General Tamil

6th Tamil Unit 9 Questions

41. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் ____________ என்றும் கூறுவர்.

A) குணம் நவிற்சி அணி

B) தன்மை நவிற்சி அணி

C) இலக்கண நவிற்சி அணி

D) இவற்றில் ஏதுமில்லை

42. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்? மற்றும் பாடலில் பயின்று வரும் அணி எது?

A) கவிமணி தேசிக விநாயகனார், இயல்பு நவிற்சி அணி

B) பாரதியார், ஏகதேச உருவாக அணி

C) பாரதிதாசன், உவமை அணி

D) வாணிதாசன், வஞ்சப் புகழ்ச்சி அணி

43. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது _________ ஆகும்.

A) வஞ்சப் புகழ்ச்சி அணி

B) உவமை அணி

C) உயர்வு நவிற்சி அணி

D) ஏகதேச உருவாக அணி

44. குளிர்நீரில் குளித்தால் கூதல் அடிக்குமென்று வெந்நீரில் குளித்தால் மேல கருக்குமென்று ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா – இந்த பாடலில் பயின்று வரும் அணி எது?

A) இயல்பு நவிற்சி அணி

B) ஏகதேச உருவாக அணி

C) உவமை அணி

D) உயர்வு நவிற்சி அணி

45. ஆறு சக்கரம் நூறு வண்டி, அழகான ரயிலு வண்டி, மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது உப்புப் பாரம் ஏத்தும் வண்டி உப்பிலிப் பாளையம் போகும் வண்டி – இந்த பாடலில் பயின்று வரும் அணி எது?

A) இயல்பு நவிற்சி அணி

B) ஏகதேச உருவாக அணி

C) உவமை அணி

D) உயர்வு நவிற்சி அணி

46. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. மனிதநேயம் – Humanity

II. கருணை – Mercy

III. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation

IV. சரக்குந்து – Lorry

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) IV மட்டும் சரி

47. முடிவில் ஒரு தொடக்கம் என்னும் கதையானது எதனைப் பற்றி விவரிக்கிறது?

A) வாழ்க்கையின் துன்பம்

B) இரத்ததானம்

C) உடல் உறுப்புதானம்

D) கண் தானம்

48. மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதுவது எதனை?

A) இரத்த தானம்

B) நன்கொடை

C) கண் தானம்

D) உடல் உறுப்புதானம்

49. மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதப்படும் உடல் உறுப்பு தானத்துக்கு தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் கொடுத்த தம்பதியினரின் பெயர் என்ன?

A) அசோகன் – புஷ்பாஞ்சலி

B) கணேசன் – ராதா

C) ராம்கி – கல்யாணி

D) சுரேந்தர் – நித்யா

50. முடிவில் தொடக்கம் கதையில் யாருக்கு இதயம் தேவைப்பட்டது?

A) இளைஞனுக்கு

B) பெண்ணுக்கு

C) சிறுமிக்கு

D) பெரியவருக்கு

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!