General Tamil

General Tamil Model Question Paper 24

61. குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்

(அ) தேவ குலத்தார்

(ஆ) விளம்பி நாகனார்

(இ) பூரிக்கோ

(ஈ) பெருந்தேவனார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பெருந்தேவனார்

குறுத்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. இந்நூலில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 205. அவர்களில் ஒருவர் தேவகுலத்தார். இவர் பாடிய “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று” என்ற பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

விளம்பிநாகனார் என்பவர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக்கடிகையின் ஆசிரியர் ஆவார்.

62. தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா

(அ) குறள் வெண்பா

(ஆ) நேரிசை வெண்பா

(இ) இன்னிசை வெண்பா

(ஈ) பஃறொடை வெண்பா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா:

வெண்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வரும்

63. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

மாலதி திருக்குறள் கற்றாள்

(அ) தன்வினை

(ஆ) பிறவினை

(இ) செய்வினை

(ஈ) செயப்பாட்டுவினை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) தன்வினை

64.ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது

(அ) தற்குறிப்பேற்ற அணி

(ஆ) இயல்பு நவிற்சி அணி

(இ) உயர்வு நவிற்சி அணி

(ஈ) உவமை அணி

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) உயர்வு நவிற்சி அணி

65. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை

(அ) 401

(ஆ) 501

(இ) 601

(ஈ) 301

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) 401

66. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக:

வாலை-வாளை

(அ) இளம்பெண்-மீன்வகை

(ஆ) மீன்வகை-இளம்பெண்

(இ) மரவகை-மீன்வகை

(ஈ) இளம்பெண்-மரவகை

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) இளம்பெண்-மீன்வகை

67. வையை நாடவன் யார்?

(அ) சேரன்

(ஆ) சோழன்

(இ) பாண்டியன்

(ஈ) பல்லவன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) பாண்டியன்

68. தவறான விடையைத் தேர்வு செய்க:

(அ) சிலப்பதிகாரம்-கையிலாயமலை

(ஆ) கம்பராமாயணம்-சிருங்கிபேரம்

(இ) தேம்பாவணி-வளன்

(ஈ) சீறாப்புராணம்-மந்தராசலம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சிலப்பதிகாரம்-கையிலாயமலை

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக கோயில் கட்டுவதற்கு இமயமலையிலிருந்து கல்லெடுத்து வந்தார். வட இந்திய மன்னர்களான கனக விசயர்கள் மீது போர் தொடுத்து வெற்றி கண்டு அவர்கள் தலை மீது கல்லை சுமக்க வைத்து, கொண்டு வந்து பத்தினி தெய்வத்திற்கு கோயில் கட்டினார்

69. வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

(அ) பாம்பாட்டிச் சித்தர்

(ஆ) கடுவெளிச் சித்தர்

(இ) குதம்பைச் சித்தர்

(ஈ) அழுகுணிச் சித்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கடுவெளிச் சித்தர்

உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுள் என்றெண்ணி வழிபட்டார். அதனால் இவரை கடுவெளிச் சித்தர் என அழைத்தனர். இவர் மிக எளிய சொற்களில் அறக்கருத்துகளை எடுத்துரைத்தவர் ஆவார்.

70. ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?

(அ) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

(ஆ) பன்னாடு தந்த மாறன் வழுதி

(இ) பாரதம் பாடிய பெருந்தேவனார்

(ஈ) யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

ஐங்குறுநூறு:

இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் ஆவார். இவர், இன்பப் பொருள் அமைந்த அகப்பொருள் பாடல்கள் திணைக்கு நூறாய் ஐந்நூறு பாடல்களைக் கொண்ட நூல் ஒன்றை உருவாக்கித் தமிழ் உலகிற்கு அளிக்க விரும்பினார். தன் விருப்பத்தைக் கூடலூர்க் கிழார் என்ற புலவரிடம் கூறினார். அவர் அந்தந்த திணை பாடுதலில் வல்ல புலவர்களைக் கொண்டு நூறு நூறு பாடல்களைப் பாடச் செய்து இந்நூலைத் தொகுத்தளித்தார்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!