General TamilGeneral Tamil Previous Questions

Tnpsc General Tamil Previous Question Paper 5

31. இலக்கணக் குறிப்பறிதல்

“நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே”

கூற்று (A): செய்யுளிசையளபெடை

காரணம் (R): ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்.

(அ) (A) சரி (R) ஆனால் தவறு

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்குச் சரியான விளக்கம்

(இ) (A) தவறு ஆனால் (R) சரி

(ஈ) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) (A) சரி (R) ஆனால் தவறு

32. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:

“தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது”

(அ) செயப்பாட்டு வாக்கியம்

(ஆ) தொடர் வாக்கியம்

(இ) கலவை வாக்கியம்

(ஈ) செய்வினை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) செய்வினை வாக்கியம்

33. விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக:

(அ) தொண்டு

(ஆ) கூத்து

(இ) நசை

(ஈ) ஆட்டம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) ஆட்டம்

தொழிற்பெயர் விகுதிகள்: தல், அல், அம்,ஐ,கை,வை, கு,பு,உ,தி.சி,வி,உள்,காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்ற 19 விகுதிகளும் பிறவுமாம்.

ஆட்டம்-ஆடு+அம்

34. கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக கண்டறிதல்

“எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே”

(அ) உம்மைத் தொகை, வினைத்தொகை

(ஆ) முற்றும்மை, பண்புத்தொகை

(இ) இழிவு சிறப்பும்மை, உயர்வு சிறப்பும்மை

(ஈ) வினைத்தொகை, பண்புத்தொகை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) முற்றும்மை, பண்புத்தொகை

எத்திசையும்-முற்றும்மை.

பெருந்தமிழ்-பண்புத்தொகை (பெருமை+தமிழ்)

35.பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) கலை-வித்தை

(ஆ) கழை-மூங்கில்

(இ) களை-முகத்தின் ஒளி

(ஈ) காளை-மேகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) காளை-மேகம்

36. கீழ்க்காணும் சொற்களும் “யானை” என்னும் பொருள் குறிக்காத சொல்:

(இ) கரி

(ஆ) களிறு

(இ) வேழம்

(ஈ) கேழல்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) கேழல்

கேழல்-பன்றி

37. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு காண்க:

(அ) முற்றும்மை

(ஆ) உயர்வு சிறப்பும்மை

(இ) எண்ணும்மை

(ஈ) இழிவு சிறப்பும்மை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) இழிவு சிறப்பும்மை

38. கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது?

(அ) பூங்கொடி

(ஆ) இயேசு காவியம்

(இ) காவியப்பாவை

(ஈ) வீரகாவியம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) இயேசு காவியம்

இயேசு காவியம்-கண்ணதாசன்

39. “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்னும் புகழ்மிக்க நகரம் எது?

(அ) திருநள்ளாறு

(ஆ) திருநெல்வேலி

(இ) தஞ்சாவூர்

(ஈ) மதுரை

விடை மற்றும் விளக்கம்

விடை: (ஈ) மதுரை

40. ரூபாயத் – என்ற சொல்லின் பொருள்

(அ) பணம்

(ஆ) பாட்டு

(இ) மூன்றடிச்செய்யுள்

(ஈ) நான்கடிச் செய்யுள்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) நான்கடிச் செய்யுள்

“ரூபாயத்” என்றால் நான்கடிச் செய்யுள் என்பது பொருளாகும். இக்கவிதை நூலை எழுதியவர் பாரசீகத்தைச் சேர்ந்த உமர்கய்யாம் ஆவார். தமிழில் இக்கவிதை நூலை கவிமணி தேசிகவிநாயகனார் மொழிபெயர்த்துள்ளார்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!