General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 11

21. தமிழக அரசு, கவிஞர் சாலை.இளந்திரையனுக்கு வழங்கிய விருது

(அ) பாவேந்தர் விருது

(ஆ) பாரதியார் விருது

(இ) கலைமாமணி விருது

(ஈ) கவிச்செம்மல் விருது

விடை மற்றும் விளக்கம்

(அ) பாவேந்தர் விருது

விளக்கம்:

கவிஞர் சாலை.இளந்திரையன்.

பெற்றோர்-இராமையா-அன்னலட்சுமி.

பிறந்த ஊர்-திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலை நயினார் பள்ளிவாசல்.

காலம்-06.09.1930 – 04.10.1998.

பணி-தில்லிப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளராகிப் பின் தமிழ்த் துறை தலைவரானார்.

சிறப்பு-உலகத் தமிழ் ஆராய்ச்சிக்கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர்.

விருதுகள்-1991-இல் தமிழக அரசின் பாவேந்தர் விருதினைப் பெற்றார். இவரின் “புரட்சி முழக்கம், உரைவீச்சு” ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றுள்ளன.

22. ஜி.யூ.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

(அ) 1786

(ஆ) 1806

(இ) 1856

(ஈ) 1886

விடை மற்றும் விளக்கம்

(ஈ) 1886

விளக்கம்:

ஜி.யூ.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

23. “மணநூல்” என அழைக்கப்பெறும் நூல்

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) சீவகசிந்தாமணி

(ஈ) குண்டலகேசி

விடை மற்றும் விளக்கம்

(இ) சீவகசிந்தாமணி

விளக்கம்:

சீவகசிந்தாமணியில், சீவகன் எட்டுப் பெண்களை மணந்து இன்புற்று வாழ்ந்த மண நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளதால் இது “மணநூல்” எனவும் வழங்கப்பெறும்.

24. பொருத்துக:

அ. சிந்தை – 1.நீர்

ஆ.நவ்வி – 2.மேகம்

இ. முகில் – 3.எண்ணம்

ஈ. புனல் – 4. மான்

அ ஆ இ ஈ

அ. 2 1 3 4

ஆ. 1 3 4 2

இ. 3 4 2 1

ஈ. 4 3 1 2

விடை மற்றும் விளக்கம்

இ. 3 4 2 1

25. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

அ. Writs – 1.வாரிசுரிமைச் சட்டம்

ஆ. Substantive law – 2. உரிமைச் சட்டங்கள்

இ. Substantive law – 3. சான்றுச் சட்டம்

ஈ. Evidence Act – 4. சட்ட ஆவணங்கள்

அ ஆ இ ஈ

அ. 1 3 4 2

ஆ. 4 1 2 3

இ. 2 4 3 1

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

ஆ. 4 1 2 3

26. “யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” – இவ்வாக்கியத்தில் யாழ் என்பது

(அ) சொல்லாகு பெயர்

(ஆ) கருத்தாகு பெயர்

(இ) காரியவாகு பெயர்

(ஈ) கருவியாகு பெயர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கருவியாகு பெயர்

விளக்கம்:

“யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” என்பது யாழிலிருந்து உண்டாகும் இசையினைக் கேட்டு மகிழ்ந்தாள் என்பதனைக் குறிப்பதால் இது கருவியாகு பெயராகும்.

27. வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது ———ஐக் குறிக்கும்.

(அ) சிங்கம்

(ஆ) கடல்

(இ) மாலை

(ஈ) சந்தனம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கடல்

விளக்கம்:

கடலைக்குறிக்கும் தமிழ்ச் சொற்கள்: ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி.

28. “எயிறு” என்னும் சொல் – சொல்லின் எவ்வகை?

(அ) திரிசொல்

(ஆ) இயற்சொல்

(இ) வினைத்திரிசொல்

(ஈ) பெயர்த் திரிசொல்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பெயர்த் திரிசொல்

விளக்கம்:

கற்றவர் மட்டுமே உணரக்கூடிய சொற்கள் திரிசொற்கள் ஆகும். இவை பெயர்த்திரிசொல், வினைத்திரிசொல் என இரு வகைப்படும்.

பெயர்த்திரிசொற்கள்-எயிறு(பல்), வேய் (மூங்கில்), மடி (சோம்பல்), நல்குரவு (வறுமை), பீலி (மயிற்தோகை), உகிர் (நகம்), ஆழி (கடல்).

வினைத்திரிசொற்கள்: வினவினான் (கேட்டான்), விளித்தான் (அழைத்தான்), நோக்கினார் (பார்த்தார்), சூடினர் (அணிந்தனர்).

29. “அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்”

கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

(அ) எதுகை மட்டும் வந்துள்ளது

(ஆ) எதுகையும், மோனையும் வந்துள்ளன

(இ) எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன

(ஈ) மோனை மட்டும் வந்துள்ளது

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மோனை மட்டும் வந்துள்ளது

விளக்கம்:

முதற்சீரில் வந்த முதல் எழுத்தே அடுத்து வரும் சீர்களில் வந்தால் அது மோனைத் தொடராகும்.

ரியதாம் உவப்ப எள்ளதன்பினால்

மைந்த காதல் எனவே இது மோனைத் தொடை வகையாகும்.

30. பெயரெச்சதை எடுத்து எழுதுக:

(அ) படித்து

(ஆ) எழுதி

(இ) வந்த

(ஈ) நின்றான்

விடை மற்றும் விளக்கம்

(இ) வந்த

விளக்கம்:

படித்து-வினையெச்சம்.

எழுதி-வினையெச்சம்.

வந்த-பெயரெச்சம்.

நின்றான்-ஆண்பால் வினைமுற்று.

ஒரு வினைச்சொல் முற்றிலும் பொருள் தருவதற்காகப் பெயர்ச்சொல்லைத் தழுவி நிற்பது பெயரெச்சம் ஆகும்.

 

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!