General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 5

81. “பள்ளி வேலை நாட்களை நூற்றெண்பதிலிருந்து

இரு நூறாக உயர்தியவர்” யார்?

(அ) காமராசர்

(ஆ) அண்ணாதுரை

(இ) எம்.ஜி.இராமச்சந்திரன்

(ஈ) ராஜாஜி

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) காமராசர்

82. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக:

(அ) திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது

(ஆ) திரைபடம் மக்களை தன்பால் ஈர்க்கவல்லது.

(இ) கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

(ஈ) செய்திபடங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டு களிக்கலாம்.

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது

83. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

(அ) பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் மாணவர்கள் அங்கத்தினர்

(ஆ) தேர்வு நேரத்தில் அந்நியர் யாரும் நுழையக் கூடாது.

(இ) அலுவலகத்தில் உத்தரவு பெற்று உள்ளே வர வேண்டும்

(ஈ) அலுவலகத்தில் கையூட்டு வாங்கக் சுடாது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) அலுவலகத்தில் கையூட்டு வாங்கக் சுடாது

84. மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?

(அ) மயில் கூவியது; குயில் குழறியது

(ஆ) குயில் கூவியது; மயில் முழங்கியது

(இ) குயில் கத்தியது; மயில் அலறியது

(ஈ) குயில் கூவியது மயில் அகவியது

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) குயில் கூவியது மயில் அகவியது

85. “அயர்ந்தவன்” இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க:

(அ) அயர்க

(ஆ) அயர்

(இ) அயர்ந்து

(ஈ) அயர்ந்த

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) அயர்

அயர்-வேர்ச்சொல்

அயர்க-வியங்கோள் வினைமுற்று

அயர்ந்து-வினையெச்சம்

அயர்ந்த-பெயரெச்சம்

86. பொருத்துக:

பட்டியல் I – பட்டியல் II

(அ) ஊண் – 1.மகிழ்வு

(ஆ) ஊன் – 2.சனி

(இ) கலி – 3. உணவு

(ஈ) களி – 4. இறைச்சி

அ ஆ இ ஈ

(அ) 4 3 1 2

(ஆ) 3 4 1 2

(இ) 3 4 2 1

(ஈ) 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 3 4 2 1

87. மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டுபிடி

(அ) காட்டில் மயில் அகவும் குயில் பேசும்

(ஆ) காட்டில் புலி உறுமும் சிங்கம் முழங்கும்

(இ) காட்டில் யானை கத்தும் நரி ஊளையிடும்

(ஈ) காட்டில் கூகை கூவும் ஆந்தை அலறும்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) காட்டில் புலி உறுமும் சிங்கம் முழங்கும்

88. “DUBBING” என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

(அ) ஒளிச்சேர்க்கை

(ஆ) ஒளி விலகல்

(இ) ஒலிச்சேர்க்கை

(ஈ) ஒலி மாற்றம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) ஒலிச்சேர்க்கை

89. “உரைநடை எழுதுவது தனது தொழில்” என்ற வகையில் உழைத்தவர்

(அ) மு.வரதராசனார்

(ஆ) ரா.பி.சேதுப்பிள்ளை

(இ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

(ஈ) கண்ணதாசன்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) திரு.வி.கல்யாணசுந்தரனார்

90. இவற்றில் எது திருவள்ளுவருக்கு வழங்காத பெயர்?

(அ) மாதானுபங்கி

(ஆ) பெருநாவலர்

(இ) தேவர்

(ஈ) காளிங்கர்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) காளிங்கர்

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!