General TamilTnpsc

General Tamil Model Question Paper 13

61. “He is a Prince among the Tamil Poets”

(தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர்

(அ) இளங்கோவடிகள்

(ஆ) கம்பர்

(இ) பாரதியார்

(ஈ) திருத்தக்கத்தேவர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) திருத்தக்கத்தேவர்

62. “திருவாசகம்” யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?

(அ) ரேணியஸ்

(ஆ) ஜி.யூ.போப்

(இ) எல்லீசர்

(ஈ) லாசரஸ்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) ஜி.யூ.போப்

ஜி.யூ.போப் அவர்கள் தமது 80-வது வயதில் கி.பி.1900-ஆம் ஆண்டில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

63. இரகசிய வழி எனும் ஆங்கில நூலைத் தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?

(அ) பம்மல் சம்பந்த முதலியார்

(ஆ) சங்கரதாஸ் சுவாமிகள்

(இ) சுந்தரம் பிள்ளை

(ஈ) இலட்சுமண பிள்ளை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) சுந்தரம் பிள்ளை

ஆங்கிலத்தில் லிட்டன் பிரபு என்பவர் எழுதிய “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி பெ.சுந்தரம்பிள்ளை அவர்கள் “மனோன்மணீயம்” என்ற நாடக நூலை இயற்றினார்.

64. பொருத்துக:

நூல் ஆசிரியர் பெயர்

(அ) திரிகடுகம் – 1. விளம்பிநாகனார்

(ஆ) சிறுபஞ்சமூலம் – 2. கணிமேதாவியார்

(இ) ஏலாதி – 3. நல்லாதனார்

(ஈ) நான்மணிக்கடிகை – 4. காரியாசான்

அ ஆ இ ஈ

(அ) 1 4 2 3

(ஆ) 3 2 1 4

(இ) 3 4 2 1

(ஈ) 4 1 3 2

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

65. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:

“ஆடும் மயிலின் அழகுதான் என்னே!”

(அ) வினா வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) உணர்ச்சி வாக்கியம்

(ஈ) செய்தி வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) உணர்ச்சி வாக்கியம்

66. இணையாக இல்லாததை எழுதுக:

(அ) பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சி-செய்திப்படம்

(ஆ) ஒரு நிகழ்வை மட்டும் விளக்குவது-விளக்கப்படம்

(இ) கருத்துக்கணிப்பு செய்யப்படுவது-கருத்துப்படம்

(ஈ) கல்வி கற்பிப்பதற்கென உருவானது-கல்விப்படம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) கருத்துக்கணிப்பு செய்யப்படுவது-கருத்துப்படம்

கருத்துப்படம்-கைகளால் வரையப்பட்ட படங்கள் அல்லது பொம்மைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இயங்குரு படங்கள் “கருத்துப்படம்” என்றழைக்கப்படுகின்றன.

67. வாக்கிய வகையைக் கண்டெழுதுதல்:

குடும்பவிளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது

(அ) செய்வினை வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) பிறவினை வாக்கியம்

(ஈ) செயப்பாட்டுவினை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) செயப்பாட்டுவினை வாக்கியம்

68. “திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்” எவ்வகை வாக்கியம்?

(அ) செய்தி வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) வினா வாக்கியம்

(ஈ) வியப்பு வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) செய்தி வாக்கியம்

69. “Pilgrims Progress” என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது?

(அ) மனோன்மணியம்

(ஆ) தேம்பாவணி

(இ) சீறாப்புராணம்

(ஈ) இரட்சணிய யாத்திரிகம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) இரட்சணிய யாத்திரிகம்

ஜான்பன்யன் என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய “பில்கிரிம்ஸ் புரோகிரஸ்” என்னும் நூலைத் தழுவி, ஹென்றி ஆல்பர்ட் கிருட்டிணபிள்ளை “இரட்சணிய யாத்ரீகம்” என்ற நூலை எழுதினார்.

70. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” இந்நூலுக்குச் சொந்தமானவர்

(அ) கா.சு.பிள்ளை

(ஆ) ரா.பி.சேதுப்பிள்ளை

(இ) தேவநேய பாவாணர்

(ஈ) கால்டுவெல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) கால்டுவெல்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!