General Tamil

General Tamil Model Question Paper 24

71. “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்

(அ) சேக்கிழார்

(ஆ) கம்பர்

(இ) மாணிக்கவாசகர்

(ஈ) எவருமில்லை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சேக்கிழார்

72. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனப் பாடியவர் யார்?

(அ) அப்பர்

(ஆ) திருமூலர்

(இ) சம்பந்தர்

(ஈ) சுந்தரர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) திருமூலர்

73. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” யார் கூற்று?

(அ) திரு.வி.க

(ஆ) ரா.பி.சேதுப்பிள்ளை

(இ) பேரறிஞர் அண்ணா

(ஈ) ஜி.யூ.போப்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பேரறிஞர் அண்ணா

74. திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?

(அ) இளம்பூரணார்

(ஆ) நச்சர்

(இ) பரிமேலழகர்

(ஈ) ந.மு.வேங்கடசாமி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) பரிமேலழகர்

திருக்குறளுக்கு முற்காலத்தில் பதின்மர் உரை எழுதியுள்ளனர்.

தருமர், மணக்குடவர், தாமதத்தர், பரிதி, பரிமேலழகர், திருமலையார், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர், நச்சர் ஆகியோர் ஆவர். பரிமேலழகர் எழுதிய உரை மிகச் சிறப்பானது எனப் போற்றப்படுகிறது. முதன்முதலில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் மணக்குடவர் ஆவார்.

75. ஏலாதி-நூல்களுள் ஒன்று

(அ) பதிணென் மேற்கணக்கு

(ஆ) பதினெண் கீழ்க்கணக்கு

(இ) காப்பியம்

(ஈ) பாயிரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) பதினெண் கீழ்க்கணக்கு

76. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர்

(அ) இளங்கோவன்

(ஆ) பாரதிதாசன்

(இ) பாரதியார்

(ஈ) கவிமணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாரதியார்

77. சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?

(அ) திருநாவுக்கரசர்

(ஆ) திருஞான சம்பந்தர்

(இ) சுந்தரர்

(ஈ) மாணிக்கவாசகர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் அரிமர்த்தனப் பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார். பாண்டிய மன்னுக்காக குதிரை வாங்கச் சென்ற போது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் இறைவன் இவருக்காக நடத்தியதாகும்.

78. மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்

(அ) திரிகடுகம், ஏலாதி

(ஆ) இன்னாநாற்பது, இனியவை நாற்பது

(இ) திருக்குறள், நன்னூல்

(ஈ) நன்றிணை, அகநானூறு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) திரிகடுகம், ஏலாதி

திரிகடுகம்: இதனை இயற்றியவர் நல்லாதனார். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆன மருந்து உடல் பிணியைப் போக்குவது போல இந்நூலில் அமைந்துள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மும்மூன்று கருத்துகளும் உள்ளத்தில் ஏற்படும் நோயைப் போக்கும் தன்மையுடையன.

ஏலாதி: 1:2:3:4:5:6 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு என்ற ஆறுவகைப் பொருட்களால் ஆன மருந்து ஏலாதி. இம்மருந்து உடல்நோயை நீக்குவது போல இவற்றிலுள்ள பாடல்கள் மக்களின் அறியாமையை நீக்கும் தன்மையுடையன.

79. சரியானவற்றைப்பொருத்துக:

அ. கான் – 1.கரடி

ஆ. உழுவை – 2.சிங்கம்

இ. மடங்கல் – 3.புலி

ஈ. எண்கு – 4.காடு

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 4 3 2 1

இ. 3 4 1 2

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 3 2 1

80. பகைவனிடமும் அன்பு காட்டு எனக்கூறிய நூல்

(அ) பகவத்கீதை

(ஆ) நன்னூல்

(இ) பைபிள்

(ஈ) சீறாப்புராணம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பைபிள்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!