General TamilTnpsc

General Tamil Model Question Paper 13

71. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனி சிறந்தனவே”

– எனும் பாடலடிகள் யாருடையது?

(அ) புரட்சிக்கவிஞர்

(ஆ) தேசியக்கவி

(இ) காந்தியக் கவிஞர்

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) தேசியக்கவி

72. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” இக்கூற்றுக்குரியவர் யார்?

(அ) கம்பர்

(ஆ) கணியன் பூங்குன்றனார்

(இ) ஒளவையார்

(ஈ) இளங்கோவடிகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஒளவையார்

73. அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக:

(அ) எழிலி, எழில், எழால், எழல்

(ஆ) எழில், எழல், எழால், எழிலி

(இ) எழால், எழில், எழிலி, எழல்

(ஈ) எழல், எழால், எழிலி, எழில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) எழல், எழால், எழிலி, எழில்

74. “TOLLY” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்தெடுக்க:

(அ) படப்பிடிப்பு

(ஆ) உருப்பெருக்கி

(இ) நகர்த்தும் வண்டி

(ஈ) எதிர்ச்சுருள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) நகர்த்தும் வண்டி

75. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?

(அ) தேம்பாவணி

(ஆ) கித்தேரி அம்மாள் அம்மாணை

(இ) செந்தமிழ் இலக்கணம்

(ஈ) ஆசாரக்கோவை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை-பெருவாயின் முள்ளியார்

76. “துறவை மேல் நெறி” என்று உச்சத்தில் வைத்துப் படைக்கபட்டவை எவை?

(அ) சங்க இலக்கியங்கள்

(ஆ) அற இலக்கியங்கள்

(இ) பக்தி இலக்கியங்கள்

(ஈ) காப்பியங்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) அற இலக்கியங்கள்

77. சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்க்கணக்கு எனக்கூறும் பாட்டியல் நூல் எது?

(அ) சிதம்பரப் பாட்டியல்

(ஆ) நவநீதப் பாட்டியல்

(இ) பன்னிரு பாட்டியல்

(ஈ) சுவாமிநாநாதப் பாட்டியல்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பன்னிரு பாட்டியல்

78. “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து”

– எனும் குறளில் வள்ளுவர் எழுத்தாளும் உவமை எது?

(அ) ஆட்டுக்கடா

(ஆ) வேங்கை

(இ) குதிரை

(ஈ) நாய்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஆட்டுக்கடா

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து – குறள்:486

பொருள்: ஊக்கம் மிகுந்தவன் போருக்குச் செல்லாமல் அடங்கியிருப்பது. போரிடும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்வாங்கும் தன்மையாது.

பொருதகர்-ஆட்டுக்கடா

79. “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்றவர்

(அ) இராமலிங்க அடிகளார்

(ஆ) தாயுமானவர்

(இ) திருநாவுக்கரசர்

(ஈ) சுந்தரர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) இராமலிங்க அடிகளார்

80. பொருத்துதல்:

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்:

(அ) இகல் – 1. செல்வம்

(ஆ) திரு – 2. ஆட்டுக்கடா

(இ) பொருதகர் – 3. துன்பம்

(ஈ) இடும்பை – 4. பகை

அ ஆ இ ஈ

(அ) 4 1 2 3

(ஆ) 2 4 3 1

(இ) 1 2 3 4

(ஈ) 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 4 1 2 3

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!