General Tamil

General Tamil Model Question Paper 17

61. அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் – இக்குறட்பாவில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக்குறிப்பு தருக:

(அ) உரிச்சொற்றொடர்

(ஆ) வினையெச்சம்

(இ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

(ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

62. கீழ்க்காணும் தொடரில் வழுஉத் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி.

(அ) இடப்பக்கச் சுவறில் எழுதாதே

(ஆ) இடது பக்கச் சுவரில் எழுதாதே

(இ) இடப்பக்கச் சுவற்றில் எழுதாதே

(ஈ) இடப்பக்கச் சுவரில் எழுதாதே

விடை மற்றும் விளக்கம்

(ஈ) இடப்பக்கச் சுவரில் எழுதாதே

63. கீழ்க்காணும் அடிக்கோடிட்ட சொற்களுள் முதனிமை திரிந்த தொழிற்பெயரைக் காண்க:

(அ) அறிவறிந்த மக்கட்பேறு

(ஆ) இராமனுக்கு அடி விழுந்தது

(இ) முருகன் பரிசு பெற்றான்

(ஈ) மாதவி ஆடற்கலையில் சிறந்தவள்

விடை மற்றும் விளக்கம்

(அ) அறிவறிந்த மக்கட்பேறு

விளக்கம்: “பெறு” என்ற சொல் முதனிலை திரிந்து “பேறு” என்றானது

64. “வந்தான்”, நடந்தான்” – வேர்ச்சொல்லைச் சுட்டுக:

(அ) வந்து, நடந்து

(ஆ) வந்த, நடந்த

(இ) வா, நட

(ஈ) வந்தான், நடந்தான்

விடை மற்றும் விளக்கம்

(இ) வா, நட

விளக்கம்: வா, நட – வேர்ச்சொற்கள். வந்து, நடந்து-வினையெச்ச சொற்கள். வந்த, நடந்த-பெயரெச்சச் சொற்கள். வந்தான், நடந்தான்-வினைமுற்றுப்பெயர்கள்.

65. பின்வரும் சொற்களில் ஈறுபோதல் விதிப்படியும் இனமிகல் விதிப்படியும் புணரும் பண்புச் சொல் எது?

(அ) நிலங்கடந்தான்

(ஆ) வாழைப்பழம்

(இ) கருங்குயில்

(ஈ) பெரியன்

விடை மற்றும் விளக்கம்

(இ) கருங்குயில்

விளக்கம்: கருங்குயில்- கருமை + குயில் (பண்புப்பெயர் புணர்ச்சி) ஈறுபோதல் விதிப்படி “மை” விகுதி கெட்டு “கரு+குயில்” என்றானது. இனம் மிகல் விதிப்படி (கு🡪க்+உ)

66. “விரல்கள் பத்தும் மூலதனம்” என்று கூறியவர்

(அ) திருமூலர்

(ஆ) தொல்காப்பியர்

(இ) தாராபாரதி

(ஈ) மருதகாசி

விடை மற்றும் விளக்கம்

(இ) தாராபாரதி

விளக்கம்: “வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்! கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் – உன் கைகளில் பூமி சுழன்று வரும்!” மேற்கண்ட பாடலடிகள் கவிஞர் தாராபாரதியின் “இது எங்கள் கிழக்கு” என்னும் கவிதைத் தொகுதியில் அமைந்துள்ளது.

67. தென்னிந்தியாவின் ஏதென்சு நகர் என்றழைக்கப் பெறுவது எது?

(அ) மதுரை

(ஆ) நாகர்கோவில்

(இ) இராமநாதபுரம்

(ஈ) திருச்சி

விடை மற்றும் விளக்கம்

(அ) மதுரை

விளக்கம்: பழம்பெரும் தமிழர் தம் நாகரிகத் தொட்டிலாக மதுரை திகழந்ததால் தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எனப்படுகிறது.

68. கீழ்க்காணும் நூல்களில் எட்டுத்தொகையில் அடங்காத நூல் எது?

(அ) அகநானூறு

(ஆ) கலித்தொகை

(இ) ஐங்குநுறூறு

(ஈ) நெடுநல்வாடை

விடை மற்றும் விளக்கம்

(ஈ) நெடுநல்வாடை

விளக்கம்: நெடுநல்வாடை-பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இந்நூலை இயற்றியவர் நக்கீரர் ஆவார்.

69. தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?

(அ) தேசியக்கொடி

(ஆ) கதரின் வெற்றி

(இ) தேச பக்தி

(ஈ) கதரின் இரகசியம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கதரின் வெற்றி

விளக்கம்: தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் “கதரின் வெற்றி” ஆகும். இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலான நாடகங்கள் அரங்கேறின.

70. நானிலத்திற்குரிய ஊரின் பெயர்களைப் பொருத்துக:

அ. குறிஞ்சி – 1. ஆலங்காடு

ஆ. முல்லை – 2. கோடியக்கரை

இ. மருதம் – 3. ஆனைமலை

ஈ. நெய்தல் – 4. புளியஞ்சோலை

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 2 1 3 4

(இ) 3 2 1 4

(ஈ) 1 3 4 2

விடை மற்றும் விளக்கம்

(அ) 3 1 4 2

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!