General Tamil

General Tamil Model Question Paper 17

81. சித்தர் பாடலில் “கடம்” என்பதன் பொருள் யாது?

(அ) பாம்பு

(ஆ) இறுமாப்பு

(இ) உடம்பு

(ஈ) வேம்பு

விடை மற்றும் விளக்கம்

(இ) உடம்பு

விளக்கம்: “கள்ள வேடம் புனையாதே – பல கங்கையிலே உன்கடம் நனையாதே! கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக் கொண்டு பிரிந்து நீ கோள் முனையாதே! – கடுவெளிச் சித்தர். கடம் 🡪 உடம்பு. பொருள்: போலி வேடங்களைப் போடாதே! புண்ணிய ஆறுகளைத் தேடித்தேடிப் போய் முழுகாதே! யாருடைய பொருளையும் திருட நினைக்காதே! ஒருவனோடு நட்புகொண்டு பிறகு அவனைப் பிரிந்து, அவனைப் பற்றிப் பிறரிடம் கோள்மூட்டிப் பேசாதே!

82. பொருட்பாவில் பகுக்கப் பெறாத இயல்

(அ) பாயிரவியல்

(ஆ) அரசியல்

(இ) அங்கவியல்

(ஈ) ஒழிபியல்

விடை மற்றும் விளக்கம்

(அ) பாயிரவியல்

விளக்கம்: பாயிரவியல்-அறத்துப்பால்

83. கம்பராமாயணத்தில் அமைந்திராத காண்டம்

(அ) அயோத்தியா காண்டம்

(ஆ) மதுரைக்காண்டம்

(இ) ஆரணிய காண்டம்

(ஈ) யுத்த காண்டம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) மதுரைக்காண்டம்

விளக்கம்: மதுரைக்காண்டம்-சிலப்பதிகாரத்தின் பிரிவாகும்.

84. தமிழகத்தின் இருண்ட காலம் என அழைக்கப்படுவது

(அ) நாயக்கர் காலம்

(ஆ) களப்பிரர் காலம்

(இ) கற்காலம்

(ஈ) உலோகக் காலம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) களப்பிரர் காலம்

85. “பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” – எனும் குறளில் “கூகை” என்பதன் பொருள் யாது?

(அ) ஆட்டுக்கடா

(ஆ) கோட்டான்

(இ) முதலை

(ஈ) யானை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கோட்டான்

86. “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்” – என்னும் பழமொழியில் “அஷ்டபிரபந்தம்” என்பது எத்தனை நூல்களைக் குறிக்கிறது?

(அ) பத்து நூல்கள்

(ஆ) பதினெட்டு நூல்கள்

(இ) எட்டு நூல்கள்

(ஈ) நான்கு நூல்கள்

விடை மற்றும் விளக்கம்

(இ) எட்டு நூல்கள்

87. பொருத்துக:

அ. சிறுபஞ்சமூலம் – 1. கணிமேதாவியார்

ஆ. திருவிளையாடல் புராணம் – 2. முன்றுறை அரையனார்

இ. பழமொழி நானூறு – 3. பரஞ்சோதி முனிவர்

ஈ. ஏலாதி – 4. காரியாசன்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 1 3 2 4

இ. 4 2 3 1

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

ஈ. 4 3 2 1

88. பொருத்துக

ஊர் சிறப்புப்பெயர்

அ. சிதம்பரம் – 1. திருமறைக்காடு

ஆ. வேதாரண்யம் – 2. திருச்சிற்றம்பலம்

இ. விருத்தாசலம் – 3. திருப்பாதிரிப்புலியூர்

ஈ. கடலூர் – 4. திருமுதுகுன்றம்

அ ஆ இ ஈ

அ. 4 2 1 3

ஆ. 3 1 2 4

இ. 2 3 1 4

ஈ. 2 1 4 3

விடை மற்றும் விளக்கம்

ஈ. 2 1 4 3

89. தன் கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று பொறிக்க வேண்டுமென்று விரும்பியவர் யார்?

(அ) கால்டுவெல்

(ஆ) வீரமாமுனிவர்

(இ) ஜி.யூ.போப்

(ஈ) சீகன் பால்கு

விடை மற்றும் விளக்கம்

(இ) ஜி.யூ.போப்

90. ‘திருவேங்கடத்தந்தாதி” என்ற நூலின் ஆசிரியர் யார்?

(அ) குமரகுருபரர்

(ஆ) ஒட்டக்கூத்தர்

(இ) கம்பர்

(ஈ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!