General TamilTnpsc

General Tamil Model Question Paper 11

71. “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும்உடுக்களோடும்

மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்

பிறந்தோம் நாங்கள்” – எனத் தமிழின் பழஞ் சிறப்பினைப் பெருமிதம் பொங்கப் பாடிய கவிஞர்

(அ) பாரதியார்

(ஆ) கண்ணதாசன்

(இ) சுரதா

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) பாரதிதாசன்

72. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

நேற்று எங்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

(அ) வினா வாக்கியம்

(ஆ) செய்தி வாக்கியம்

(இ) பிறவினை வாக்கியம்

(ஈ) உணர்ச்சி வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) செய்தி வாக்கியம்

73. ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

அறை-அரை என்ற சொல்லின் பொருள் யாது?

(அ) கட்டடப்பகுதி-ஒன்றில் பாதி

(ஆ) காலியானப்பகுதி-கட்டடப்பகுதி

(இ) ஒரு பொருளின் பாதி-ஓர் அறையின் பகுதி

(ஈ) ஒன்றில் பாதி-கட்டடப்பகுதி

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) கட்டடப்பகுதி-ஒன்றில் பாதி

74. பொருந்தாத இணையைப் கண்டறிக:

ஆசிரியர் இயற்றிய நூல்

(அ) வீரமாமுனிவர் பரமார்த்தகுரு கதை

(ஆ) தேவநேயப் பாவாணர் தமிழர் திருமணம்

(இ) திரு.வி.க சைவத் திறவு

(ஈ) பெருஞ்சித்திரனார் தமிழ்ச்சோலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பெருஞ்சித்திரனார் தமிழ்ச்சோலை

“தமிழ்ச்சோலை” என்ற கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.

75. அகரவரிசைப்படி தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) பிட்டு, பூட்டு, பொன், பெண், பாட்டு

(ஆ) பூட்டு, பாட்டு, பிட்டு, பெண், பொன்

(இ) பாட்டு, பிட்டு, பூட்டு, பெண், பொன்

(ஈ) பொன், பெண், பாட்டு, பிட்டு, பூட்டு

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாட்டு, பிட்டு, பூட்டு, பெண், பொன்

76. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக:

(அ) வேதநாயகம் பிள்ளை – 1. மானவிஜயம்

(ஆ) சூரியநாராயண சாஸ்திரி – 2. அகலிகை வெண்பா

(இ) வெ.ப.சுப்பிரமணிய முதலியார் – 3. பாரிகாதை

(ஈ) ரா.ராகவையங்கார் – 4. நீதி நூல்

அ ஆ இ ஈ

(அ) 4 1 2 3

(ஆ) 1 2 4 3

(இ) 3 1 2 4

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 1 2 3

77. பின்வருவனவற்றுள் நா.பார்த்தசாரதி எழுதிய நூலைச் சுட்டுக:

(அ) கல்லுக்குள் ஈரம்

(ஆ) சமுதாய வீதி

(இ) யாகசாலை

(ஈ) முள்ளும் மலரும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) சமுதாய வீதி

78. பின்வரும் தொகுப்பில் பொருந்தாத சொல்லினை எடுத்தெழுதுக:

(அ) செம்மை

(ஆ) பசுமை

(இ) கருமை

(ஈ) வெம்மை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) வெம்மை

வெம்மை-வெப்பம். ஏனைய மூன்றும் வண்ணங்களைக் குறிக்கின்றன

79. அகரவரிசைப்படி தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) மெல்ல, மீன், மையல், மண், முடி

(ஆ) மண், மீன், முடி, மெல்ல, மையல்

(இ) முடி, மீன், மெல்ல, மையல், மண்

(ஈ) மண், முடி, மையல், மெல்ல, மீன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) மண், மீன், முடி, மெல்ல, மையல்

80. “உதவு” என்ற சொல்லின் சரியான பொருள் உணர்த்தும் சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) உழைப்பின்றி உயர்வில்லை

(ஆ) உயர்ந்தோரை உலகு மதிக்கும்

(இ) உயர்வே மதிப்பைத் தரும்

(ஈ) உயர்ந்தோர் உதவும் உள்ளம் கொண்டவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) உயர்ந்தோர் உதவும் உள்ளம் கொண்டவர்

Previous page 1 2 3 4 5 6 7 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!