General TamilTnpsc

General Tamil Model Question Paper 13

91. கீழ்வருவனவற்றுள் பண்புத்தொகை அல்லாதன

அ.நெடுநீர். ஆ.உகுநீர். இ.செந்நீர் ஈ.கண்ணீர்

(அ) அ மற்றும் ஆ சரி

(ஆ) ஆ மற்றும் ஈ சரி

(இ) அ,ஆ மற்றும் இ சரி

(ஈ) அ மற்றும் இ சரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஆ மற்றும் ஈ சரி

பண்புத்தொகைகள்:

நெடுநீர்-நெடுமை+நீர்; செந்நீர்-செம்மை+நீர்;.

உகுநீர்-வினைத்தொகை

92. “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற”

– மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் “ஆகுல” என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க:

(அ) OVER LOOK

(ஆ) OVER POWER

(இ) OVATION

(ஈ) OVIPARUS

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) OVATION

ஆகுல-ஆரவாரத்தன்மை, Ovation-ஆரவாரம்.

93. பொருத்துக:

சொல் – தளை

(அ) பாரி பாரி – 1. இயற்சீர் வெண்டளை

(ஆ) பலர்புகழ் கபிலர் – 2. நெரொன்றியத்தளை

(இ) தாமரைப்பூ குளத்தினிலே – 3. நிரையொன்றா சிரியத்தளை

(ஈ) அகர முதல – 4. கலித்தளை

அ ஆ இ ஈ

(அ) 3 4 1 2

(ஆ) 3 2 1 4

(இ) 2 3 4 1

(ஈ) 1 4 3 2

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) 2 3 4 1

(அ) பா / ரி / பா / ரி

நேர் நேர் நேர் நேர்

(தேமா)

மா முன் நேர் – நேரொன்றாசிரியத் தளை

(ஆ) பலர் / புகழ் / கபி / லர்

நிரை நிரை நிரை நேர்

(கருவிளம்)

விளமுன் நிரை-நிரையொன்றாசிரியத்தளை

(இ) தா / மரைப் / பூ குளத் / தினி / லே

நேர் நிரை நேர் நிரை நிரை நேர்

(கூவிளங்காய்)

காய்முன் நிரை – கலித்தளை

(ஈ) அக / ர / முத / ல

நிரை நேர் நிரை நேர்

(புளிமா)

மாமுன் நிரை – இயற்சீர் வெண்டளை

94. “ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் “தாய்”, “தாய்”, “தாய்” என்று போற்றுகிறான்” என்னும் கூற்று யாருடையது?

(அ) பாரதியார்

(ஆ) பாரதிதாசன்

(இ) திரு.வி.க.

(ஈ) கம்பன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) திரு.வி.க.

95. விடைத்தேர்க:

“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?

(அ) தந்தை பெரியார்

(ஆ) டாக்டர்.அம்பேத்கர்

(இ) பேரறிஞர் அண்ணா

(ஈ) காமராசர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) டாக்டர்.அம்பேத்கர்

96. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?

(அ) கூடங்குளம்

(ஆ) கூரங்குளம்

(இ) கூந்தன்குளம்

(ஈ) வேடந்தாங்கல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கூந்தன்குளம்

கூந்தன்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு சரணாலயத்தில் வாழும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக அவ்வூரில் பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் அவ்வூரில் எந்த விழாக்களிலும் கொட்டு மேளம், பறை அடிப்பதில்லை.

97. இந்தியா மிகப்பெரிய நாடு – எவ்வகை வாக்கியம்?

(அ) தொடர்நிலை வாக்கியம்

(ஆ) தனிநிலை வாக்கியம்

(இ) கலவை வாக்கியம்

(ஈ) கட்டளை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தனிநிலை வாக்கியம்

98. பொருத்துக:

(அ) நடந்தான் – 1. தொழிற்பெயர்

(ஆ) நடந்த – 2. வினையெச்சம்

(இ) நடந்து – 3. பெயரெச்சம்

(ஈ) நடத்தல் – 4. வினைமுற்று

அ ஆ இ ஈ

(அ) 4 3 2 1

(ஆ) 2 3 1 4

(இ) 3 4 1 2

(ஈ) 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 3 2 1

99. “சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

புலனென மொழிப புலன் உணர்ந்தோரே” என்று கூறியவர் யார்?

(அ) நற்கவிராச நம்பி

(ஆ) பவணந்தி முனிவர்

(இ) ஐயனாரிதனார்

(ஈ) தொல்காப்பியர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தொல்காப்பியர்

தொல்காப்பியர் குறிப்பிடும் “புலன்” என்னும் இலக்கியவகை “பள்ளு” என்ற இலக்கியவகைக்குப் பொருந்தும் என்பர்.

100. பிரித்தெழுதுக:

பரித்தியாகம்

(அ) பரிந்து + யாகம்

(ஆ) பரித்தி+யாகம்

(இ) பரி+தியாகம்

(ஈ) பரிதி+யாகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பரி+தியாகம்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!