General TamilTnpsc

General Tamil Model Question Paper 11

51.”உண்மைநெறி விளக்கம்” என்ற நூலை எழுதியவர்

(அ) அருணந்தி சிவாசாரியார்

(ஆ) மறைஞான சம்பந்தர்

(இ) உமாபதி சிவாசாரியார்

(ஈ) மெய்கண்ட தேவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) உமாபதி சிவாசாரியார்

உண்மைநெறி விளக்கம் என்பது தமிழில் எழுதப்பட்ட சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றாகும். இந்நூலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.

52. முதன்முதலில் தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டவர்

(அ) எல்லீஸ் துரை

(ஆ) சீகன்பால்க் ஐயர்

(இ) இரேனியுஸ் ஐயர்

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சீகன்பால்க் ஐயர்

தமிழகத்திலுள்ள தரங்கமபாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரங்களை பயன்படுத்தி தமிழ்ப்புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டவர் சீகன்பால்க் ஐயர் ஆவர். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். தமிழில்

இவர் அச்சிட்ட முதல் நூல் பைபிள் ஆகும்.

53. ஆறுமுக நாவலருக்கு “நாவலர்” பட்டம் வழங்கியவர்.

(அ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை

(ஆ) திருவாவடுதுறை ஆதீனம்

(இ) இராமலிங்க அடிகள்

(ஈ) கோபால கிருஷ்ண பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருவாவடுதுறை ஆதீனம்

ஆறுமுகநாவலர் சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக அயராது உழைத்தார். அவரின் கல்விப் புலமையும், நாவன்மையையும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு “நாவலர்” பட்டத்தை வழங்கியது.

54. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று A: குற்றியலுகரம் சார்பெழுத்துகளுள் ஒன்று, ஈற்றயலெழுத்தை நோக்க ஆறு வகைப்படும்.

காரணம் R: ஒரு சொல்லின் ஈற்றில் “உகர” உயிர்மெய் எழுத்து வரின் குற்றியலுகரம் எனப்படும்

(அ) A மற்றும் R இரண்டும் சரி. A மேலும் R க்கு சரியான விளக்கமாகும்.

(ஆ) A சரி R தவறு. மேலும் A க்கு R சரியான விளக்கமன்று

(இ) A தவறு R சரி. மேலும் R விளக்கத்திற்கு A சரியான தொடர் அன்று

(ஈ) A மற்றும் R இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) A சரி R தவறு. மேலும் A க்கு R சரியான விளக்கமன்று

55. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று A : உயிரளபெடை வகைகளுள் ஒன்று இன்னிசையளபெடை. மூன்று மாத்திரையாக ஒலிக்கும்.

காரணம் R : செய்யுளில் ஓசை குறையாத போதும் இனிய இசைக்காக அளபெடுப்பது இன்னிசையளபெடை.

(அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் A க்கு R சரியான விளக்கமாகும்.

(ஆ) A மற்றும் R இரண்டும் தவறு

(இ) A சரி R தவறு. மேலும் A க்கு R சரியான விளக்கமன்று

(ஈ) A தவறு R சரி. R விளக்கத்திற்கு பொருத்தமான தொடராக A அமையவில்லை.

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் A க்கு R சரியான விளக்கமாகும்.

56. கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று A : கருப்பொருள்களுள் ஒன்று “பறை” ஆகும்.

காரணம் R : குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள்களுள் ஒன்றாக “தொண்டகப்பறையையும்” முல்லை நிலத்தின் கருப்பொருள்களுள் ஒன்றாக “மணமுழாபறையையும்” குறிப்பிடுகிறது அகப்பொருள்.

(அ) கூற்று A தவறு. விளக்கம் R சரி

(ஆ) கூற்று சரி. விளக்கம் R தவறு

(இ) விளக்கம் R தவறு. கூற்று A தவறு

(ஈ) விளக்கம் R சரி. கூற்று A சரி.

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கூற்று சரி. விளக்கம் R தவறு

குறிஞ்சி நிலத்தின் பறை-தொண்டகப்பறை.

முல்லை நிலத்தின் பறை-ஏறுங்கோட்டுப்பறை.

மருதநிலத்தன் பறை-நெல்லரிக்கிணை, மணமுழவு.

நெய்தல் நிலத்தின் பறை-மீன்கோட்பறை.

பாலை நிலத்தின் பறை-துடி

57. பொருத்துக:

ஆசிரியர் சிறுகதை

(அ) மு.வரதராசனார் – 1. மேல்ல மெல்ல மற

(ஆ) ஸ்ரீமதி எஸ்.இலட்சுமி – 2. நன்றிப்பரிசு

(இ) நீலவன் – 3. மணம் நுகர்ந்ததற்குப் பணம்

(ஈ) இலட்சுமி – 4. குறட்டை ஒலி

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 4 3 1 2

(இ) 4 2 3 1

(ஈ) 2 1 3 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 3 2 1

58. “மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்

தொக்க விலங்கும் பேயும் என்றே” – இச்செய்யுளடிகள் இடம் பெற்ற நூல்

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) குண்டலகேசி

(இ) மணிமேகலை

(ஈ) வளையாபதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) மணிமேகலை

மணிமேகலை-ஆபுத்திரன் நாடு அடைந்த காதை அறவண அடிகளின்

கூற்று:

உலகம் மூன்றினும் உயிராம் உலகம்

அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும்

மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்

தொக்க விலங்கும் பேயும் என்றே.

பொருள்: மூவுலகிலும் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. அவ்வுயிர்கள் மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்குத் தொகுதி, பேய் என்னும் அறுவகைத்தாகும்.

59. பொருந்தும் இலக்கணம் யாது?

(அ) கூவா-விளி

(ஆ) தேவா-தானியாகு பெயர்

(இ) இருந்தவள்ளல்-ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

(ஈ) நீர்முகில்-2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நீர்முகில்-2ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

கூவா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெரெச்சம்.

தேவா-விளி.

இருந்த வள்ளல்-பெயரெச்சம்

60. பின்வரும் இலக்கணங்களுள் தவறானது எது?

(அ) இகழ்வார்-விளையாலணையும் பெயர்

(ஆ) செந்நீர்-வினைத்தொகை

(இ) இன்னாச்சொல்-ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்

(ஈ) உண்ணாது-வினையெச்சம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) செந்நீர்-வினைத்தொகை

செந்நீர்-பண்புத்தொகை

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!