General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 5

51. பொருத்துக:

அ. கஃஃசு – 1.இன்னிசையளபெடை

ஆ. உழா அர் – 2.ஒற்றளபெடை

இ. உண்பதூஉம் – 3.சொல்லிசையளபெடை

ஈ. உரனசைஇ – 4.செய்யுளிசைளபெடை

அ ஆ இ ஈ

(அ) 2 1 3 4

(ஆ) 2 4 1 3

(இ) 3 1 4 2

(ஈ) 3 4 2 1

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) 2 4 1 3

கஃஃசு-ஒற்றளபெடை.

உழா அர்-செய்யுளிசை அளபெடை.

உண்பதூஉம்-இன்னிசையளபெடை.

உரனசைஇ-சொல்லிசை அளபெடை.

ஓற்றளபெடை-ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் மற்றும் ஃ ஆகிய 11 எழுத்துகளும் மிக்கு ஒலிப்பது ஆகும்.

செய்யுளிசை அளபெடை:ஈரசை சீர்களாக இருக்கும். உழா/அர்.

இன்னிசை அளபெடை:மூன்று அசைகளைக் கொண்ட காய்ச்சீராக இருக்கும். உண்/பதூ/ உம்.

சொல்லிசை அளபெடை:பெரும்பாலும் “இ” என்ற எழுத்தில் முடிந்திருக்கும். உரனசைஇ.

52. எதிர்ச்சொல்:

“இடும்பை” என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சசொல்லைக் கண்டுபிடி.

(அ) துன்பம்

(ஆ) இன்பம்

(இ) கோபம்

(ஈ) பொறுமை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இன்பம்

‘இடும்பை’ என்றால் துன்பம் என்பது பொருளாகும். எனவே “இன்பம்” என்பது அதன் எதிர்ச்சொல்லாகும்.

53. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:

வாழை,வாளை,வாலை

(அ) மரம்,மீன்,இளம்பெண்

(ஆ) விலங்கு,மரம்,பூப்பருவம்

(இ) செடி,விலங்கு,மரம்

(ஈ) பூ,செடி,விலங்கு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) மரம்,மீன்,இளம்பெண்

54. பிழையற்ற தொடர் எது?

(அ) கயிறுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

(ஆ) கயிற்றுக் கட்டிலில் தன்மை மறந்து உறங்கினான்

(இ) கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

(ஈ) கயிற்று கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) கயிற்றுக் கட்டிலில் தன்மை மறந்து உறங்கினான்

55. சரியானவற்றைத் தெரிந்து எழுதுக:

(அ) புதுமைப்பித்தன்-அக்கரை பச்சை

(ஆ) முல்லை சக்தி-வெள்ளிஇரவு

(இ) டாக்டர்.மு.வரதராசன்-கொலு பொம்மை

(ஈ) ஜீவா-பொன்னகரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஆ) முல்லை சக்தி-வெள்ளிஇரவு

56. முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீர வாழ்க்கையினராவர்.

– இவ்வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?

(அ) வியப்பு வாக்கியம்

(ஆ) வினா வாக்கியம

(இ) செய்தி வாக்கியம்

(ஈ) கட்டளை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) செய்தி வாக்கியம்

57. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்ந்து எழுதுக:

(அ) தம் அன்பினில் கும்பிடுதல் கூடும் கடன்

(ஆ) அன்பினில் கும்பிடுதல் தம் கடன் கூடும்

(இ) கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்

(ஈ) கூடும் தம் கடன் கும்பிடுதல் அன்பினில்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்

58. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே”

– எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?

(அ) அகநானூறு

(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை

(இ) நாலடியார்

(ஈ) நற்றிணை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை

“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்

வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு

முற்றோன்றி மூத்தகுடி” – புறப்பொருள் வெண்பாமாலை.

கரந்தைப்படலம் – 35-வது பாடல்

59. “தமிழ் மொழித் தூய்மை” இயக்கம் – தோன்றிய நூற்றாண்டு

(அ) 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

(ஆ) 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

(இ) 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

(ஈ) 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்

60. கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?

(அ) வேதியர் ஒழுக்கம்

(ஆ) சதுரகராதி

(இ) தொன்னூல் விளக்கம்

(ஈ) தமிழியக்கம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) தமிழியக்கம்

ஏனைய மூன்று நூல்களும் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டவை. “தமிழியக்கம்” என்ற நூல் பாவேந்தர் பாரதிதாசனால் எழுதப்பட்டது.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!