General Tamil

General Tamil Model Question Paper 17

51. “சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதைனை விளையாட்டு” – எனப் பெரியார் குறிப்பிடுவது

(அ) மணக்கொடை

(ஆ) கைம்மை ஒழிப்பு

(இ) மூடநம்பிக்கை

(ஈ) குழந்தைத் திருமணம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) குழந்தைத் திருமணம்

52. நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்

(அ) நாற்சீர்

(ஆ) முச்சீர்

(இ) ஐஞ்சீர்

(ஈ) அறுசீர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்: நேரிசை ஆசிரியப்பா ஆசிரியப்பாவின் இலக்கணங்கள் யாவும் அமைய, ஈற்றலடி முச்சீராயும் ஏனைய அடிகள் நாற்சீராய் அமைய “ஏ” என்னும் ஓசையில் முடியும். (எ.கா): “நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!” – ஒளவையார்

53. இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துகள்

(அ) உ, ஒ

(ஆ) இ, ஈ

(இ) அ, ஆ

(ஈ) ப, ம

விடை மற்றும் விளக்கம்

(அ) உ, ஒ

விளக்கம்: உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே – நன்னூல். உ ஊ ஒ ஓ ஒள ஆகிய எழுத்துகள் உதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் உண்டாகின்றன.

54. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: ஐயோ, முள் குத்திவிட்டதே!

(அ) வினா வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) உணர்ச்சி வாக்கியம்

(ஈ) செய்தி வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

(இ) உணர்ச்சி வாக்கியம்

55. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “சித்தன்னவாசல் ஓவியங்கள் அழகுமிக்கவை”

(அ) வினா வாக்கியம்

(ஆ) கட்டளை வாக்கியம்

(இ) உணர்ச்சி வாக்கியம்

(ஈ) செய்தி வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) செய்தி வாக்கியம்

56. கீழ்க்காணும் சொற்களுள் “நிலவு” என்னும் பொருள் குறிக்காத சொல்

(அ) திங்கள்

(ஆ) ஞாயிறு

(இ) இந்து

(ஈ) மதி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) ஞாயிறு

விளக்கம்: ஞாயிறு-சூரியன்

57. நெய்தல் திணைக்குரிய தெய்வம்

(அ) இந்திரன்

(ஆ) வருணன்

(இ) துர்க்கை

(ஈ) திருமால்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) வருணன்

விளக்கம்:

திணை தெய்வம்

குறிஞ்சி முருகன்

முல்லை திருமால்

மருதம் இந்திரன்

நெய்தல் வருணன்

பாலை துர்க்கை

58. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(அ) அவன் கவிஞன் அல்ல

(ஆ) அவன் கவிஞன் அன்று

(இ) அவன் கவிஞன் அல்லன்

(ஈ) அவன் கவிஞன் இல்லை

விடை மற்றும் விளக்கம்

(இ) அவன் கவிஞன் அல்லன்

விளக்கம்: அஃறிணை ஒருமை-அன்று. அஃறிணை பன்மை-அல்ல. உயர்திணை ஒருமை-அல்லன், அல்லள். உயர்திணை பன்மை-அல்லர்

59. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: என்னால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறப்பட்டது.

(அ) செய்வினை வாக்கியம்

(ஆ) செயப்பாட்டுவினை வாக்கியம்

(இ) தொடர் வாக்கியம்

(ஈ) கலவை வாக்கியம்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) செயப்பாட்டுவினை வாக்கியம்

60. கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் – இப்பாடலில் அடிக்கோடிட்டவைகளில் எவ்வகைத் தொடை நயம் இடம்பெற்றுள்ளது?

(அ) எதுகை

(ஆ) இயைபு

(இ) மோனை

(ஈ) தொடை

விடை மற்றும் விளக்கம்

(ஆ) இயைபு

விளக்கம்: இறுதிச் சீர்; ஒன்றி வருவது இயைபுத் தொடையாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!