General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 5

21. சந்திப்பிழையில்லாத தொடரைக் கண்டறிக

(அ) கைதொழில், ஒன்றைக் கற்றுக்கொள்

(ஆ) கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

(இ) கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

(ஈ) கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

22. இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டுக:

(அ) அம்பி

(ஆ) பஃறி

(இ) திமில்

(ஈ) புணரி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) புணரி

புணரி-கடல். அம்பி, பஃறி, திமில் – கலம்(கப்பல்).

23. எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?

(அ) சிங்கப்பூர், மொரிசியசு

(ஆ) இலங்கை, மலேசியா

(இ) அமெரிக்கா, கனடா

(ஈ) தென் அமெரிக்கா, வட அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சிங்கப்பூர், மொரிசியசு

தமிழர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் உள்ளாட்சி மன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ளனர். சிங்கப்பூர், மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும் தோந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

24. பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி:

(அ) தேய்ந்து x வளர்ந்து

(ஆ) குழப்பம் x தெளிவு

(இ) நண்பர் x செறுநர்

(ஈ) கரத்தல் x மறைத்தல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கரத்தல் x மறைத்தல்

கரத்தல் என்றால் “மறைத்தல்” என்பது பொருளாகும். எனவே அது எதிர்ச்சொல் அல்ல.

25. “அகராதி” என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?

(அ) சதுரகராதி

(ஆ) திருமந்திரம்

(இ) திருவருட்பா

(ஈ) திருக்குறள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) திருமந்திரம்

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது. தமிழில் தோன்றிய முதல் அகராதி நூல் வீரமாமுனிவர் இயற்றிய “சதுரகராதி” ஆகும்.

26. கீழ்க்காணும் “வல்லினம் மிகா இடம்” குறித்த இலக்கணக் கூற்றில் பிழையான கூற்று எது?

(அ) வினைத்தொகையில் வல்லினம் மிகாது

(ஆ) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

(இ) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

(ஈ) நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது

நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

(எ.கா): பள்ளிக்கு+சென்றான்-பள்ளிக்குச்சென்றான்.

கடைக்கு+போனாள்-கடைக்குப்போனாள்

27. கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார்?

(அ) பெருங்கடுங்கோ

(ஆ) கபிலர்

(இ) நல்லந்துவனார்

(ஈ) நல்லுருத்திரன்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) நல்லந்துவனார்

கலித்தொகை

திணை பாடியவர்

குறிஞ்சி கபிலர்

முல்லை சோழன் நல்லுருத்திரன்

மருதம் மருதன் இளநாகனார்

நெய்தல் நல்லந்துவனார்

பாலை பெருங்கடுங்கோ

28. பொருத்துக:

ஊர் சிறப்புப்பெயர்

(அ) மதுரை – 1. திருவடிசூலம்

(ஆ) திருநெல்வேலி – 2. கடம்பவனம்

(இ) சிதம்பரம் – 3. வேணுவனம்

(ஈ) திருவிடைச்சுரம் – 4. தில்லைவனம்

அ ஆ இ ஈ

(அ) 1 3 2 4

(ஆ) 2 3 1 4

(இ) 2 3 4 1

(ஈ) 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 2 3 4 1

29. “கா” எனும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?

(அ) சோலை

(ஆ) ஆறு

(இ) மலை

(ஈ) காடு

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) சோலை

ஓரெழுத்து ஒரு மொழியில் “கா” என்றால் “சோலை” என்பது பொருளாகும்.

30. கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்

(அ) ஆரண்ய காண்டம்

(ஆ) சுந்தர காண்டம்

(இ) கிட்கிந்தா காண்டம்

(ஈ) யுத்த காண்டம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) சுந்தர காண்டம்

கம்பராமாயணம்:

1.பாலகாண்டம். 2.அயோத்தியா காண்டம். 3.ஆரண்ய காண்டம். 4.கிட்கிந்தா காண்டம். 5.சுந்தர காண்டம். 6.யுத்த காண்டம்

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!