General Tamil

General Tamil Model Question Paper 17

General Tamil Model Question Paper 17

General Tamil Model Question Paper 17: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. “குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்” – எவ்வகைத் தொடர்?

(அ) எதிர்மறைத் தொடர்

(ஆ) பிறவினைத் தொடர்

(இ) செய்வினைத் தொடர்

(ஈ) தன்வினைத்தொடர்

விடை மற்றும் விளக்கம்

(இ) செய்வினைத் தொடர்மை

2. “சிறுகுடி” – எத்திணைக்குரிய ஊர்?

(அ) குறிஞ்சி

(ஆ) மருதம்

(இ)நெய்தல்

(ஈ) முல்லை

விடை மற்றும் விளக்கம்

(அ) குறிஞ்சி

விளக்கம்:

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். ஓங்கியுயர்ந்த பகுதி மலை, மலையை விட சற்று உயரம் குறைந்த பகுதி கரடு அல்லது பாதை மலையின் அருகேயுள்ள ஊர்கள் நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை எனப்பட்டன. குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி, சிறுகுடி எனப்பட்டன. குன்றைவிட குறைந்த நிலப்பகுதியில் உள்ள ஊர்கள் சஞ்சீவிராயன் கரடு, பூம்பாறை, சிப்பிப்பாறை, மட்டப்பாறை, வால்பாறை, குட்டப்பாறை எனப்பட்டன. மலையைக் குறிக்கும் வடமொழிச் சொல் கிரி, சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்றும் மலையை ஓட்டிய நிலப்பகுதிகள் அழைக்கப்படுகின்றன.

3. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றில் மரந்தளிர்த் தற்று – இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?

(அ) இல்பொருள் உவமை அணி

(ஆ) உருவக அணி

(இ) வேற்றுமை அணி

(ஈ) பிறிதுமொழிதல் அணி

விடை மற்றும் விளக்கம்

(அ) இல்பொருள் உவமை அணி

விளக்கம்:

இல்பொருள் உவமையணி: இல்லாத பொருளை இருப்பது போல உவமையாக்கிக் கூறுவது “இல்பொருள் உவமையணி” ஆகும். அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த்தற்று – திருக்குறள் 78. மனதில் அன்பு இல்லாத மனிதர் வாழ்க்கை வளமற்ற பாலைவனத்தில், பட்டமரம் தளிர்த்தல் போன்றதாகும். இல்லாத பொருள்: பட்டமரம் தளிப்பது.

4. கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:

(அ) பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை

(ஆ) ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.

(இ) மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்

(ஈ) திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது

விடை மற்றும் விளக்கம்

(இ) மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்

5. கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதது

(அ) வெண்தயிர்

(ஆ) சேவடி

(இ) செந்நெல்

(ஈ) சுடரொளி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) சுடரொளி

விளக்கம்:

“சுடரொளி”- வினைத்தொகை

6. “இன்னாச்சொல்” என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி:

(அ) இனியசொல்

(ஆ) இனிமையற்ற சொல்

(இ) இழிவான சொல்

(ஈ) விரிவான சொல்

விடை மற்றும் விளக்கம்

(அ) இனியசொல்

7. வழுஉச் சொல்லற்ற தொடர் எது?

(அ) கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை

(ஆ) கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை

(இ) கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை

(ஈ) கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை

விடை மற்றும் விளக்கம்

(இ) கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை

8. செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது

(அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

(ஆ) அளைமறி பாப்புப் பொருள்கோள்

(இ) மொழி மாற்றுப் பொருள்கோள்

(ஈ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்

விளக்கம்:

செய்யுளின் அனைத்து அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறிமாற்றுப் பொருள்கோளாகும். எ.கா: “ஆலத்து மேல குவளை குளத்துள வாலி னெடிய குரங்கு” “ஆலத்து மேல வாலினெடிய குரங்கு” எனவும் “குவளை குளத்து உள” எனவும் பொருள் கொள்ள வேண்டும்!

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

9. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

(அ) கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்.

(ஆ) நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது

(இ) கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்

(ஈ) மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்

விடை மற்றும் விளக்கம்

(இ) கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்

விளக்கம்:

பிறமொழிச் சொல் – தமிழ்ச்சொல்

உத்தரவு ஆணை

விஞ்ஞானம் அறிவியல்

அலங்காரம் ஒப்பனை

10. வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது

(அ) உள்ளுறை

(ஆ) உருவகம்

(இ) உவமை

(ஈ) வெளிப்படை

விடை மற்றும் விளக்கம்

(அ) உள்ளுறை

விளக்கம்:

வெளிப்படையாக சொல்லப்பட்ட உவமையைக் கொண்டு மறைந்திருக்கும் பொருளை உய்த்துணர்ந்து கொள்வது “உள்ளுறை உவமம்” ஆகும். எ.கா: “அம்பணத்து அன்ன யாமை ஏறிச் செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் யாணர் ஊர! நின்னினும் பாணன் பொய்யன் பல சூளினனே” – ஐங்குறுநூறு-43-வது பாடல். “ஆமை முதுகின் மேல் அதன் குஞ்சுகள் ஏறிப்பரண் மேல் தூங்குவது போல் தூங்கும் ஊரை உடையவன் என்று இப்பாடலில் தலைவன் விளிக்கப்படுகிறான். “தலைவன் பரத்தையன் மேல் கொண்ட நாட்டம்” என்ற செய்தி இதனால் உய்த்துணரப்படுகிறது”

1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!