General Tamil

General Tamil Model Question Paper 24

91. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?

(அ) பேச்சுக்கலை

(ஆ) ஓவியக்கலை

(இ) இசைக்கலை

(ஈ) சிற்பக்கலை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) பேச்சுக்கலை

92. “என்னுடைய நாடு” என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தலைப்பு

(அ) சமுதாயமலர்

(ஆ) காந்திமலர்

(இ) தேசியமலர்

(ஈ) இசைமலர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேசியமலர்

என்னுடைய நாடு

இந்திய நாடிது என்னுடைய நாடே

என்று தினந்தினம் நீயதைப் பாடு

சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள

தூங்கிக் கிடந்தது போனது மாள

வந்தவர் யாரையும் நம்பி

வாடின காலங்கள் ஓடின தம்பி

இந்தத் தினம் முதல் “இந்திய நாடு

என்னுடை நாடெ” என்ற எண்ணத்தைக் கூடு

– நாமக்கல் கவிஞர்

மேற்கண்ட பாடல் “நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் நூலில் தேசியமலர் என்னும் பகுதியில் “என்னுடைய நாடு” என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது

93. “சூரியஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது” என உணர்ந்தவர்

(அ) பாரதி

(ஆ) சுரதா

(இ) பாரதிதாசன்

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாரதிதாசன்

94.அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்

(அ) சென்னை

(ஆ) மதுரை

(இ) சிதம்பரம்

(ஈ) தஞ்சை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சென்னை

95. “திராவிட” எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்

(அ) ஈராஸ் பாரதியார்

(ஆ) கால்டுவெல்

(இ) ஜி.யூ.போப்

(ஈ) வீரமாமுனிவர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) ஈராஸ் பாரதியார்

ஹீராஸ் பாதிரியாரின் கூற்று:

தமிழ் > திரமிள > திரவிட > திராவிட எனத் “தமிழ்” என்னும் சொல்லில் இருந்தே “திராவிடம்” என்னும் சொல் உருவாயிற்று.

96. நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை

(அ) பூநாரை

(ஆ) அன்னம்

(இ) கொக்கு

(ஈ) குருகு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பூநாரை

பூநாரை:

நிலத்திலும் அடர் உப்புத் தன்மை உள்ள நீரிலும் வாழும். கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் தன்மையுடையது.

97. “தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்” என அழைக்கப்படுபவர்

(அ) கம்பதாசன்

(ஆ) வாணிதாசன்

(இ) கண்ணதாசன்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வாணிதாசன்

98. “நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” யார் கூற்று?

(அ) பம்மல் சம்பந்தனார்

(ஆ) சங்கரதாஸ் சுவாமிகள்

(இ) கவிமணி

(ஈ) பரிதிமாற்கலைஞர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கவிமணி

99. ஒளிப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்த ஆண்டு

(அ) 1830

(ஆ) 1840

(இ) 1810

(ஈ) 1820

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) 1830

1830-ல் போட்

டோ எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் எட்வர்டு மைபிரிட்ஜ் என்பராவார்

100. பாவேந்தர் பாரதிதாசன் பாடியது.

(அ) “பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்”

(ஆ) “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி!”

(இ) “சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”

(ஈ) “தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை”

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி!”

“பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப்

பழமையிருந்த நிலை – கிளியே

பாமரர் எதறிவார்”

– பாரதியார்.

“தேனொக்கும் செந்தமிழே நீகனி! நான் கிளி!

வேறென்ன வேண்டும் இனி”

– பாரதிதாசன்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்

– நாமக்கல் கவிஞர்.

தோள்கள் உனது தொழிற்சாலை – நீ

தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை!

தோல்விகள் ஏதும் உனக்கில்லை – இனித்

தொடுவானம்தான் உன் எல்லை!

– கவிஞர் தாராபாரதி.

 

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!