General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 11

41. “ஞானபோதினி” என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?

(அ) முடியரசன்

(ஆ) மு.சி.பூர்ணலிங்கம்

(இ) நாமக்கல்லார்

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

(ஆ) மு.சி.பூர்ணலிங்கம்

விளக்கம்:

“ஞானபோதினி” என்னும் இதழை மு.சி.பூர்ணலிங்கமும் அவரது நண்பரான பரிதிமாற்கலைஞரும் இணைந்து 1897-ஆம் ஆண்டு துவங்கினார். 1904 வரை இந்த இதழ் வெளிவந்தது

42. பரிதிமாற்கலைஞர் பிறந்த ஆண்டு

(அ) 1860

(ஆ) 1870

(இ) 1880

(ஈ) 1890

விடை மற்றும் விளக்கம்

(ஆ) 1870

விளக்கம்:

பரிதிமாற்கலைஞர், மதுரையை அடுத்த விளாச்சேரி என்ற ஊரில் 1870-ஆம் ஆண்டு ஜீலைத் திங்கள் 6-ஆம் நாள் கோவிந்த சிவனார்-இலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்

43. காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்

(அ) சுரதா

(ஆ) கண்ணதாசன்

(இ) முடியரசன்

(ஈ) நா.காமராசன்

விடை மற்றும் விளக்கம்

(இ) முடியரசன்

விளக்கம்:

காரைக்குடியில் உள்ள மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் கவிஞர் முடியரசன் ஆவார். அவரது இயற்பெயர் துரைராசு. “பூங்கொடி” என்னும் காவியத்திற்காக 1966-இல் தமிழக அரசின் பரிசைப் பெற்றவர். இவரது காலம் 1920-1988.

44. வள்ளலார் பதிப்பித்த நூல்

(அ) ஜீவகாருண்ய ஒழுக்கம்

(ஆ) சின்மய தீபிகை

(இ) இந்திர தேசம்

(ஈ) வீரசோழியம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சின்மய தீபிகை

விளக்கம்:

வள்ளலார் பதிப்பித்த நூல்கள்: சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம், தொண்டைமண்டல சதகம்.

45. கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்

(அ) ஒளிப்பறவை

(ஆ) சிரித்த முத்துக்கள்

(இ) ஒரு கிராமத்து நதி

(ஈ) நிலவுப் பூ

விடை மற்றும் விளக்கம்

(இ) ஒரு கிராமத்து நதி

விளக்கம்:

கவிஞர் சிற்பியின் “ஒரு கிராமத்து நதி” என்ற நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது 2002-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

46. அகழாய்வில் “முதுமக்கள் தாழிகள்” கண்டுபிடிக்கப்பட்ட ஊர்

(அ) தச்சநல்லூர்

(ஆ) ஆதிச்சநல்லூர்

(இ) பெரவல்லூர்

(ஈ) பெரணமல்லூர்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஆதிச்சநல்லூர்

விளக்கம்:

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

47. பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர்

(அ) முடியரசன்

(ஆ) வாணிதாசன்

(இ) சுரதா

(ஈ) மோகனரங்கன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வாணிதாசன்

விளக்கம்:

கவிஞர் வாணிதாசன், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர். பாவேந்தர் விருது பெற்றவர். தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், பாவலரேறு என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டவர்.

48. “விடிவெள்ளி” என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்

(அ) ஈரோடு தமிழன்பன்

(ஆ) மு.மேத்தா

(இ) சாலை. இளந்திரையன்

(ஈ) சுரதா

விடை மற்றும் விளக்கம்

(அ) ஈரோடு தமிழன்பன்

விளக்கம்:

ஈரோடு தமிழன்பன்:

இயற்பெயர்-ஜெகதீசன்.

பெற்றோர்-நடராஜன்-வள்ளியம்மாள்.

ஊர்-சென்னிமலை (கோவை மாவட்டம்).

புனைப்பெயர்-விடிவெள்ளி.

49. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்

(அ) துறைமுகம்

(ஆ) சுவரும் சுண்ணாம்பும்

(இ) தேன்மழை

(ஈ) இது எங்கள கிழக்கு

விடை மற்றும் விளக்கம்

(இ) தேன்மழை

விளக்கம்:

கவிஞர் சுரதா:

இயற்பெயர்-தி.இராசகோபாலன்.

சிறப்புப்பெயர்-உவமைக் கவிஞர்.

பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே “சுரதா” ஆயிற்று. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூலுக்கானப் பரிசை இவரின் “தேன்மழை” என்ற நூல் பெற்றது. இந்நூல் “இயற்கையெழில்” முதலாக “ஆராய்ச்சி” ஈறாக 16 பகுதிகளாக அமைந்துள்ளது

50. எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு

– எனக் கூறியவர்

(அ) பாவாணர்

(ஆ) காந்தி

(இ) தெ.பொ.மீ

(ஈ) அயோத்திதாசப் பண்டிதர்

விடை மற்றும் விளக்கம்

(அ) பாவாணர்

விளக்கம்:

“மொழி ஞாயிறு” என்றழைக்கப்பட்டவர் தேவநேயப் பாவாணர். இவரது காலம் 07.02.1902 முதல் 15.01.1981 வரை ஆகும். ஒருமுறை தாம் பணியாற்றிய கல்வி நிறுவனத்தில் அவருக்கு மனவேறுபாடு ஏற்பட்டதும் “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்று மன உறுதியுடன் கூறி வெளியேறினார்

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!