General TamilTnpsc

General Tamil Model Question Paper 11

31. “களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக்கடனே” என்ற அடி இடம் பெற்ற நூல்

(அ) பதிற்றுப்பத்து

(ஆ) பரிபாடல்

(இ) பட்டினப்பாலை

(ஈ) புறநானூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) புறநானூறு

புறநானூற்றில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலை இயற்றியவர் பொன்முடியார்.

32. “குறுந்தொகை” என்ற நூலைத் தொகுத்தவர்

(அ) கூடலூர்க் கிழார்

(ஆ)உருத்திரசன்மர்

(இ) பூரிக்கோ

(ஈ) பெருந்தேவனார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பூரிக்கோ

குறுந்தொகை என்ற தொகை நூலைத் தொகுத்தவர் பெயர் பூரிக்கோ. இத்தொகை நூலைப் பாடியோர் இரு நூற்றவைர். கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

33. “செல்வத்துப் பயனே ஈதல்” எனப் பாடியவர்

(அ) திருவள்ளுவர்

(ஆ) நக்கீரனார்

(இ) கபிலர்

(ஈ) ஒளவையார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நக்கீரனார்

புறநானூறு

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி உLப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓர்ஓக் கும்மே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே – நக்கீரனார்

பொருள்: இவ்வுலகம், தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டது. இவ்வுலகம் முழுவதனையும் பொதுவின்றித் தனதாக்கி ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்பவன் மன்னன். அவனுக்கும், நள்ளிரவிலும் பகலிலும் உறங்காது விரைந்தோடும் விலங்குகளை வேட்டையாடிவீழ்த்த எண்ணுகின்ற கல்வியறிவற்ற ஒருவனுக்கும். உண்ணத் தேவைப்படும் பொருள் நாழியளவே; உடுத்தும் உடை மேலாடையும் இடுப்பாடையும் இரண்டே. மற்றவை எல்லாமும் இவ்வாறாகவே அமையும். ஆகவே, ஒருவன் தனது செல்வத்தினால் பெறும் பயன், அதனை மற்றவர்க்கும் கொடுத்தலாகும். அவ்வாறன்றித் தாமே நுகர்வோம் என எண்ணினால், பலவற்றை அவன் இழக்க நேரிடும்

34. பொருந்தா இணையைத் தேர்க:

சொல் பொருள்

(அ) கா – சோலை

(ஆ) க – சாலை

(இ) மா – விலங்கு

(ஈ) மீ – உயர்ச்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) க – சாலை

35. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: இளமையில் கல்

(அ) பிறவினை வாக்கியம்

(ஆ) கலவை வாக்கியம்

(இ) கட்டளை வாக்கியம்

(ஈ) வினா வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கட்டளை வாக்கியம்

36. பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க:

உவமைத்தொகை

(அ) தமிழன்னை

(ஆ) மதிமுகம்

(இ) மலர்ப்பாதம்

(ஈ) கல்திரள்தோள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தமிழன்னை

37. பின்வருவனவற்றுள் எது அண்ணாவின் படைப்பு அன்று?

(அ) வேலைக்காரி

(ஆ) ஓர் இரவு

(அ) தமிழன்னை

(ஈ) செவ்வாழை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) தமிழன்னை

குறட்டை ஒலி-மு.வரதராசன்

38. “கற்கின்றனர்” என்னும் நிகழ்கால வினைமுற்றின் வேர்ச்சொல்

(அ) கற்க

(ஆ) கற்ற

(இ) கற்று

(ஈ) கல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கல்

கல்-வேர்ச்சொல்; கற்க-வியங்கோள் வினைமுற்று.

கற்று-வினையெச்சம்; கற்ற-பெயரெச்சம்

39. பின்வருவனவற்றுள் எவை இணையில்லை?

(அ) முதல் கலம்பகம்-நந்திக் கலம்பகம்

(ஆ) முதல் பரணி-தக்கயாகப்பரணி

(இ) முதல் நாவல்-பிரதாப முதலியார் சரித்திரம்

(ஈ) முதல் உலா-திருக்கையிலாய ஞான உலா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) முதல் பரணி-தக்கயாகப்பரணி

முதல் பரணி ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி ஆகும்.

40. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள்-எனக் கூறியவர்

(அ) இராமலிங்க அடிகள்

(ஆ) இரா.பி.சேதுபிள்ளை

(இ) நாமக்கல்-இராமலிங்கம் பிள்ளை

(ஈ) முத்துராமலிங்கத் தேவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) முத்துராமலிங்கத் தேவர்

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!