General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 11

61. “மடங்கல்” என்னும் சொல்லின் பொருள்

(அ) மடக்குதல்

(ஆ) புலி

(இ) மடங்குதல்

(ஈ) சிங்கம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) சிங்கம்

விளக்கம்:

சீறாப்புராணம்-விலாதத்துக் காண்டம்-புலி வசனித்த படலம்.

நிரம்பும் வள்ளுகிர் மடங்கலின் இனங்களில் நிணமுண்

டிரும்ப னைக்கைமும் மதகரிக் கோட்டினை யீழ்த்திட்

டுரம்பி ளந்துதி ரங்களை மாந்திநின் றுறங்கா

தரும்பெ ருங்கிரி பிதிர்ந்திட வுருமினும் அலறும்.

பொருள்: அப்புலியானது, கூர்மையான நகங்களையுடைய சிங்கக் கூட்டங்களன்றி, மற்ற விலங்குகளின் இறைச்சியை உண்ணும். பெரிய பனைபோலும் தும்பிக்கையினையும் மூன்று மதங்களையுமுடைய யானைகளின் கொம்புகளைப் பிடித்து இழுத்து, அவற்றின் மார்பினைக் கீறி குருதியனைக் குடித்து உறங்காது நின்று, பெரிய அரிய மலைகளும் அதிருமாறு இடியைக் காட்டிலும் அதிகமாக முழங்கும்.

62. அகநாநூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி

(அ) களிற்றுயானை நிரை

(ஆ) மணிமிடைப்பவளம்

(இ) நித்திலக் கோவை

(ஈ) வெண்பாமாலை

விடை மற்றும் விளக்கம்

(இ) நித்திலக் கோவை

விளக்கம்:

அகநானூறு:

முதல் 120 பாடல்கள்-களிற்றியானை நிரை.

அடுத்த 180 பாடல்கள்-மணிமிடைபவளம்.

கடைசி 100 பாடல்கள்-நித்திலக்கோவை

63. குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்

(அ) பூரிக்கோ

(ஆ) நல்லாதனார்

(இ) கணிமேதாவியார்

(ஈ) கார்மேகப்புலவர்

விடை மற்றும் விளக்கம்

(அ) பூரிக்கோ

விளக்கம்:

குறுந்தொகை:

தொகுத்தவர்-பூரிக்கோ.

தொகுப்பித்தவர்-அறியப்படவில்லை.

கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.

64. “உத்தர வேதம்” என்று அழைக்கப்படும் நூல்

(அ) நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

(ஆ) நாலடியார்

(இ) திருக்குறள்

(ஈ) இன்னாநாற்பது

விடை மற்றும் விளக்கம்

(இ) திருக்குறள்

விளக்கம்:

திருக்குறளின் வேறு பெயர்கள்:

முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி

65. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க

(அ) ஏலாதி

(ஆ) ஆசாரக்கோவை

(இ) திரிகடுகம்

(ஈ) சிறுபஞ்சமூலம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஆசாரக்கோவை

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள நான்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும். ஆசாரக்கோவையைத் தவிர, ஏனைய மூன்று நூல்களும் மருந்தின் பெயர்களால் வழங்கப்படுபவை ஆகும்.

66. “திரைக்கவித் திலகம்” என்ற சிறப்புக்குரியவர்

(அ) வாலி

(ஆ) உடுமலை நாராயண கவி

(இ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

(ஈ) மருதகாசி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மருதகாசி

விளக்கம்:

ஏறத்தாழ நாலாயிரம் திரையிசைப் பாடல்களை கவிஞர் மருதகாசி எழுதியுள்ளார். மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர். “திரைக்கவித் திலகம்” என்ற சிறப்புக்குரியவர்.

67. “சதகம்” என்பது —– பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.

(அ) 10

(ஆ) 100

(இ) 400

(ஈ) 1000

விடை மற்றும் விளக்கம்

(ஆ) 100

விளக்கம்:

சதகம்-பெயர்ச்சொல்.

நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல்வகை. இது சிற்றிலக்கிய வகையாகும். நமக்குக் கிடைத்துள்ள சகதங்களில் மிகப் பழமையானது திருச்சதகம் ஆகும். இதன் ஆசிரியர் மாணிக்கவாசகர்.

68. பொருத்துக

அ. வசனநடை கை வந்த வல்லாளர் 1. இராமலிங்க அடிகள

ஆ. புதுநெறி கண்ட புலவர் 2. நாமக்கல் கவிஞர்

இ. தைரியநாதர் 3. ஆறுமுக நாவலர்

ஈ. காந்தியக் கவிஞர் 4. வீரமாமுனிவர்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 3 4 2 1

இ. 2 1 3 4

ஈ. 1 4 2 3

விடை மற்றும் விளக்கம்

அ. 3 1 4 2

விளக்கம்:

தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய ஆறுமுக நாவலரை “வசனநடை கைவந்த வல்லாளர்” எனப் பரிதிமாற் கலைஞர் பாராட்டினார். இராமலிங்க அடிகளார் உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார். எனவே பாரதியார், இவரைப் “புதுநெறிகண்ட புலவர்” எனப் போற்றினார்.

கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த வீரமாமுனிவர் தமிழ் மொழியைக் கற்று புலமை பெற்றார். தன் பெயரினை முதலில் “தைரியநாதன்” என்று மாற்றியிருந்த அவர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் க்ற்தாலும் தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக் கொண்டார்.

“நாமக்கல் கவிஞர்” என அழைக்கப்பட்ட வெ.இராமலிங்கனார், மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப்போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் “காந்தியக் கவிஞர்” எனப் போற்றப்பட்டார்.

“நாமக்கல் கவிஞருடைய பாடல்களில் உணர்ச்சியின் ஆழமும் வேகமும் காண்பதற்கில்லை. பண்பாட்டின் அமைதியைக் காணலாம். அது காந்தியத்திற்கு ஒத்து வருவதாக உள்ளது” – டாக்டர் மு.வ.

69. உ.வே.சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்

(அ) ரா.பி.சேதுப்பிள்ளை

(ஆ) கடிகை முத்துப்புலவர்

(இ) சி.இலக்குவனார்

(ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

விளக்கம்:

உ.வே.சா.அவர்கள் தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் தனது சொந்த ஊரான உத்தமதானபுரத்திலேயே கற்றார். பின்னர் தன்னுடைய 17-வது வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்ததுக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிரப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். உ.வே.சா. அவர்களின் இயற்பெயர் வேங்கடரத்தினம். அவருடைய ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவருக்கு சாமிநாதன் என்று பெயர் வைத்தார். உத்தமானபுரம் வேங்கடசுப்புவின் மகன் சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா ஆகும்.

70. பொருத்துக:

அ. சிறுமலை, பூம்பாறை – 1.முல்லை நில ஊர்கள்

ஆ. ஆற்காடு, பனையபுரம் – 2. நெய்தல் நில ஊர்கள்

இ. ஆத்தூர், கடம்பூர் – 3. குறிஞ்சி நில ஊர்கள்

ஈ. கீழக்கரை, நீலாங்கரை – 4. மருத நில ஊர்கள்

அ ஆ இ ஈ

அ. 2 1 3 4

ஆ. 3 4 2 1

இ. 3 1 4 2

ஈ. 4 2 1 3

விடை மற்றும் விளக்கம்

இ. 3 1 4 2

விளக்கம்:

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். ஓங்கியுயர்ந்த பகுதி மலை மலையை விட சற்று உயரம் குறைந்த பகுதி குன்று. குன்றை விட சற்று உயரம் குறைந்த பகுதி கரடு அல்லது பாறை. மலையின் அருகேயுள்ள ஊர்கள் நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமைல எனப்பட்டன.

குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றக்குடி, குன்றத்தூர் எனப்பட்டன. குன்றை விட குறைந்த நிலப்பகுதியிலுள்ள ஊர்கள் பூம்பாறை, சிப்பிப்பாறை சஞ்சீவிராயன்காடு, வால்பாறை, மட்டப்பாறை எனப்பட்டன. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலப்பகுதியாகும். முல்லைநில மக்கள் மரங்களின் பெயர்களையே ஊர்ப் பெயர்களாகச் சூட்டினர்.

அத்தி(ஆர்) மரங்கள் சூழந்த ஊர் ஆர்க்காடு அல்லது ஆற்காடு.

பனைமரங்கள் நிறைந்த பகுதிய பனையபுரம்.

வயலும் வயல்சார்ந்த இடமும் மருதநிலப்பகுதி. மருதநில மக்கள் ஆற்றின் பெயரையும் ஆற்றங்கரையிலிருந்த மரங்களின் பெயரையும் ஊர்ப்பெயர்களாக வழங்கி வந்தனர்.

“ஆற்றூர்” என்பது மருவி “ஆத்தூர்” எனப்பட்டது. கடம்ப மரங்கள் சூழ்ந்த பகுதி கடம்பூர் எனப்பட்டது.

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலப்பகுதியாகும். பரதவர்கள் வாழ்ந்த ஊர்கள் கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை எனப்பட்டன.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!