General Tamil

General Tamil Model Question Paper 17

11. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க:

(அ) தமிழர்கள் அரபு நாட்டுடனும், யவன நாட்டுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

(ஆ) சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தார்

(இ) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.

(ஈ) இயங்குரப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றனர்

விடை மற்றும் விளக்கம்

(அ) தமிழர்கள் அரபு நாட்டுடனும், யவன நாட்டுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

விளக்கம்:

(ஆ) சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தனர்

(ஆ) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது

(ஈ) இயங்குரப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றனர்

12. “தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்

(அ) குமரகுருபரர்

(ஆ) சீத்தலைச் சாத்தனார்

(இ) சேக்கிழார்

(ஈ) பாரதிதாசன்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சீத்தலைச் சாத்தனார்

விளக்கம்:

“தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப்பெற்றவர் சீத்தலைச் சாத்தனார் ஆவார். மேலும் இவர் “சாத்தன் நன்னூற்புலவன்” என்றும் அழைக்கப்பெற்றார்.

13. சேக்கிழாரின் இயற்பெயர்

(அ) மீனாட்சி சுந்தரனார்

(ஆ) ஆனந்தரங்கம் பிள்ளை

(இ) அருண்மொழித் தேவர்

(ஈ) வாகீசர்

விடை மற்றும் விளக்கம்

(இ) அருண்மொழித் தேவர்

விளக்கம்:

சேக்கிழாரின் இயற்பெயர் “அருண்மொழ்த்தேவர்” என்பதாகும். சிவனடியார்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் பெரியபுராணத்தை இயற்றியமையால் “தொண்டர் சீர்பரவுவார்” என்றும் அழைக்கப்பட்டார்.

14. குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை

(அ) மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை

(ஆ) ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை

(இ) நான்கடிச் சிறுமை எட்டடிப்பெருமை

(ஈ) இரண்டடிச் சிறுமை பாடுபவன் மனக்கருத்து

விடை மற்றும் விளக்கம்

(இ) நான்கடிச் சிறுமை எட்டடிப்பெருமை

விளக்கம்:

குறுந்தொகை: இந்நூலின் பாடல்கள் நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. ஆனால் ஓன்பதடியில் உள்ள 307, 391 ஆகிய இரு பாடல்களும் இத்தொகையில் இடம் பெற்றுள்ளன.

15. “சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது: சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது” என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்

(அ) மு.மேத்தா

(ஆ) சாலை.இளந்திரையன்

(இ) அப்துல் ரகுமான்

(ஈ) ந.பிச்சமூர்த்தி

விடை மற்றும் விளக்கம்

(ஆ) சாலை.இளந்திரையன்

16. கீழ்க்காணும் சொற்களுள் “சூரியன்” எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக:

(அ) ஞாயிறு

(ஆ) பகலவன்

(இ) பிரமன்

(ஈ) ஆதவன்

விடை மற்றும் விளக்கம்

(இ) பிரமன்

17. திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப் பெயரைக் கண்டறிக:

(அ) ஆதி காவியம்

(ஆ) பொய்யாமொழி

(இ) உத்தரவேதம்

(ஈ) தமிழ்மறை

விடை மற்றும் விளக்கம்

(அ) ஆதி காவியம்

விளக்கம்:

திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள்: பொய்யாமொழி, உத்தரவேதம், தமிழ்மறை, வாயுறை வாழ்த்து, முப்பால், வள்ளுவப்பயன், தெய்வநூல், உலகப் பொதுமறை

18. பொருத்துக:

அ. அடவி – 1. மான்

ஆ. நவ்வி – 2. சிலுவை

இ. விசும்ப – 3. காடு

ஈ. குருசு – 4. வானம்

அ ஆ இ ஈ

(அ) 4 2 1 3

(ஆ) 3 1 4 2

(இ) 3 4 2 1

(ஈ) 2 3 1 4

விடை மற்றும் விளக்கம்

(ஆ) 3 1 4 2

19. “தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து” என்பது உன் நெறியாக இருக்கட்டும். – இக்கடித வரிகள் யாருடையது?

(அ) நேரு

(ஆ) காந்தி

(இ) மு.வ.

(ஈ) அண்ணா

விடை மற்றும் விளக்கம்

(இ) மு.வ.

20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

(அ) காலதர்

(ஆ) சாளரம்

(இ) சன்னல்

(ஈ) கொட்டில்கள்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) கொட்டில்கள்

விளக்கம்:

காலதர், சாளரம், சன்னல் ஆகிய மூன்றும் ஒரே பொருளைக் குறிக்கின்றன.

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!