General Tamil

General Tamil Model Question Paper 17

91. கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?

அ. முத்துராமலிங்கர் விருப்பத்துக்கு இணங்க மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்தார்.

ஆ. நடுவண் அரசு முத்துராமலிங்கரது அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது.

இ. ஆங்கில அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் “தேசியம் காத்த செம்மல்” எனும் விருதளித்தது.

ஈ. முத்துராமலிங்கர் தம் சொத்துகள் முழுவதையும் பதினேழு பாகங்களாகப்பிரித்து, திருக்கோவில்களுக்கு எழுதி வைத்தார்.

(அ) அ, இ சரியானவை

(ஆ) இ, ஈ சரியானவை

(இ) ஆ, ஈ சரியானவை

(ஈ) அ, ஆ சரியானவை

விடை மற்றும் விளக்கம்

(ஈ) அ, ஆ சரியானவை

விளக்கம்: ஆங்கில அரசு வட இந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கத் தேவருக்கும் “வாய்ப்பூட்டும் சட்டம்” போட்டது. முத்துராமலிங்கத்தேவர், 32 சிற்றூர்களில் தனக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

/

92. “தமிழுக்குக் கதி” என்று அழைக்கப்பட்ட இரண்டு நூல்கள்

(அ) சங்க இலக்கியம், மகாபாரதம்

(ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை

(இ) கம்பராமாயணம், திருக்குறள்

(ஈ) தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம்

விடை மற்றும் விளக்கம்

(இ) கம்பராமாயணம், திருக்குறள்

விளக்கம்: தமிழுக்குக் கதி எனப்படுபவை கம்பராமாயணமும் திருக்குறளும் என்று கூறியவர் செல்வ கேசவராய முதலியார்.

/

93. “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – கூறியவர்

(அ) மகாகவி பாரதியார்

(ஆ) பேரறிஞர் அண்ணாதுரை

(இ) தமிழ்த்தென்றல் திரு.கி.க

(ஈ) செயங்கொண்டார்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) பேரறிஞர் அண்ணாதுரை

/

94. பொருத்துக:

(அ) மணிமேகலை – 1. உமறுப்புலவர்

(ஆ) தேவாரம் – 2. கிருஷ்ணப்பிள்ளை

(இ) சீறாப்புராணம் – 3. சீத்தலைச்சாத்தனார்

(ஈ) இரட்சணிய யாத்திரிகம் – 4. சுந்தரர்

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 1 2 4 3

இ. 3 4 1 2

ஈ. 1 4 2 3

விடை மற்றும் விளக்கம்

இ. 3 4 1 2

/

95. “திராவிட சாஸ்திரி” என அழைக்கப்பட்டவர்

(அ) பரிதிமாற் கலைஞர்

(ஆ) மறைமலை அடிகள்

(இ) சி.வை.தாமோதரனார்

(ஈ) உ.வே.சாமிநாதர்

விடை மற்றும் விளக்கம்

(அ) பரிதிமாற் கலைஞர்

விளக்கம்: பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப்புலமையையும் கவிபாடும் திறமையையும் கண்டு யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் “திராவிட சாஸ்திரி” என்ற பட்டத்தை வழங்கினார்.

/

96. பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

அ. சாதியும், நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மிகத்துக்கும் இல்லை என்றவர் – 1. கடுவெளிச் சித்தர்

ஆ. அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே புதியனவற்றை ஏற்றல் வேண்டும் என்றவர் – 2. ஜவஹர்லால் நேரு

இ. பிறர் தாழும்படிக்கு நீ தாழ்வைப் பண்ணாதே என்றவர் – 3. பசும்பொன் முத்துராமலிங்கர்

ஈ. ஆயிரம் முகங்கள் கொண்ட வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது என்றவர் – 4. தந்தை பெரியார்

அ ஆ இ ஈ

அ. 1 2 4 3

ஆ. 3 4 1 2

இ. 2 3 1 4

ஈ. 4 2 3 1

விடை மற்றும் விளக்கம்

ஆ. 3 4 1 2

/

97. “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” என்று பாடியவர் யார்?

(அ) ஒளவையார்

(ஆ) கம்பர்

(இ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) கம்பர்

/

98. பொருத்துக:

அ. வினையே ஆடவர்க்குயிர் – 1. தாராபாரதி

ஆ. உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே – 2. தொல்காப்பியர்

இ. முந்நீர் வழக்கம் மகடூஉ உவோடில்லை – 3. குறுந்தொகை

ஈ. விரல்கள் பத்தும் மூலதனம் – 4. திருமூலர்

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 1 2 3 4

இ. 3 4 2 1

ஈ. 4 3 2 1

விடை மற்றும் விளக்கம்

இ. 3 4 2 1

/

99. பொருத்துக:

நூலாசிரியர் நூல்

அ. சி.சு.செல்லப்பா – 1. “அப்பாவின் சிநேகிதர்

ஆ. பி.எஸ்.இராமையா – 2. ‘வலம்புரிச் சங்கு’

இ. அசோகமித்திரன் – 3. “எழுத்து”

ஈ. நா.பார்த்தசாரதி – 4. “நட்சத்திரக் குழந்தைகள்”

அ ஆ இ ஈ

அ. 3 4 1 2

ஆ. 3 4 2 1

இ. 4 3 1 2

ஈ. 1 2 3 4

விடை மற்றும் விளக்கம்

அ. 3 4 1 2

/

100. “அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த “ இவ்வடிகளுக்குச் சொந்தக்காரர் யார்?

(அ) தாயுமானவர்

(ஆ) இராமலிங்கர்

(இ) திருமூலர்

(ஈ) மறைமலையடிகள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) மறைமலையடிகள்

/

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!