General Tamil

General Tamil Model Question Paper 24

21. நற்றிணையைத் தொகுப்பித்தவர்

(அ) பன்னாடு தந்நத மாறன் வழுதி

(ஆ) உக்கிரப் பெருவழுதி

(இ) இளம் பெருவழுதி

(ஈ) மிளை கிழான்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) பன்னாடு தந்நத மாறன் வழுதி

நற்றிணை: இந்நூலை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி. பாடிய புலவர்கள் 275 பேர். கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அடி வரையறை 9-12.

22. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

(அ) 33

(ஆ) 133

(இ) 13

(ஈ) 1330

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) 133

23. பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?

(அ) புரட்சிக் கவிஞர்

(ஆ) தேசியக் கவிஞர்

(இ) உவகைக் கவிஞர்

(ஈ) கவிக்குயில்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) புரட்சிக் கவிஞர்

புரட்சிக் கவிஞர்-பாரதிதாசன்.

தேசியக்கவிஞர்-பாரதியார்.

உவமைக்கவிஞர்-சுரதா.

கவிக்குயில் -சரோஜினி நாயுடு.

24. “உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்” என் வழங்கப்படும் காப்பியம் எது?

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) சீவகசிந்தாமணி

(ஈ) வளையாபதி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தில், பாடல்களின் இடையிடையே உரைநடையும் அமைந்திருப்பதால்” உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்” என்று இந்நூல் வழங்கப்பெற்றது.

25. பொருத்துக:

அ. மேதி – 1.சிவன்

ஆ. சந்தம் – 2. எருமை

இ. கோதில் – 3. அழகு

ஈ. அங்கணர் – 4. குற்றமில்லாத

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 2 3 1 4

இ. 3 1 4 2

ஈ. 3 2 1 4

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 2 3 4 1

26. பொருத்துக:

தொடர் பொருள்

அ. ஆகாயத்தாமரை – 1. மிகுதியாகப் பேசுதல்

ஆ. ஆயிரங்காலத்துப்பயிர் – 2. பொய்யழுகை

இ. முதலைக்கண்ணீர் – 3. நீண்ட காலத்திற்குரியது

ஈ. கொட்டியளத்தல் – 4. இல்லாத ஒன்று

அ ஆ இ ஈ

அ. 4 3 2 1

ஆ. 4 3 1 2

இ. 3 4 1 2

ஈ. 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. 4 3 2 1

27. சைவத்திருமுறைகளில் ————— திருமுறை திருமந்திரம்

(அ) ஏழாவது

(ஆ) பத்தாவது

(இ) எட்டாவது

(ஈ) மூன்றாவது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) பத்தாவது

பன்னிரு திருமுறைகள்:

முதல் மூன்று-திருஞானசம்பந்தர் திருமுறைகள் தேவாரம்.

4,5,6-ம் திருமுறை-திருநாவுக்கரசர் திருமுறைகள் தேவாரம்.

7-ம் திருமுறை-சுந்தரர் தேவாரம்.

8-ம் திருமுறைகள்-திருவாசகம், திருக்கோவையார்.

9-ம் திருமுறை-ஒன்பதின்மர் நூல்கள்.

10-ம் திருமுறை-திருமந்திரம்.

11-ம் திருமுறை-பன்னிருவர் நூல்கள்.

12-ம் திருமுறை-பெரியபுராணம்.

28.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” – என்பது எந்நூலின் புகழ்மிக்கத் தொடர்?

(அ) தேவாரம்

(ஆ) வேதியர் ஒழுக்கம்

(இ) திருமந்திரம்

(ஈ) நாலாயிர திவ்வியப்பிரபந்தம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) திருமந்திரம்

29. தவறானவற்றைத் தேர்வு செய்க.

குமரகுரபரரின் நூல்கள்

(அ) சுந்தர் கலிவெண்பா

(ஆ) வேதியர் ஒழுக்கம்

(இ) நீதிநெறி விளக்கம்

(ஈ) சகலகலாவல்லி மாலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

வேதியர் ஒழுக்கம்-வீரமாமுனிவர்

30. கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் எப்பகுதி உடல்நோயைத் தீர்ப்பன.

(அ) இலை

(ஆ) வேர்

(இ) பட்டை

(ஈ) காய்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) வேர்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!