General Tamil

6th Tamil Unit 9 Questions

21. ‘பாலையெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________?

A) பாலை + யெல்லாம்

B) பாலை + எல்லாம்

C) பாலை + எலாம்

D) பா + எல்லாம்

22. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) இன்உயிர்

B) இனியஉயிர்

C) இன்னுயிர்

D) இனிமைஉயிர்

23. மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) மலைஎலாம்

B) மலையெலாம்

C) மலையெல்லாம்

D) மலைஎல்லாம்

24. எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும். மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை, “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்று கூறும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) அகநானூறு

B) கலித்தொகை

C) புறநானூறு

D) நளவெண்பா

25. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” – என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) இளங்கோவடிகள்

C) சயம்கொண்டார்

D) வள்ளலார்

26. வள்ளலார் வாழ்வில் நடந்ததாக கூறப்படும் நிகழ்வில் சரியானது எது?

I. வள்ளலார் தம் இளம் வயதில் ஒருநாள் நடந்து வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்ததால் களைப்பு ஏற்பட்டது. எனவே ஓய்வெடுக்க விரும்பினார். வழியில் சத்திரம் ஒன்று இருந்தது. அதன் திண்ணையில் படுத்து உறங்கினார்.

II. அப்போது ஒருவன் அங்கு வந்தான். படுத்திருந்த வள்ளலாரின் காதில் கடுக்கன் இருப்பதைக் கண்டான். அதனைத் தனதாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். தங்கக்கடுக்கனை மெதுவாகக் கழற்றினான். அவனது செயலை அறிந்தும் வள்ளலார் கண் மூடியபடியே படுத்திருந்தார்.

III. ஒரு கடுக்கனைக் கழற்றியவுடன், மறுகாதில் உள்ள கடுக்கனை அவன் கழற்றுவதற்கு ஏதுவாகத் திரும்பிப் படுத்தார். அவன் அதையும் கழற்றிக் கொண்டு, அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல முற்பட்டான்.

IV. அப்போது வள்ளலார் மென்மையான குரலில், “அப்பா, இவை இரண்டும் தங்கக்கடுக்கன்கள். குறைந்த விலைக்கு விற்றுவிடாதே! மேலும், ஒரு கடுக்கனுடன் சென்றால் உன்னைத் திருடன் என எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். எனவேதான் இரண்டு கடுக்கன்களையும் நீ எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பாகத் திரும்பிப் படுத்தேன்” என்றார். வள்ளலார் கூறியதைக் கேட்ட அவன் வெட்கித் தலைகுனிந்தான். இவ்வாறு தம்பொருளைக் கவர்ந்தவரிடம் கூட அன்பு காட்டியவர் வள்ளலார்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III, IV அனைத்தும் தவறு

27. வள்ளலார் மக்களின் பசிப்பிணியைக் கண்டு உள்ளம் வாடினார். அதனை நீக்க விரும்பினார். தம் பெருமுயற்சியால் _____________ என்ற இடத்தில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்.

A) அரியலூர்

B) பெரம்பலூர்

C) வடலூர்

D) வண்டலூர்

28. பசித்தோருக்கு உணவு வழங்கும் வள்ளலாரின் மனிதநேயச் செயல் இன்றும் _____________ என்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

A) அரியலூர்

B) பெரம்பலூர்

C) வடலூர்

D) வண்டலூர்

29. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?

மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார். அதனால் அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது. இவர் தொழுநோய் பாதித்தவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவிகள் பல செய்துள்ளார்.

A) மலாலா யூசப்சையி

B) கைலாஷ் சத்யார்த்தி

C) அன்னை தெரசா

D) இவர்களில் யாருமில்லை

30. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை – என்று கூறியவர் யார்?

A) அன்னை தெரசா

B) கைலாஷ் சத்யார்த்தி

C) பாரதியார்

D) காந்தியடிகள்

Previous page 1 2 3 4 5 6Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!