General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 11

91. வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில் கூறினார்?

(அ) இந்தியன் ஓப்பினியன்

(ஆ) டிஸ்கவரி ஆப் இந்தியா

(இ) தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்

(ஈ) யங் இந்தியா

விடை மற்றும் விளக்கம்

(இ) தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்

92. “நான் தனியாக வாழவில்லை

தமிழோடு வாழ்கிறேன்”

– இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டுச் சென்ற நாள்

(அ) 1973-செப்டம்பர்-17

(ஆ) 1943-செப்டம்பர்-17

(இ) 1953-செப்டம்பர்-17

(ஈ) 1963-செப்டம்பர்-17

விடை மற்றும் விளக்கம்

(இ) 1953-செப்டம்பர்-17

விளக்கம்:

“நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” என்று கூறியவர். திரு.வி.கல்யாணசுந்தரனார். இவரது காலம் 1883-ஆகஸ்ட் 26 முதல் 1953-செப்டம்பர் 17 வரையாகும்.

93. “சட்டை” என்ற சிறுகதையை எழுதியவர்

(அ) பார்த்தசாரதி

(ஆ) ஜெயகாந்தன்

(இ) மீரா

(ஈ) புதுமைப்பித்தன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஜெயகாந்தன்

94. “கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” – என போற்றப்படும் நூல்

(அ) இரட்சண்ய மனோகரம்

(ஆ) இரட்சண்ய யாத்ரீகம்

(இ) போற்றி திருவகல்

(ஈ) தேம்பாவணி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) தேம்பாவணி

விளக்கம்:

“கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” எனப் போற்றப்படும் நூல் தேம்பாவணி ஆகும். இந்நூலை வீரமாமுனிவர் இயற்றியுள்ளார். இந்நூல் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது.

95. “மருமக்கள் வழி மான்மியம்” என்ற நூலை எழுதியவர்

(அ) கவிமணி

(ஆ) சிவதாமு

(இ) பாரதிதாசன்

(ஈ) புதுமைப்பித்தன்

விடை மற்றும் விளக்கம்

(அ) கவிமணி

விளக்கம்:

“நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்” என்பதே நூலின் முழுமையான பெயராகும். இந்நூலை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆவார். இது ஒரு “அங்கதக் கவிதை” நூலாகும். நாஞ்சில் நாட்டில் நிலவி வந்த “மருமக்கள் வழி” சொத்துரிமை முறையின் தீங்குகளை, அந்த முறையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்வது போல பாடப்பட்டிருக்கின்றது

96. “தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்

(அ) பெரியார்

(ஆ) அம்பேத்கர்

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

(ஈ) இராமலிங்க அடிகளார்

விடை மற்றும் விளக்கம்

(இ) அயோத்திதாசப் பண்டிதர்

விளக்கம்:

அயோத்திதாசப் பண்டிதர்.

காலம்-20.05.1845 முதல் 05.05.1914 வரை.

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில், “பிரம்ம ஞானசபை ஆல்காட்” உதவியுடன் சென்னையில் ஐந்துஇடங்களில் “ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள்” எனத் தலித்துகளுக்கு இலவசப் பள்ளிகளை நிறுவினார். “தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என போற்றப்பட்டார்.

97. பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை

(அ) சுகுணவிலாச சபை

(ஆ) மாடர்ன் தியேட்டர்

(இ) பாய்ஸ் கம்பெனி

(ஈ) கூத்துப்பட்டறை

விடை மற்றும் விளக்கம்

(அ) சுகுணவிலாச சபை

விளக்கம்:

1891-இல் தமது 18-வது வயதில் பம்மல் சம்மந்தனார் துவங்கிய சபை சுகுணவிலாச சபை. இவரின் காலம் 1875-1964. இவர் எழுதிய நாடகங்கள் 94. “தமிழ் நாடகத் தந்தை” என இவர் போற்றப்படுகிறார்.

98. “இந்திய அரசியலில் சாணக்கியர்” என்று போற்றப்படுபவர்

(அ) காந்தியடிகள்

(ஆ) பாலகங்காதர திலகர்

(இ) இராஜகோபாலாச்சரியார்

(ஈ) சர்தார் வல்லபாய் படேல்

விடை மற்றும் விளக்கம்

(இ) இராஜகோபாலாச்சரியார்

99. பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ” எனக் கூறியவர்

(அ) சோமசுந்தரபாரதியார்

(ஆ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

(இ) பாரதிதாசன்

(ஈ) தாரா பாரதி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

விளக்கம்:

திரு.வி.க.கல்யாண சுந்தரனார் அவர்களின் கூற்று

மற்ற பூக்கள் எல்லாம் பூத்துக் காயாகி கனிந்து விடும். ஆனால் பருத்திப் பூ மட்டுமே காய்த்து வெடித்துப் பஞ்சாகும். பஞ்சிலிருந்து ஆடையாகி நம் மானத்தைக் காக்கும். எனவே பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ” ஆகும்

100. “குயில்” என்ற இதழை நடத்தியவர்

(அ) சுரதா

(ஆ) வாணிதாசன்

(இ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பாரதிதாசன்

Previous page 1 2 3 4 5 6 7 8 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!