியவர் யார்?

A) கைலாஷ் சத்யார்த்தி

B) விவேகானந்தர்

C) ஜவஹர்லால் நேரு

D) இவர்களில் யாருமில்லை

32. கைலாஷ் சத்யார்த்தி அவர்களைப்பற்றிய சரியான கூற்று எது?

I. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி.

II. குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார். கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பத்து ஆறாயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்.

III. உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார். குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார்.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

33. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ____________?

A) மனித வாழ்க்கை

B) மனித உரிமை

C) மனித நேயம்

D) மனித உடைமை

34. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ____________ காட்டியவர் வள்ளலார்.

A) கோபம்

B) வெறுப்பு

C) கவலை

D) அன்பு

35. அன்னை தெரசாவிற்கு ____________ க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது.

A) பொருளாதாரம்

B) இயற்பியல்

C) மருத்துவம்

D) அமைதி

36. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ___________?

A) குழந்தைகளைப் பாதுகாப்போம்

B) குழந்தைகளை நேசிப்போம்

C) குழந்தைகளை வளர்ப்போம்

D) குழந்தைகள் உதவி மையம்

37. சரியாகப் பொருந்தியது எது?

I. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்

II. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

III. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

38. முடிவில் ஒரு தொடக்கம் என்ற கதை தொடர்பான சரியான கூற்று எது?

I. மனித நேயத்தின் மகத்தான சாதனையாகத் தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் தந்த இக்கால வள்ளல்கள் தாம் அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினர். சிறுமிக்குப் பொருத்தப்பட்ட இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் ஹிதேந்திரன்.

II. பிறந்த போது பெற்றோரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் ஹிதேந்திரன் என்று பெயரிடப்பட்டான்.

III. அவன் இறந்த போது உலகத்தார் இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்டான். இதயம் கொடுத்து இதயங்களை வென்ற ஹிதேந்திரனை இவ்வுலகம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

39. கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர். இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும். அணி என்பதற்கு _____________ என்பது பொருள்.

A) அழகு

B) அன்பு

C) வரிசை

D) இவற்றில் ஏதுமில்லை

40. கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது ____________ ஆகும்.

A) அழகு

B) அன்பு

C) வரிசை

D) அணி

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!