General TamilTnpsc

General Tamil Model Question Paper 13

11. பொருத்துக:

அ. திருக்கோவையார் – 1.சேக்கிழார்

ஆ. திருப்பாவை – 2.மாணிக்கவாசகர்

இ. கலிங்கத்துப்பரணி – 3. ஆண்டாள்

ஈ. பெரியபுராணம் – 4. செயங்கொண்டார்

அ ஆ இ ஈ

(அ) 1 2 3 4

(ஆ) 2 3 4 1

(இ) 4 2 1 3

(ஈ) 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 2 3 4 1

12. “பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா

ஒருவன் தாயையும், நாட்டையும்

பழித்தவனாவான்” – என்று கூறியவர் யார்?

(அ) திரு.விக.

(ஆ) மறைமலையடிகள்

(இ) பரிதிமாற் கலைஞர்

(ஈ)தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரு.விக.

13. “புதுநெறிக

ண்ட புலவர்” – என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?

(அ) சேக்கிழார்

(ஆ) தாயுமானவர்

(இ) மாணிக்கவாசகர்

(ஈ) இராமலிங்க அடிகளார்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இராமலிங்க அடிகளார்

14. “இமயம் எங்கள் காலடியில்” என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?

(அ) சிற்பி பாலசுப்பிரமணியம்

(ஆ) தாரா பாரதி

(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

“இமயம் எங்கள் காலடியில்”என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆவார். இந்நூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. “நல்ல உலகம் நாளை மலரும்” என்ற நூல் இவருடைய மற்றொரு கவிதைத் தொகுப்பு நூலாகும்.

15. இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்

(அ) ய், ர்

(ஆ) க், ங்

(இ) ல், ள்

(ஈ) ப், ம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ப், ம்

இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்-ப்,ம்.

க்,ங்-இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன.

ய்-இவ்வெழுத்து நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் தோன்றுகிறது.

ர்,ழ்- இவை மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.

ல்-இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாவின் ஓரங்கள் தடித்து நெருங்குதவதனால் பிறக்கிறது.

ள்-இது மேல்வாயை நாவின் ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.

16. எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்?

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) நாமக்கல் கவிஞர்

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பாரதியார்

17. கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?

(அ) குடும்ப விளக்கு

(ஆ) பாண்டியன் பரிசு

(இ) தேன் மழை

(ஈ) குறிஞ்சித்திட்டு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேன் மழை

“தேன்மழை” என்ற நூலின் ஆசிரியர் உவமைக் கவிஞர் சுரதா ஆவார். இந்நூல் தமிழக அரசின் “தமிழ் வளர்ச்சித் துறை” வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றுள்ளது.

18. கீழ்க்காணும் தொடரில் வழூஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி

(அ) வலதுபக்கச் சுவறில் எழுதாதே

(ஆ) வலதுபக்கம் சுவரில் எழுதாதே

(இ) வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே

(ஈ) வலப்பக்கச் சுவரில் எழுதாதே

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) வலப்பக்கச் சுவரில் எழுதாதே

19. “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என வழங்கப்பெறும் நூல் எது?

(அ) மணிமேகலை

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) வளையாபதி

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்: உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், ஒற்றுமைக்காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சிலம்பு, தமிழின் முதல் காப்பியம், சமுதாயக் காப்பியம், சிறப்பதிகாரம்.

20. திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

(அ) ஐந்து

(ஆ) நான்கு

(இ) இரண்டு

(ஈ) மூன்று

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நான்கு

திருக்குறள்-பாயிரவியலில் நான்கு அதிகாரங்கள் அமைந்துள்ளன. அவையாவன: கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!